<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-9687302</id><updated>2012-02-18T15:31:35.731+08:00</updated><category term='நூல்கள்'/><category term='எழுத்தாளர்'/><category term='ஜெயந்திசங்கர்'/><category term='புனைவுகள்'/><category term='சிறுகதைகள்'/><category term='நாவல்கள்'/><title type='text'>வல்லமை தாராயோ</title><subtitle type='html'>(2007க்கு முன்பாக அச்சூடகங்களில் பிரசுரமான எனது படைப்புகளில் மிகச் சிலவற்றை மட்டும் இப்பக்கத்தில் வாசிக்க முடியும். வலைப்பதிவுக்கென்றே நான் எழுதியவை மிகக் குறைவு தான். march 28, 2010 அன்று இந்த வலைப்பக்கத்தின் பெயரை மாற்ற விரும்பினேன். அதன் பிறகு, 4-5 ஆண்டுகளாக இணையவெளியில் பரவலாக அறியப்பட்டு வந்திருக்கும் பெயரை மாற்ற வேண்டாம் என்று அப்படியே விட்டுவிட்டேன். தொடர்புக்கு - jeyanthisankar@gmail.com)</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://jeyanthisankar.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://jeyanthisankar.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ஜெயந்தி சங்கர்         (Jayanthi Sankar)</name><uri>http://www.blogger.com/profile/04533483437106248358</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>62</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9687302.post-6301114301740372080</id><published>2007-04-20T08:32:00.057+08:00</published><updated>2012-02-18T15:31:35.743+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயந்திசங்கர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எழுத்தாளர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாவல்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவுகள்'/><title type='text'>குறிப்புகள்</title><content type='html'>சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் &lt;a href="http://www.geotamil.com/pathivukal/interview_with_jayanthi_shankar.htm"&gt;ஜெயந்தி சங்கரது&lt;/a&gt; ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D"&gt;தனது &lt;/a&gt;வாழ்விடத்தின் நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றை சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே &lt;a href="http://kafafa.com/jeyanthisankar/?ref=1"&gt;இவரது&lt;/a&gt; எழுத்தின் வெற்றி.  சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும்&lt;a href="http://sankari01sg.blogspot.com/"&gt; இவர் &lt;/a&gt;உலகளாவிய பரந்துபட்ட வாசகர்களைப் பெற்றுள்ளார். 6 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், 1 குறுநாவல் தொகுப்பு உள்ளிட்ட 20க்கும் அதிகமான நூல்கள் எழுதியுள்ளார். 2008 ஏப்ரல் 30 அன்று நடந்தேறிய நிகழ்வில் உரையாற்றிய மலேசிய மூத்த தமிழ் எழுத்தாளர் சை. பீர் முகமது அவர்கள் இவர் எழுதிய 'ஈரம்' சிறுகதைச் சிலாகித்துப் பேசிவிட்டு, 'இருபத்தைந்தாண்டுகளில் எழுதப்படாத ஆகச் சிறந்த தமிழ்ச் சிறுகதை' என்று பாராட்டினார். 'நியாயங்கள் பொதுவானவை' என்ற சிறுகதைத் தொகுப்புக்கு திருப்பூர் அரிமா சங்கத்தினர் ஏற்பாடு செய்த 'அரிமா சக்தி விருது 2006' சிறப்புப் பரிசு, 'மிதந்திடும் சுயபிரதிமைகள்' நூலுக்கு 'நல்லி - திசையெட்டும் (மொழியாக்க) இலக்கிய விருது 2009', 'மனப்பிரிகை' நாவலுக்கு - அரிமா சக்தி 2008 (சிறப்பு) விருது உள்ளிட்ட பல பரிசுகள் மற்றும் விருதுகள் வாங்கியுள்ளார். கனடாவின் – தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ’இயல் விரு’தின் நடுவர் குழுவில் இடம் பெற்றுள்ளார். சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றம் அக்டோபர் 31st 2009ல் ‘Under Covers’ என்ற கருப்பொருளில் கொண்டாடிய சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் ‘Scars so similar and yet so different’ என்ற தலைப்பிலும் 4-01-09ல் இலக்கிய வட்டத்தில் ‘நவீன தமிழ்ப் புனைவுகளில் பேசுபொருள்’ என்ற தலைப்பிலும் உரையாற்றியுள்ளார். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினால் அழைக்கப்பட்டபோது 9th-10th அக்டோபர் 2010ல் சிறுகதைக் கருத்தரங்கில் ‘அயலில் தமிழிலக்கியம்’ என்ற தலைப்பில் இவர் ஆற்றிய உரை நல்ல வரவேற்பைப்பெற்றது. 'புதிய அவதாரம்' சிறுகதை இலக்கியச் சிந்தனை அமைப்பினால் 2008 டிசம்பர் மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்வாகியுள்ளது. சிறுகதைத் தொகுப்புகளான 'பின் சீட்' 'சிங்கப்பூர் இலக்கிய விருது - 2008'க்கும் ‘திரைகடலோடி’ சிங்கப்பூர் இலக்கிய விருது 2010க்கும் தேர்வாகின.                 &lt;i&gt;jeyanthisankar@gmail.com&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை வெளியாகியுள்ள &lt;a href="http://www.viruba.com/atotalbooks.aspx?id=210"&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(0, 51, 0);"&gt;நூல்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுகதைத் தொகுதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;* நாலேகால் டாலர் - 2005 - மதி நிலையம்&lt;br /&gt;* பின் சீட் - 2006 - மதி நிலையம்&lt;br /&gt;* நியாயங்கள் பொதுவானவை - 2006 - மணிமேகலை பிரசுரம்&lt;br /&gt;* மனுஷி - 2007 - மதி நிலையம்&lt;br /&gt;* திரைகடலோடி - 2008 - மதி நிலையம்&lt;br /&gt;* தூரத்தே தெரியும் வான்விளிம்பு - 2010 - சந்தியா பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;குறுநாவல்&lt;br /&gt;&lt;br /&gt;* முடிவிலும் ஒன்று தொடரலாம் - 2005 - சந்தியா பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;புதினம்&lt;br /&gt;&lt;br /&gt;* வாழ்ந்து பார்க்கலாம் வா - 2006 - சந்தியா பதிப்பகம்&lt;br /&gt;* நெய்தல் - 2007 - சந்தியா பதிப்பகம்&lt;br /&gt;* மனப்பிரிகை - 2008 - சந்தியா பதிப்பகம்&lt;br /&gt;* குவியம் - 2009 - சந்தியா பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரைத் தொகுதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;* ஏழாம் சுவை - 2005 - உயிர்மை பதிப்பகம்&lt;br /&gt;* பெருஞ்சுவருக்குப் பின்னே - சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும் - 2006 - உயிர்மை பதிப்பகம்&lt;br /&gt;* சிங்கப்பூர் வாங்க - விகடன் பிரசுரம் - 2006&lt;br /&gt;* ச்சிங் மிங் - 2009 - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்&lt;br /&gt;* கனவிலே ஒரு சிங்கம் - 2010 - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;மொழிபெயர்ப்புகள்&lt;br /&gt;&lt;br /&gt;* மிதந்திடும் சுயபிரதிமைகள் - சீனக் கவிதைகள் (ஆங்கிலத்தினூடாக) - 2007 - உயிர்மை பதிப்பகம்&lt;br /&gt;* சூரியனுக்கு சுப்ரபாதம் - சுயமுன்னேற்றக் கட்டுரைகள் - 2007  - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்&lt;br /&gt;* மீன் குளம் - சிறார் சீனக்கதைகள் (ஆங்கிலத்தினூடாக) 2008 - விவேக் எண்டர்பிரைஸ் (மதி நிலையம்)&lt;br /&gt;* என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி - சீனத்துச் சிறுகதைகள் - (ஆங்கிலத்தினூடாக)- 2011 - காலச்சுவடு&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை வ‌ர‌லாறு&lt;br /&gt;&lt;br /&gt;* இசையும் வாழ்க்கையும் - (காற்றினிலே வரும் கீதம் - எம். எஸ். சுப்புலட்சுமி + சங்கீத பிதாமகர் - செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யர் + நாத யோகி - மதுரை மணி ஐயர் + நாதப்பிரமம் - அரியக்குடி ராமானுஜ ஐங்கார்) - 2007 - சந்தியா பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இவற்றில் பெரும்பாலான நூல்கள் கிடைக்குமிடம் -&lt;br /&gt;&lt;br /&gt;நியூ புக் லேண்ட்ஸ் &lt;br /&gt;&lt;br /&gt;52c, basement,&lt;br /&gt;பனகல் பார்க் அருகில்,&lt;br /&gt;தி-நகர்,&lt;br /&gt;சென்னை- 600017&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Anthologies  -      1) வானவில் கூட்டம்  2) புதிய காளி 3) கனலும் எரிமலையும் 4) சுடும் நிலவு  5) பிரியத்தின் சிறகுகள் 6) வேறொரு மனவெளி 7) முகங்கள் 8)  இரவு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாடுகளில் பெற்ற பரிசுகள்/விருதுகள்/அங்கீகாரங்கள்&lt;br /&gt;&lt;br /&gt; 2009 கல்கி 28-12-08ல் பிரசுரமான சிறுகதை 'புதிய அவதாரம்' இலக்கியச் சிந்தனை அமைப்பினால் 2008 டிசம்பர் மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்வாகியுள்ளது.&lt;br /&gt; 2008 (ஏப்ரல் 30 அன்று சிங்கப்பூரில் நடந்தேறிய நிகழ்வில்) உரையாற்றிய மலேசிய மூத்த தமிழ் எழுத்தாளர் சை. பீர் முகமது 'ஈரம்' சிறுகதையைச் சிலாகித்துப் பேசிவிட்டு, 'இருபத்தைந்தாண்டுகளில் எழுதப்படாத ஆகச் சிறந்த தமிழ்ச் சிறுகதை' என்றார்.&lt;br /&gt; 2008 - கனடாவின் – தமிழ் இலக்கியத் தோட்டத்தின்  'இயல் விருது’ நடுவர் குழுவில் இடம் பெற்றமை&lt;br /&gt; 2009 'மனப்பிரிகை' நாவலுக்கு - அரிமா சக்தி 2008 விருது அளிக்கப்பட்டது.&lt;br /&gt; 2009 'மிதந்திடும் சுயபிரதிமைகள்' நூலுக்கு நல்லி - திசையெட்டும் இலக்கிய விருது 2009'&lt;br /&gt; 2008 சிங்கப்பூர் இலக்கிய விருது - 2008க்கு இவரின் சிறுகதைத் தொகுப்பான 'பின் சீட்' தேர்வானது.&lt;br /&gt; 2007 - 'தமிழ் நேயம்' அமைப்பின் பத்தாவது தொகுதியான 'சுடும் நிலவு'ல் 'வீடு' சிறுகதை தேர்வு/பிரசுரம்&lt;br /&gt; 2007 - 2006ஆம் வருடம் பிரசுரமான 'நியாயங்கள் பொதுவானவை' என்ற சிறுகதைத் தொகுப்பு திருப்பூர் அரிமா சங்கத்தினர் ஏற்பாடு செய்த 'அரிமா சக்தி விருது 2006'ல் - சிறப்புப் பரிசு பெற்றது.&lt;br /&gt; சிறுகதை எழுதித்தரச் சொல்லி அழைப்பு - திரைகடலோடி - ஆனந்த விகடன் தீபாவளி மலர் 2007 &lt;br /&gt; 2006 - 'தமிழ் நேயம்' அமைப்பின் பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் 'சொல்லாத சொல்' என்ற சிறுகதை முதல் தகுதி. 'கனலும் எரிமலை' என்ற ஒன்பதாவது தொகுதியில் பிரசுரம்.&lt;br /&gt; 2005 - அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் 'சேவை' என்ற சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டது.&lt;br /&gt; 2005 - பிரபல எழுத்தாளர் கோவை ஞானி அவர்கள் தலைமையில் திருமதி ராஜேஸ்வரி அவர்களின் ஆதரவில் 'தமிழ் நேயம்' சார்பில் நடைபெற்ற பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி - 'கடைசிக் கடிதம்’ என்ற சிறுகதை முதல் தகுதி - அமைப்பின் எட்டாவது தொகுதியான 'புதிய காளி'யில் பிரசுரம்.&lt;br /&gt; சிறுகதை எழுதித்தரச் சொல்லி அழைப்பு - நாலேகால் டாலர் - கல்வி தீபாவளி மலர் 2004&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரில் பெற்ற பரிசுகள்/விருதுகள்/அங்கீகாரங்கள்&lt;br /&gt;&lt;br /&gt; 2010 'திரைகடலோடி' சிறுகதைத் தொகுப்பு சிங்கப்பூர் இலக்கிய விருது 2010 க்குத் தேர்வு&lt;br /&gt; 2008 சிங்கப்பூர் இலக்கிய விருது - 2008க்கு இவரின் சிறுகதைத் தொகுப்பான 'பின் சீட்' தேர்வானது.&lt;br /&gt; 2006 - சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் வருடாந்திர மூன்று மாத 'வாசிப்போம் சிங்கப்பூர்' இயக்கத்தில் related reading பிரிவில் 'நாலேகால் டாலர்' சிறுகதைத் தொகுப்பு வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப் பட்டது.&lt;br /&gt; 2005 - தேசியகலைகள் மன்றம் மற்றும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்க் இணைந்து நடத்திய தங்க முனைப்பேனா விருது கௌரவக் குறிப்பு - ‘வேண்டியது வேறில்லை' (குறுநாவல்) - நான்காமிடம்&lt;br /&gt; 2005 - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நடந்த அமரர் சே.வெ. சண்முகம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் (முத்தமிழ் விழா ) 'மழலைச்சொல் கேளாதவர்' என்ற சிறுகதை ஊக்கப்பரிசு.&lt;br /&gt; 2004 - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் - 'முத்தமிழ் விழா' மற்றும் ‘தமிழ் முரசு’ ஏற்பாட்டில் ‘வளர் தமிழ் இயக்கத்தின்’ ஆதரவில் நடந்த அமரர் சே.வெ. சண்முகம் நினைவு சிறுகதைப் போட்டியில் 'பொம்மை' சிறுகதை இரண்டாம் பரிசு&lt;br /&gt; 2001 - சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் நடத்திய உலகத்தமிழாசிரியர் மாநாட்டை ஒட்டி நடத்திய 'குறுநாவல்' போட்டியில் 'குயவன்' என்ற முதல் (தங்கப்) பரிசு&lt;br /&gt; 2001 - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரின் சிறுகதை 'நொண்டி' (நுடம்) இரண்டாம் பரிசு.&lt;br /&gt; 2000 - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடந்திய சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் சிலப்பதிகாரப் போட்டியில் ஆறுதல் பரிசு.&lt;br /&gt; 1998 - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடந்திய பாவேந்தர் பாரதிதாசன் கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு.&lt;br /&gt; 1990களின் இறுதி - 'தெளிவு', 'கீரை' போன்ற சிறுகதைகள் ஆறுதல் பரிசுகள் பெற்று சிங்கை வானொலியில் ஏற்ற இறக்கங்களுடன் வாசிக்கப் பட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்கங்கள் பிரசுரமான ஊடகங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;• வெளிநாட்டு அச்சூடகங்கள் - அமுதசுரபி, கல்கி, கல்கி தீபாவளிமலர், உயிர்மை, காலச்சுவடு, வார்த்தை, உயிர் எழுத்து, மணல் வீடு, கனவு, புதியபார்வை, கலைமகள், இந்தியா டுடே, ஆனந்தவிகடன் தீபாவளிமலர், அவள் விகடன், த தமிழ் டைம்ஸ், ஊடறு, பெண்ணே நீ, அம்ருதா, தென்றல், வடக்குவாசல், தென்றல் முல்லை, ஃபெட்னா இதழ், இனிய நந்தவனம், மஞ்சரி, சிநேகிதி, முல்லைச்சரம், இருவாட்சி பொங்கல் மலர், காற்றுவெளி, அநங்கம், திசையெட்டும், மலேசிய நண்பன், தமிழ்நேசன், மக்கள் ஓசை, மக்கள் குரல், இனிய உதயம், தாமரை, மௌனம், அகநாழிகை, காலகட்டம், நவீன விருட்சம், &lt;br /&gt;• மின் ஊடகங்கள் - திண்ணை, பதிவுகள், சமாச்சார்,  திசைகள், சங்கமம், தமிழோவியம், சிக்கிமுக்கி, வல்லமை, உயிரோசை, சொல்வனம், செல்லினம், வல்லினம், தங்கமீன்&lt;br /&gt;• உள்நாட்டு அச்சூடகங்கள் - தமிழ்முரசு, சிங்கை எக்ஸ்பிரஸ், சிங்கைச் சுடர், நாம், சிரங்கூன் டைம்ஸ், இனி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உரைகள் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குவாலலம்பூரில் நடந்த சிறுகதைக் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்ட போது ‘அயலில் தமிழிலக்கியம்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை சிறந்த கவனத்தைப் பெற்றது. &lt;br /&gt; 31-10-09 அன்று ‘Under Covers’ சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் நடந்த பெண் படைப்பாளிகள் கூட்டத்தில் தமிழரல்லாதோர் இருந்த அரங்கில் தமிழிலக்கியத்தில் பெண் படைப்பாளிகள் மற்றும் பெண் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆங்கிலத்தில் ஆற்றிய ‘Scars so similar and yet so different’ என்ற உரை.  &lt;br /&gt; 4-01-09 அன்று இலக்கிய வட்டத்தில் ஆற்றிய ‘நவீன தமிழிலக்கியத்தில் பேசுபொருள்’ என்ற தலைப்பிலான உரை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேர்காணல்கள் &lt;br /&gt;&lt;br /&gt; சொல்வனம் இணைய இதழுக்காக மலேசியாவைச் சேர்ந்த கே.பாலமுருகன், ‘சிங்கப்பூர் தமிழிலக்கியத்தில் அடையாள அரசியல்’ என்ற இ-நேர்காணல். &lt;br /&gt; இனிய நந்தவனம் அச்சிதழுக்காக இதழாசிரியர் சந்திரசேகர் நேரில் வந்து (திருச்சியில்) எடுத்த பேட்டி &lt;br /&gt; தமிழோவியம் இணைய இதழுக்காக திருமலை கொழுந்து நடத்திய விரிவான இ-நேர்காணல் &lt;br /&gt; நிலாசாரல் இணைய இதழுக்காக கவிஞர் மதுமிதா எடுத்த பேட்டி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதர இலக்கிய ஈடுபாடுகள் &lt;br /&gt;&lt;br /&gt;o சிங்கப்பூரின் மாணவர்களுக்கான சொற்களம் போட்டிகளில் தொடர்ந்து பல ஆண்டுகள் நடுவராகப் பணியாற்றியது&lt;br /&gt;o எழுத்தார்வம் கொண்ட 30 பேருக்கு நடத்திய சிங்கப்பூர் தேசிய புத்தக வாரியத்தின் NBDCS (National Book Development Council of Singapore ஏற்பாட்டில் சிறுகதைப் பயிலரங்கு - 1Oct2011&amp;1Nov2011 &lt;br /&gt;o சிங்கப்பூர் தேசியல் கலைகள் மன்றம் ஏற்பாடு செய்த முதியோர் இல்லங்களுக்குச் சென்று முதியோருடன் கலந்துரையாடி ஒரு சிறுகதை புனையும் pasSAGES என்ற  a projectல் முக்கிய பங்கேற்பு.  எழுதப்பட்ட சிறுகதை – கோடாரித் தைலம். ஆங்கிலத்திலும் கதாசிரியராலேயே மொழிபெயர்க்கப்பட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9687302-6301114301740372080?l=jeyanthisankar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyanthisankar.blogspot.com/feeds/6301114301740372080/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9687302&amp;postID=6301114301740372080&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/6301114301740372080'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/6301114301740372080'/><link rel='alternate' type='text/html' href='http://jeyanthisankar.blogspot.com/2007/04/blog-post.html' title='குறிப்புகள்'/><author><name>ஜெயந்தி சங்கர்         (Jayanthi Sankar)</name><uri>http://www.blogger.com/profile/04533483437106248358</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9687302.post-115656765451095870</id><published>2006-08-26T12:46:00.000+08:00</published><updated>2006-12-20T21:22:54.196+08:00</updated><title type='text'>மரணித்த பாதங்கள்</title><content type='html'>--------ஜெயந்தி சங்கர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனச் சமூகம் ஆணாதிக்கம் நிறைந்த ஒன்றாக இருந்தது. பெண்ணை ஒரு திருமணப்பொருளாக மட்டும் பார்த்தது. கொக்கி வடிவிலுள்ள தாமரைத் தண்டுகளின் (lotus hooks) மேல் இருக்கும் தாமரை மலரைப் போல ஆணின் கண்களுக்கு பெண் தெரியவேண்டும் என்று நினைத்தது அச்சமூகம். மேலும், சிறிய பாதங்களே அழகானதாகவும் நளினமானதாகவும் கருதப்பட்டது. 3-4 அங்குலமே இருக்கும்படி பாதத்தின் வளர்ச்சியைத் தடுக்க பாதங்களை மடக்கி இறுக்கிக் கட்டினார்கள். மூன்று அங்குலமிருந்தால் தங்கத் தாமரை என்றும் நான்கங்குலமிருந்தால் வெள்ளி என்றும் நான்குக்கு மேலிருந்தால் இரும்பு என்றும் அழைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=498775&amp;amp;sid=DKL12xINV4" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'தாமரைத் தண்டு' ஆணுக்குள் இச்சையையும் ஆசையையும் தூண்டும் உருவம் என்று சீனர்கள் திடமாக நம்பினார்கள். உடலுறவுக்கு முன் ஆண் தொட்டுத் தடவி, விளையாடி மகிழ தன் பாதங்களை அவனின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளத் துவங்கிய பெண் காலங்காலமாக தன்னை வருத்திக் கொண்டு வந்திருக்கிறாள். அவ்வகைப் பாதங்கள் அவளிடம் கீழ்ப்படிதலை வலியுறுத்துவதாகவும் கொள்ளப் பட்டது. பிறரின் உதவியில்லாமல் வெகுதூரம் போகவோ உலகை அறியவோ ஒரு பெண்ணுக்கு உரிமையில்லை. அவள் கணவனின் கொடுமைக்கும் அடிஉதைக்கும் பயந்து கூட அவள் ஓடிவிடலாகாது. தவிர, கணவனிடமிருந்து பிரிய நினைக்கும் மனைவியும் வீட்டை ஓடிவிடக்கூடாது என்ற முன்யோசனை இதில் இருந்திருக்கிறது. வாழ்நாள் முழுவதும் ஒரு பெண் தனியாக இயங்கிவிடக்கூடாது; அவள் ஒரு ஆணைச் சார்ந்தே இயங்கவேண்டும் என்பது போன்ற உள்நோக்கங்கள் இருந்திருக்கின்றன. பாதங்களைக் கட்டுவதற்கு வேறு சில காரணங்கள் சொல்லப்பட்டாலும், இவை தான் முக்கியமானவை. இதன்மூலம் பெண்ணின் கற்புநிலை காக்கப்படுவதாக நம்பினார்கள். மொத்தத்தில், பெண்களுக்கு விதிக்கப்பட்டது அடிமை வாழ்வு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனர்களின் பார்வையில் இது சித்திரவதையில்லை, பெண்ணின் அழகை மேம்படுத்தும் ஒரு செயல். அவ்வளவே. சீனாவில் இவ்வழக்கம் ஒரு கலையாகப் பார்க்கப்பட்டு வந்துள்ளது என்பதை நினைக்கும்போது சமூகத்தில் ஆணின் ஆதிக்கம் எந்த அளவிற்கு வேரூன்றி இருந்து வந்திருக்கிறது என்பது தெளிவாகப் புரியும். ஆணின் அழகியல் நோக்கே இவ்வழக்கத்திற்குக் காரணம் என்று தங்களை ஏமாற்றிக் கொண்டும் நம்பிக்கொண்டும், ஆணுக்கு அடிமையாக இருந்த இப்பெண்கள் மிக அதிகம் பயந்ததே பாதங்களைக் கட்டி நீளத்தைக் குறைக்கா விட்டால் தங்களுக்குத் திருமணமாகாது போகுமோ என்று தான். திருமணமாகாவிட்டால் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையே இல்லை சீன சமூகத்தில். தன் கல்லறையைப் பராமரிக்க கணவனோ பிள்ளைகளோ இல்லாத அவள் இறப்பிற்குப் பிறகு அமைதியில்லாமல் வெட்டியாகத் திரியும் ஆவியாகிவிடுகிறாள் என்பது நம்பிக்கை. ஆக, திருமணத்திற்கு ஒரு முக்கிய தகுதியாகிப் போனது இந்த கட்டப்பட்ட பாதங்கள். காலம் காலமாக இவ்வழக்கம் வாழ்வின் ஒரு பகுதியாக சீனப் பெண்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்பட்டும் வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=498774&amp;amp;sid=cio50suTW4" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆணை மகிழ்விக்கவே பெண் இருப்பதாகவும், அவனுக்குப் பிள்ளைகள் பெற்றுக்கொடுப்பதே அவளின் கடமையெனவும் தீவிரமாக நம்பப்பட்டது. ஆணின் இச்சைக்கும் வசதிக்கும் புலனின்பத்துக்கும் ஏற்றாற்போல் பெண் எல்லாவிதமான சித்ரவதைகளையும் அனுபவிப்பது என்பது அங்கு எழுதப்படாத சட்டமாக இருந்து வந்துள்ளது. தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையாகப் பார்க்கவே தெரியாமல் வாழ்ந்திருக்கிறார்கள் சீனப் பெண்கள். ஒரு பெண்ணின் உறுப்புகள் இயற்கையாக எப்படி இருக்கிறதோ அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் முற்றிலும் இல்லை. அவளின் ஒவ்வொரு உறுப்பும் வெவ்வேறு வகைகளில் குறைக்கவும் கூட்டவும் பட்டுவந்துள்ளது. முக்கியமாக பாதங்களைச் சிறியதாகக் காட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் கொடூரமானவை. ஒரு பெண்ணின் பாதங்கள் எத்தனைக்கெத்தனை குட்டையாக இருக்கிறதோ அத்தனைக்கத்தனை அவளின் அந்தஸ்து கூடுவதாக நம்பப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனமுதுமொழி ஒன்று " உன் மகனின் மேல் உனக்கு அக்கறையிருந்தால், அவனுடைய கல்வியைச் சுலபமாக்காதே. உன் மகளின் மேல் உனக்கு அக்கறையிருந்தால், பாதங்களைக் கட்டுவதைச் (foot binding) சுலபமாக்காதே", என்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண் குழந்தைகளின் கால்விரல்கள் உடைக்கப்பட்டு, தோல் கீரப்பட்டு அவளின் கால்விரல் எலும்புகள் உள்ளங்கால்களை நோக்கி மடக்கிக் கட்டப்படுவதெல்லாம் மிகவும் சர்வசாதாரணம். சிறுமிகளின் பாதங்கள் சுமார் மூன்று முதல் பதினோரு வயதுக்கிடையில் கட்டப்படும். அவ்வயதில் எலும்புகள் இளசாக இருக்கும் என்பது ஒருகாரணம். சீக்கிரமே ஆரம்பித்தால் பலன் அதிகம். இதைச் செய்வது அவளின் தாயும் மற்றும் பெண் உறவினர்களும். குளிரில் பாதங்கள் கொஞ்சம் மரத்துப்போய் வலி குறைவாக உணரப்படும் என்று அவர்கள் இம்முறையை முதன்முதலில் நடைமுறைப் படுத்தியது கடும்குளிர்காலத்தில். உண்மையில் வலி என்னவோ கோடையில் இருக்கக்கூடிய அதே அளவு தான் இருக்கும். கிட்டத்தட்ட இரண்டாக மடித்துக் கட்டப்படும் பாதங்கள் மூன்றங்குலத்திற்கு மேல் இருக்கக்கூடாது. மடக்குவதால் குதிங்காலுக்கும் முன்காலுக்கும் இடையில் ஏற்படும் பிளவு குறைந்தது 2-3 அங்குல ஆழம் இருக்கவேண்டும். பாதங்கள் பெண்ணின் உடலைத் தாங்குவதைப் போலில்லாமல் அவளின் கால்களின் நீட்சியாகவே தெரியவேண்டும் என்பது நோக்கம். அப்போது தான் ஆணுக்குப் பிடித்த தாமரைக் கொக்கிகள் உருவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=498772&amp;amp;sid=eAR53iBFN5" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சடங்காக நடத்தப் படும் இவ்வழக்கத்தில், முதலில் கால்விரல் நகங்கள் வெட்டப்படும். பிறகு எலும்பையும் தசையையும் மென்மையாக்க மூலிகைகள் போட்டுக் காய்ச்சிய சுடுநீரில் பாதங்களை ஊறவைப்பார்கள். சிலவேளைகளில் மிருகங்களின் ரத்தம், சிறுநீர் போன்றவற்றிலும். கால்விரல்களில் கட்டைவிரல் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்படி விடப்படும். மற்ற எட்டு விரல்களும் அடியில் தள்ளப்பட்டும் இறுக்கிக்கட்டப்படும். சிறுமி தன் முழு பாரத்தையும் கட்டப்பட்ட பாதத்தில் செலுத்தி நடக்கப் பழக்கப்படுகிறாள். இதன் மூலம் எலும்புகள் தானாகவே உடைந்து பாதம் மெல்லமெல்ல குட்டையாகி உருமாறும். வலியைப் பற்றியெல்லாம் முணுமுணுக்கவும் மாட்டார்கள். கூடவும் காடாது. பிறகு, அவரவர் வசதிக்கேற்ப பத்தங்குல நீளமும் இரண்டங்குல அகலமும் கொண்ட பட்டு அல்லது பருத்தித் துணியால் பாதங்கள் இறுக்கிக் கட்டப்படும். பணக்காரர்கள் வெள்ளையிலும் ஏழைகள் அடர்நீலத்திலும் துணியை உபயோகித்தார்கள். அடர்நீல வண்ணம் அழுக்கை மறைக்க. அவ்வண்ணம் தோய்த்த துணி பாதங்களில் புண் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கவும் உதவியதாக நம்பப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கட்டு அவிழ்க்கப்பட்டு பாதங்கள் கழுவப்பட்டு நகங்கள் வெட்டப்படும். பிறகு, மீண்டும் முன்பைவிட இறுக்கமாகக் கட்டப்படும். ஆரம்பநாட்களில் தாய் இதைச் செய்வாள். பிறகு, தானே செய்துகொள்ளப் பழகவேண்டும். பாதத்தின் அளவு குறையக்குறைய காலணிகளின் அளவும் குறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த உடல் எடையும் கால்களில் இறங்கி கால் எலும்புகள் தானாகவே உடைந்து பிறகு மடக்கியவாக்கில் படிந்து வளர உதவும் என்பதற்காக கட்டப்பட்டபாதங்களுடன் பெண்களை வேண்டுமென்றே நீண்டதூரத்துக்கு நடக்க வைப்பதுண்டு. செயற்கையான முறையில் பாதங்களில் மேல் எடையுள்ள பொருட்களை வைப்பதுமுண்டு. சிலவேளைகளில், கூர்மையான ஆயுதத்தால் பாதங்களின் தசைகளை குத்திக் காயப்படுத்தி அதிகப்படியான தசைகளை அழுகி உதிரச்செய்வார்கள். நாளடைவில் அவளின் இரு பாதங்களும் தாமரைக் கொக்கிகளின் உருவத்திற்கு மாறிவிடும். அப்போது தான் அப்பெண் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறாள். பாதங்கள் மறைந்து மூன்றங்குல கொக்கிகள் மேல் நிற்கவும் நடக்கவும் செய்வாள். நடக்கவே சிரமப்படும் இப்பெண் ஓடுவதை நினைத்தும் பார்க்கமுடியாது. நொண்டிக்கொண்டும் நெளிந்துகொண்டும் நடமாடப்பழகிடுவாள். வேறு வழியில்லையென்றால் தூக்கிக்கொண்டு போவார்கள் பெண்களை. ஆணை மகிழ்விக்கவென்றே வளர்த்தெடுக்கப்பட்ட கலாசாரமான இப்பெண்களின் நுனிக்கால் நடனம் மிகவும் சமீபகாலம் வரையிலும் பிரபலம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=498773&amp;amp;sid=cnU72YWZI7" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வருடங்களில் சிறிய பாதங்கள் கிடைக்கப்பெற்றாலும், தொடர்ந்து பத்து வருடங்களுக்கு பாதங்களைக் கட்டினால் தான் இயற்கையாக வளரத் துடிக்கும் விரல்களையும் எலும்புகளையும் கட்டுப்பாட்டில் வைக்கமுடியும் என்பதால் கட்டுவது தொடரும். இயற்கைக்கு விரோதமான இவ்வழக்கத்தின் பின்விளைவுகள் ஏராளம். தாங்கமுடியாத வலி தான் முதல் கஷ்டம். மீண்டும் இயற்கையான பாதங்களைப்பெறுதல் என்பது கிட்டத்தட்ட சாத்தியமேயில்லாமல் போகிறது. தேவையான இரத்த ஓட்டம் இல்லாமல் விரல்கள் உதிர்ந்து கூடப்போய்விடும். மடக்கியிருக்கும் விரல்களில் வளரும் நகங்கள் அடிப்பாதங்களில் குத்தி புண்ணாகி நாற்றத்துடன் விடாமல் சீழ் வடியும். வாழ்நாள் முழுவதும் நாற்றம் அவளைவிட்டுப் போவதில்லை. இந்தப் புண் ஆறாமல் தொடர்ந்தால், கால் முழுவதும் பரவி சிலவேளைகளில் பெண்ணுக்கு மரணம் கூட நிகழ்வதுண்டு. மரணத்தை வென்ற பெண்ணின் பாதங்கள் எப்படியும் மரணத்துத் தான்விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆணைவிட பெண்ணின் பாதம் சிறியதாக இருந்தாலும், அதனை மேலும் சிறியதாகக் காட்டவே வலியுறுத்தி வந்துள்ளது சீனச் சமூகம். நாடு முழுவதும் பரவலாகப் பின்பற்றப்பட்டு வந்து, வடசீனாவின் ஹான் வட்டாரத்தில் அதிகமாக இருந்த இவ்வழக்கம் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தான் மறையத் துவங்கியது எனலாம். ஆச்சரியம் என்னவென்றால், இப்பெண்கள் வீட்டு வேலைகள் செய்யவும், நீண்ட தூரம் நடக்கவும் மலையேறவும் அஞ்சுவதேயில்லை. ஏற்று வாழப்பழகிய மனோபாவம் ஒரு காரணம் என்றாலும் தோல்வியை ஏற்கப் பிடிக்காத மனோதிடமும் இன்னொரு முக்கிய காரணம். உடலில் ஏற்படும் வலிகள் மனதைத் திடப்படுத்திக்கொள்ள உதவி வந்துள்ளதோ என்றெண்ணத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோரிடமிருந்து பெற்ற நம் உடல் புனிதத்துவம் கொண்டது; உடலுறுப்புகளை எந்தவிதத்திலும் மாற்றியமைக்கக்கூடாது என்று கன்?ப்யூஷியஸ் சொன்ன முக்கியமான பாடத்தை சீனத்தில் ஆண்சமூகம் மிகச்சௌகரியமாக மறந்தது. பிற்காலத்தில் எதிப்புக்குரல் கிளம்பிய போதுதான் பெண்களுக்கு ஆதரவாக இதனைப் பயன்படுத்தினார்கள். அதே நேரத்தில், கன்?ப்யூஷியஸின் ஆணாதிக்க போதனைகள் இவ்வழக்கத்திற்கு வித்திட்டதாகவும் பரவலாகச் சொல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1997ல் கலி?போர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து விஞ்ஞானிகள் குழு ஒன்று சீனாவில் osteoporosis குறித்த விரிவான ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இவ்வழக்கத்தின் பின்விளைவுகளை ஆராய்ந்தது. இந்த ஆய்வில் 193 பெண்கள் பங்கேற்றார்கள். 93 பேர் 80 வயதைக் கடந்தவர்கள். மற்றவர்கள் 70-79 வயதுடையவர்கள். கட்டி சிறிதாக்கப்பட்ட பாதங்கள் உள்ளோர் இயற்கையான பாதங்கள் உள்ளவர்களைவிட அதிகம் கீழே விழக்கூடியவர்கள். தவிர இந்தச் இப்பாதங்கள் கொண்டவர்களால் இருக்கையிலிருந்து எளிதில் எழமுடியவில்லை. இவர்களால் குந்தியிருக்கவும் சிரமம். சீனாவிலோ அன்றாட வேலைகள் செய்ய பெண்கள் குந்தியிருப்பது தவிர்க்க முடியாதது. சிரமத்துடனேயே வாழப்பழகிய இப்பெண்களுக்கு இடுப்பு மற்றும் முதுகெலும்புகளின் பலம் மிகவும் குறைந்து விடுவதால், இவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் சாத்தியகள் மிகஅதிகம்.&lt;br /&gt;கன்ப்?யூஷியஸ் வகுத்துத் தந்த கலாசாரம் உடல் முழுவதையும் மறைத்த ஆடை. அவரைப்பின்பற்றி தான் அறிஞர் ஜூ ஜீ (1130-1200 கி.மு) தென் ?ப்யூஜியன் மாநிலத்தில் இவ்வழக்கத்தை ஊக்குவித்தார். பெண்களின் கட்டப்பட்ட பாதங்களையும் காலணிகள் கொண்டு முற்றிலும் மறைத்துக் கொள்ளும் பழக்கம் தோன்றியது. இது அவர்களுக்கு ஒருவித அடையாளத்தைக் கொடுத்ததென்றும் நம்பப்பட்டது. அவர்களைப் பொருத்தவரை, பெரிய, தட்டையான மற்றும் காலணியில்லாத பாதங்கள் விலங்குகளுக்குறியவை, பெண்களுக்கானதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டாங்க் முடியாட்சியின் இறுதிலோ, அதனைத் தொடர்ந்த சுங்க் முடியாட்சியிலோ ( 960- 1279 கிபி) இவ்வழக்கம் துவங்கியிருக்கலாம் என்று கருதப்பட்டாலும் ஷாங்க் முடியாட்சியில் ( 1700- 1027 கிமு) தோன்றிய பலவகையான புராண மற்றும் இதிகாச, கிராமியப் பதிவுகள் இவ்வழக்கத்தினைப் பேசுவதால் அதன் பழமை புரிகிறது. அப்போது நாட்டின் அரசிக்கு இயற்கையாகவே சிறிய பாதங்கள் இருந்ததாகவும் அதற்காக நாட்டின் பெண்களும் பாதங்களைக் கட்டி சிறியதாக்கிக் கொள்ளவேண்டும் என்று கட்டளையிடப்பட்டதாக கதைகள் உண்டு. பெண்கள் கால்களை மடக்கிக் கட்டி சிறிதாக்கிக்கொண்டார்கள். அதன்மூலம் அரசி தன்னை அழகின் இலக்கணமாக்கி மகிழ்ந்தாள். பெண்களே மனமுவந்து தன் குறைபாடுகொண்ட கால்களை நினைத்து வருந்திய அரசியின் உணர்வைப் புரிந்துகொண்டு அவ்வாறு செய்ய ஆரம்பித்ததாகவும் பதிவுகள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதே காலத்தில் வாழ்ந்த லீ யூ என்ற இளவரசனுக்கு சிறிய பாதங்கள் மற்றும் நுனிக்கால் நடனத்தில் மிகுந்த நாட்டம் இருந்ததால் பாதங்களைக் குட்டையாக்கிக்கொள்ள அவன் தன் அந்தப்புரப்பெண்களிடம் சொன்னான் என்றொரு கதையும் உண்டு. யாவ் நியாங் என்ற அவனின் மனைவியருள் ஒருத்தி அவ்வகைப் பாதங்களைக் கொண்டவள். நுனிக்கால் நடனத்தில் வல்லவள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பன்னிரெண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தக் கொடிய வழக்கம் உச்சத்தை அடைந்தது. சுங்க் முடியாட்சியைக் கைப்பற்றிய முங்கோல்கள் யுவான் முடியாட்சியை நிறுவினார்கள். அவர்கள் பாதங்களை இறுக்கிக் கட்டும் இவ்வழக்கத்தினை ஆதரித்தனர். பிறகு, இவ்வழக்கம் அரசகுடும்பத்திலிருந்து மிங்க் முடியாட்சியின் போது மேட்டுக்குடியினரிடையே பரவியது. அப்போது தான் இவ்வழக்கம் திருமணத்திற்கும் அந்தஸ்துக்கும் தொடர்பு படுத்தப்பட ஆரம்பித்தது. மேட்டுக்குடிகளில் இருந்த பெண்கள் இவ்வழக்கத்தைப் பின்பற்றியதால் தான் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்று நினைத்தார்கள் மத்திய கீழ்த்தட்டு மக்கள். தாங்களும் தங்கள் மகள்களுக்கு பாதங்களைக்கட்டி சிறிதாக்கிவிடலாம், அதன்மூலம் மேல்தட்டு சீமான்களுக்கு அவர்களைக் கட்டிவைக்கலாம் என்று நினைத்து தீவிரமாகப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், அத்தகைய திருமணங்கள் எளிதில் நடந்துவிடவில்லை. பெரும்பாலான பெண்கள் வயல்களில் கடின வேலைக்குத் தான் போகவேண்டி வந்தது. இருந்தாலும் வழக்கம் தொடர்ந்தே வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1664ல் ச்சிங்க் முடியாட்சியின் போது மன்னன் காங்ஸி இவ்வழக்கத்திற்கு தடைபோட நினைத்தான். துரதிருஷ்டவசமாக, அவனின் முயற்சிகள் எந்தப் பலனைக் கொடுக்கவில்லை. பெண்கள் பாதக்கட்டுகளை அவிழ்த்துவிடவும் ஆண்கள் (நீண்ட பின்னலை வெட்டி)மொட்டை அடித்துக்கொள்ள ஆணையிடப்பட்டது. தங்களின் நீளமான பின்னல்களை இழக்க ஆண்கள் தயாராய் இல்லை. இந்தத் தருணத்தில் கூட பெற்றோரிடமிருந்து பெற்ற உடலையும் உறுப்புகளையும் எந்தவிதத்திலும் மாற்றியமைக்கக்கூடாது என்ற கன்?ப்யூஷியஸின் போதனையை ஆண்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் பார்த்தார்களே தவிர அப்போதும் பெண்களுக்காக அவர்கள் யோசிக்கவேயில்லை. அந்தக்காலகட்டத்தில், பாதங்களைக் கட்டும் இவ்வழக்கம் குறைந்தது போலிருந்தது. ஆனால், நான்கே ஆண்டுகளில் மீண்டும் தீவிரமாக நடைமுறைக்கு வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஷென் தே?பூ ( 1578- 1610 கி.பி) என்றவரின் வரலாற்றுப் பதிவின் படி 1644ல் மன்சுஸ் படைகள் நாட்டைக் கைப்பற்றியபோது மானத்திற்கு பயந்து மன்னன் தற்கொலை செய்துகொண்டான். அப்போது. திடீரென்று ஹான் இனமக்களிடையே நாட்டுப்பற்றையும் ஆண்களுக்கு அடையாளைத்தையும் ஏற்படுத்திடவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அப்போது கட்டப்பட்ட பாதங்கள் எல்லைகளைக்குறிக்கும் ஒன்றாகிப்போனது. ஹான்ஸ் மற்றும் மன்சுஸ் வட்டாரங்களை அடையாளம் காண அவ்வட்டாரப் பெண்களின் பாதங்கள் தான் உதவின.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போர்த் தந்திரமாகவும் இவ்வழக்கம் அமைந்ததற்கான பதிவுகள் இருக்கின்றன. ராணுவ ஆலோசகர் ச்சூ ஜ்யூசீ, பாதங்களை இறுக்கிக் கட்டும் வழக்கத்தை மேலும் ஊக்குவிப்பதன் மூலம் மன்சுஸ் இனத்தைக் கவிழ்க்கவும் சீனாவின் பலத்தைப் பெறுக்கிக்கொள்ளவும் முடியும் என்று நினைத்தார். இதற்காக, ஹான்ஸ் வீரர்களைக் கொண்டே மன்சுஸ் வீரர்களிடம் இவ்வழக்கத்தைப் பரப்பப் பரிந்துரைத்தார். இதன் மூலம் அவ்வீரர்களின் கவனம் போரிலிருந்து வேறொன்றில் சிதறி, போர் ஆவேசம் குறைந்து, சீனாவுக்கு அவர்களால் ஏற்பட்ட அச்சுறுத்தல் குறையலாம் என்று கணக்குப் போட்டார். இருப்பினும், இவ்வழக்கம் மன்சுஸ் இனத்தாரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சீனர்கள் மட்டுமே தொடர்ந்து 1911 புரட்சிவரை பின்பற்றினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதன்முதலில் 1895ஆம் வருடம் ஷாங்காயிலிருந்து எதிர்ப்புக்குரல் கிளம்பும் வரை எத்தகைய விழிப்புணர்வும் இல்லாமலே இருந்து வந்தனர் பெண்கள். பெண்ணின் கல்விக்கு இவ்வழக்கம் தடையாக அமைந்து வருவதை குடிமக்களுக்கு உணர்த்தி ஓர் இயக்கம் உருவானது. உறுப்பினர்களுக்கிடையேயும் விழிப்புணர்வு பெற்றிருந்த குடும்பத்தினரிடையேயும் திருமணபந்தங்களை உருவாக்கினார்கள். பாதங்கள் இறுகக் கட்டப்படாத பெண்களுக்கும் திருமணம் சாத்தியமே என்று செயல்முறையாகக் காட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1911ல் சீனக் குடியரசு இவ்வழக்கத்தைச் சட்ட விரோதம் என்று அறிவித்தது. அரசு ஊழியர்கள் வழக்கத்தைப் பின்பற்றுபவர்களை அடையாளம் கண்டு அபராதம் விதித்தனர். இருந்தாலும், இந்தப் பழக்கம் உட்புற கிராமங்களில் தொடர்ந்தே வந்தது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தான் சிறிய பாதங்களுக்கான காலணிகளை உற்பத்தி செய்துவந்த ஹன்பின் என்ற ஊரில் இருந்த கடைசி தொழிற்சாலை இழுத்துமூடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆயிரம் வருடங்களில் 4.5 பில்லியன் சீனப் பெண்கள் இவ்வழக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். வழக்கம் உச்சத்தில் இருந்தபோது அதைப்பற்றிய பதிவுகள் மிகக் குறைவு. மெதுவாகக் குறைய ஆரம்பிக்கும்போது தான் ஏராளமான பதிவுகள் இவ்வழக்கத்தைக் குறித்ந்து சீன இலக்கியங்களில் கிடைக்கின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை கடந்த 2-3 நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட பாலியல் சார்ந்த பதிவுகளே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹவாய் தீவுகளுக்குப் புலம்பெயர்ந்த சீனர்கள் இவ்வழக்கத்தைக் கொண்டு சென்றார்கள். பிறகு 1898ல் தடைசெய்யப்பட்டபோது கைவிட்டார்கள். இவ்வழக்கம் புலம்பெயர்ந்த மற்ற சீனர்களிடம் இருந்ததாகத் தெரியவில்லை. பாதங்கள் கட்டப்பட்ட பெண்கள் புலம்பெயர்ந்திருக்கலாம். ஆனால், புலம்புயர்ந்த மண்ணில் இவ்வழக்கத்தைத் தொடர்ந்ததற்கான பதிவுகள் இல்லை என்றே தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று சீனாவில் இவ்வழக்கத்தினைப் பற்றி நன்கறிந்தவர்கள் மிகவும் குறைந்துபோனார்கள். எல்லோருமே முதுமையடைந்துவிட்டார்கள். கைவேலைப்பாட்டுடன் அமைந்த மூன்றங்குல பட்டுக் காலணிகளை சீன அரசாங்கம் அருங்காட்சியங்களில் எங்கேயும் வைப்பதில்லை. இக்காலணிகள் இப்போதெல்லாம் சீனர்களிடையே அவமானம், கோபம், எரிச்சல் மற்றும் வெறுப்பு போன்ற வெவ்வேறு விதமான உணர்வுகளைக் கொண்டுவருகின்றன. ந்யூயார்க்கில் 1996ல், 142 ஜோடிக்காலணிகள் காட்சிக்கு வைக்கப்பட்டபோதும், கடைக்காரர் அவ்வரிய காலணிகளை 975 டாலருக்கு விற்க முயன்றபோதும் ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பின. 1995ல் யாங்க் யூச்சிங் என்ற திரைப்படத்தயாரிப்பாளர் இவ்வழக்கத்தைக்குறித்து ஒரு திரைப்படம் எடுக்க நினைத்தார். அவருக்கு அது சுலபமாக இல்லை. ஏனென்றால், அதைப்பற்றிப் பேச யாரும் முன்வரவில்லை. சீன அரசாங்கம் தன் திரைப் படவேலையைத் தடை செய்துவிடுமோ என்றும் அஞ்சியிருக்கிறார் யாங்க் யூச்சிங். ஆனால், சமீபத்தில் டிஸ்கவரி தொலைக்காட்சிக்கு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு நூற்றாண்டில் பெண்கள் அமைப்புகள் பல இம்முறைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நீண்ட நேரம் நின்றுகொண்டே செய்யும் வேலையில் இருக்கும் பெண்கள் பாதங்களைக் கட்டியதற்காக வருந்துகிறார்கள். இருப்பினும், தங்கள் மகள்களையாவது இதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பாதங்களை இறுக்கிக்கட்டும் இம்முறைக்கு எதிராக நடந்த இயக்கங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றுள்ளன. நிறைய பெண்கள் உடனே பாதக்கட்டுகளை அவிழ்த்து எறிந்துவிட்டு மற்றவர்களையும் அவ்வாறே செய்யத் தூண்டினர். கட்டில்லாமல் நடப்பது மிகவும் வலியைக் கொடுக்கும் என்பதால், கட்டினைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் தளர்த்தி இயல்புக்கு வரவேண்டும் என்று இவர்கள் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்கள். வயதில் முதிர்ந்த பெண்களுக்கு வேறு வழியே இல்லை. பாதங்கள் இயல்புக்கு வரவேமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு சிறியபாதங்கள் இருந்தால் மட்டுமே கல்யாணத்தின் போது பெண் நல்ல விலைபோனாள். ஆனால், இன்று அதில் கிடைக்கும் வருமானத்தை விட பருத்தி மில் போன்ற இடங்களில் நல்ல சம்பளம் கிடைக்கிறது என்று பெற்றோர்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். திருமணம் என்ற பெயரில் தானே விலைபோய் குடும்பத்தின் பொருளாதாரத்தில் கைகொடுத்த பெண், இக்காலத்தில் வேலைசெய்து சம்பாதித்து கைகொடுக்கிறாள். பாதங்கள் தீர்மானித்த திருமணங்களை இப்போதெல்லாம் பணம் தீர்மானிக்க ஆரம்பித்துவிட்டது. பெண்ணின் பொருளாதார முன்னேற்றம் ஒருவகையில் இக்கொடிய வழக்கத்தை அழிக்க உதவியுள்ளது. வழக்கம் கிட்டத்தட்ட மறைந்தே போய்விட்டது என்பது தான் ஒரே ஆறுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(முற்றும்)&lt;br /&gt;ஆகஸ்ட் 2006 - உயிர்மை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.nilacharal.com/tamil/interview/jayanthi_shankar_255.asp" target="_blank"&gt;http://www.nilacharal.com/tamil/interview/jayanthi_shankar_255.asp&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.viruba.com/mediareview.aspx?rid=50&amp;bid=VB0000349" target="_blank"&gt;http://www.viruba.com/mediareview.aspx?rid=50&amp;amp;bid=VB0000349&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thinnai.com/author1257.html"&gt;www.thinnai.com/author1257.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9687302-115656765451095870?l=jeyanthisankar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyanthisankar.blogspot.com/feeds/115656765451095870/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9687302&amp;postID=115656765451095870&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/115656765451095870'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/115656765451095870'/><link rel='alternate' type='text/html' href='http://jeyanthisankar.blogspot.com/2006/08/blog-post_26.html' title='மரணித்த பாதங்கள்'/><author><name>ஜெயந்தி சங்கர்         (Jayanthi Sankar)</name><uri>http://www.blogger.com/profile/04533483437106248358</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9687302.post-115493703355118497</id><published>2006-08-07T15:42:00.000+08:00</published><updated>2007-01-15T19:01:59.116+08:00</updated><title type='text'>சாயல்  ( சிறுகதை - போட்டிக்காக)</title><content type='html'>------ ஜெயந்தி சங்கர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=496890&amp;amp;sid=FPW70qLZw1" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்குன்னு ஒண்ணு பொறந்திருந்தா,..", என்று வழக்கமான பிலக்கணத்தைப் பாடிய ஸ்ரீதரின் அம்மா போனை வைத்ததும் போன் மைக்கில் சலிப்புடன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த என்னிடம், "அம்மாவப் பத்தி உனக்குத் தெரியாதா,.. விடு நான்ஸி", என்ற சமாதானம் செய்த படியே இடத்தை விட்டகன்றான். முதல் முறை அப்படி அவர் பேசி கேட்ட போது நான் அழுததை இன்னும் ஸ்ரீதர் மறக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மணவிலக்கு பெற்றுப் பிரிந்து சிங்கப்பூரில் கிடைத்த வேலையில் சேர்ந்த ஒரே வருடத்தில் என் அலுவலக நண்பர் ரமணனின் உறவினனான ஸ்ரீதரைச் சந்தித்தேன். நட்பு ஆழப் பட்ட போது மகிழ்ந்த நான், ஸ்ரீதர் கல்யாணப் பேச்சை எடுத்ததுமே சட்டென்று கலவரமடைந்தேன். கத்தோலிக்க முறைப்படி தேவாலயத்தில் நடந்து முடிந்த கல்யாணம் என்ற நான்கு வருடப் புயலின் தாக்கம் என்னில் குறைந்திராத நேரம். பெற்ற பிள்ளை கிடைக்காமல் மனசொடிந்து பைத்தியம் பிடிக்காத குறையாக சிங்கப்பூரில் கிடைத்த வேலையை ஏற்றுக் கொண்டு ஒரு வருடம் முடிந்திருந்தது. முதலில் மறுத்து, ஸ்ரீதர் விடாமல் முயன்றதில், பலவற்றையும் ஆராய்ந்து பேசித் தீர்மானித்தது பதிவுத் திருமணம். ஸ்ரீதர் எனக்காக கிருஸ்துமஸையும், அவனுக்காக நான் தீபாவளியையும் கொண்டாடி அவரவர் சுயத்திற்குப் பாதகமேயில்லாமல் அமைந்த பன்னிரண்டு வருட வாழ்க்கை பலரின் பொறாமைக்குக் இலக்காகியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமிருந்த போது, ஆல்பர்ட்டிடம் மேற்படிப்புக்கு சிங்கப்பூர் வருகிறாயா என்று போனில் கேட்டதுமே, எப்போதுமே என்னிடம் அவனுக்குப் பேசும் போதிருந்த தயக்கத்தையும் மீறி குரலில் வெளிப்பட்ட சின்ன ஒரு துள்ளலான மகிழ்ச்சியுடன்," ஓ யெஸ், வரேன்", என்றிருந்தான். மேற்படிப்புக்கு வெளிநாடு செல்வது அவனின் சிறு வயது ஆசை என்றும் ஆர்வமாகச் சொன்னான். அவனுடைய அப்பா டேவிட் மட்டும் ஏதோ நான் அவரிடம் பெரிய ஒரு உதவி கேட்பதைப் போல யோசித்துக் கொண்டே, பட்டும் படாமலும் பதில் சொன்னார். "ம், பாப்போம். ப்ளஸ் டூல நல்லா செஞ்சா இங்கயே படிக்கட்டுமே,. இப்ப எதுக்கு திடீர்னு", என்ற அந்தக் குரலில் தோய்ந்திருந்த வரட்டுக் கௌரவமும், பந்தாவும் மேற்கொண்டு செயல் படாமல் என்னை முடக்கியிருந்தன. ஆல்பர்ட்டின் எதிர்காலத்திற்காக, அவனுடைய பொருளாதார மற்றும் தனிமனித பலத்திற்காக என்றெல்லாம் அதுவரை நான் சொன்னது எல்லாவற்றையும் காதிலேயே போட்டுக்கொண்ட சுவடேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெரிந்தவர்கள், தெரிந்தவர்களுக்கு தெரிந்தவர்கள் என்று யார் யாருக்கோ உதவி செய்து முன்னேற்றப் பாதையைக் காட்டிய எனக்கு, என் சொந்த மகனின் மேற்படிப்பு செலவையும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சில வருடங்களாகவே வளர்த்துக்கொண்டிருந்த ஆழ்மன நோக்கம் மட்டும் விடாமல் மேலெழுந்தபடியே தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;000&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீதர் மட்டும் அத்தோடு விடாமல், எனக்குத் தெரியாமலே சென்னைக்குத் தொலைபேசியில் பேசியதில், டேவிடின் இரண்டாவது மனைவி கிரேஸின் வாயிலாகவே பற்பல உண்மைகளை அறிந்து கொண்டிருந்தான். குடும்பத்தை நடத்தத் தெரியாத டேவிட் வெட்டி பந்தா, ஓட்டைச் சிநேகிதம் என்று இன்னமும் அப்படியே தான் இருந்தாராம். வரவு செலவு விஷயத்திலோ முன்பை விட இன்னும் மோசம். ஸ்ரீதர் சொல்லச்சொல்ல என்னுள் ஆச்சரியம் மிகுந்தது. வாழ்வனபவங்கள் வழி ஒரு மனிதன் தொடர்ந்து கற்றுத் தன்னை மேம்படுத்திக் கொள்ளா விட்டால், யாரால் தான் உதவ முடியும். திட்டமேயில்லாமல் செலவழித்து, பகட்டு வாழ்க்கைக்காகக் கிடைத்த இடத்திலெல்லாம் கடன் வாங்கி, கடனை அடைக்க வேறொரு கடன் என்று என்னோடு வாழ்ந்த நான்கு வருடங்களில் என்னைத் தவிர எல்லாவற்றையும் அடகு வைத்தும் விற்றும் அழித்த போக்கு தொட்டில் பழக்கமாய்த் தொடருகிறது போலும் என்று வேதனையுடன் நினைத்துக் கொண்டேன். இந்த லட்சணத்தில் இன்னொரு திருமணம், அதன் அறுவடையாய் ஒரு மகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீதர் கேட்ட போது, அரை மனதுடன் ஒப்புக் கொள்வதைப் போலத் தான் டேவிட் ஒப்புக்கொண்டார். சட்டப்படி என் பெயரில் மகனை ஒப்படைத்தால் மட்டுமே, சிங்கப்பூரில் குடிநுழைவு மற்றும் பல்கலைப் படிப்புச் செலவு ஆகியவை சாத்தியம் என்ற நிலையில் வழக்கறிஞரின் உதவியை நாட வேண்டியிருந்தது. அவருக்கு சேவைக் கட்டணம், ஆங்காங்கே போக வர ஆட்டோச் செலவுகள், வீஸா, டிக்கெட் என்று காசோலைகள் சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குப் பறந்த படியேயிருந்தது. அது தவிர, ஆல்பர்ட்டின் இணைய உபயோகத்திற்கும், அவனின் நண்பனுக்குப் பிறந்தநாள் பரிசு, விருந்து என்ற செலவுகளுக்கும். இது தவிர அடிக்கடி போன்பேசியதில் எகிறிய தொலைபேசிக் கட்டணம் என்று சமீபத்தில் செலவுகள் அதிகம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தான் ஒப்புக் கொண்டதற்கு குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில், "நான்ஸி, ஆல்பர்ட் முன்ன மாதிரியில்ல. இப்பல்லாம் வீட்டுல பெரியவங் கிட்ட எதிர்த்துப் பேசறான். சண்டே சர்ச்சுக்குக் கூட வரதேயில்ல. அவன வழிக்கிக் கொண்டு வரதுக்கு நீ தான் சரி, அதான்", என்று போது சிரிப்பைத் தவிர்க்க முடியவில்லை. இயலாமையை பூசி மறைக்க எத்தனை வித ஜாலங்கள் டேவிட்டுக்குத் தெரியும் என்று நான்கு வருடங்கள் உடன் வாழ்ந்த எனக்கா தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;000&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஆல்பர்ட்ட நீங்க படிக்க வைக்கறேன்னு சொல்றது உண்மையா அவருக்கு பெரிய பாரம் கொறஞ்சாப் போலதான். இப்ப இருக்கற வீடு கடன்ல இருக்கு. படிக்க வைக்க கஷ்டம் தான்", என்று கிரேஸ் சொன்ன போது பக்கத்தில் டேவிட் இல்லை என்று எளிதில் யூகிக்க முடிந்தது. பையனைப் பேசச் சொன்னதும்," ஆல்பர்ட்டும் அவங்கப்பாவும் தூத்துக்குடி போயிருக்காங்க", என்று சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வாரமே பேசும் போது, ஆல்பர்ட்டின் குரலில் முன்பிருந்த உற்சாகம் மறைந்திருந்ததை என்னால் உணர முடிந்தது. துருவித் துருவிக் கேட்டும் ஒன்றுமே சொல்லவில்லை அவன். ஸ்ரீதர் பேசும் போது," வெளிநாட்டுக்குப் போப்பா, படி. ஆனா, காசுகாசுன்னு பறப்பாளே அவ, போயும் போயும் அவகிட்ட நீ ஏம்பா போகணும்னு தூத்துக்குடியில பாட்டி கேட்டாங்க. படிக்கதான் வைப்பாளா இல்ல காசுக்காகவேண்டி வேலைக்கி அனுப்புவாளான்னு என்ன தெரியும் நமக்குனு பாட்டிக்கி ஒரே கவல. அதான் அப்பா மறுபடியும் குழப்பமா இருக்காரு", என்று சொன்னதும், ஸ்பீக்கரில் கேட்ட எனக்கு சுர்ரென்று கோபம் வந்தது. என் முகத்தில் அதைக் கவனித்த ஸ்ரீதர் சீக்கிரமே இணைப்பைத் துண்டித்து விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆல்பர்ட் என்னைச் சீக்கிரமே மறக்கவும், முடிந்தால் வெறுத்து ஒதுக்கவும் சிறுவயதிலிருந்து என்னைப்பற்றிப் பிள்ளையிடம் மிகைப் படுத்தியும் திரித்தும் சொல்லிக் கொடுத்து வந்ததே டேவிட்டின் அம்மா தான். முனைப்பாகச் செயல் பட்டதில் அவருக்கு ஓரளவிற்கு வெற்றியும் கிடைத்தேயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப் பிறகு, பேசிய ஒவ்வொரு முறையும் ஆல்பர்ட்டுக்கு என்னிடம் முன்பிருந்த கொஞ்சநஞ்ச சிநேகம் கூட இருக்கவில்லை என்றுணர்ந்தேன். ஸ்ரீதரிடம் மட்டும் இயல்பாகப் பேசினாற்போலத் தான் இருந்தது. என்னிடம் மட்டும் ஏன் திடீர் வெறுப்பு. ஸ்ரீதர் அப்படி இல்லவேயில்லை என்று சாதித்தான். அவனும் அப்படியே உணர்ந்திருந்தான் என்றே எனக்குத் தோன்றியது. ஆனாலும், எல்லாம் என் கற்பனை என்று சொல்லி மழுப்பப் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிரவு அவனுடைய அம்மா போன் பேசும் போது சுரத்தேயில்லாமல் இருந்தான். உணர்ந்து கொண்டவர் ஏதோ கற்பனை செய்துகொண்டு, "ஏதும் பிரச்சனையா ஸ்ரீதர்? அவகூட சண்டையா?" என்று துருவித் துருவிக் கேட்ட போது சள்ளென்று விழுதான். "இன்னும் ஒரு நாலு வருஷம் பொறுத்துக்கோ. அதுக்கப்புறம் உன்னோட தயவு அவளுக்குத் தேவையிருக்காது. இல்லையா,..என்ன செய்ய? எஞ்சினீரிங் தானே படிக்கப்போறான்?", என்று பொடிவைத்துப் பேசியபோது பொறுக்கமுடியாமல் போனையும் சீக்கிரமே துண்டித்து விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;000&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் வயிற்றில் பிறந்த ஆல்பர்ட்டைத் தன் சொந்த மகனாக நினைக்கும் பெருந்தன்மை ஸ்ரீதரனின் தனித்தன்மை. "நான்ஸி நீ ஏன் இப்ப டெண்ஷனாகற. அப்பனப் போலவே இருக்கான் புள்ளன்னெல்லாம் இப்பவே ஒம்மனச மூடிக்காத, ப்ளீஸ். இன்னும் அவன் இங்க வரவேயில்ல. அடுத்த வாரம் தான் வரவே போறான். அதுக்குள்ள போட்டோவப் பார்த்து, போன்ல அவம்பேசறத வச்சி முடிவு பண்ணாத. ஏன் உன்ன மாதிரி ஒம்பையன் இருக்கறதா யாராவது சொன்னா சந்தோஷப் படற, நீ அவங்கப்பா மாதிரி இருக்கறதா சொன்னா ஏன் வெறுக்கணும். அவங்கப்பாவப் போல அவன் இருக்கறது அவனோட குத்தமா என்ன? சொல்லு, ம்?", என்று ஸ்ரீதர் கேட்டான்.&lt;br /&gt;இரண்டு வருடங்களுக்கு முன்பு அலுவலகப் பயணமாக சென்னைக்குப் போய் வந்து போது, ஆல்பர்ட்டைப் பற்றி சொன்ன போது நான் அடைந்த பூரிப்பை என்னைப் போலவே அவனாலும் மறக்க முடியவில்லை. " பெயிண்டிங்க் பண்றானாம். அச்சு உன்ன மாதிரியே தான் இருக்கான். கண்ணு மூக்கெல்லாம் டிட்டோ உன்னோடது. கடைசியா கைய அசச்சி கிட்டே வலது கையால தலையக் கோதினாம்பாரு, உன்னப் பார்த்த மாதிரியே இருந்துது", என்று ஸ்ரீதர் சொன்ன போது சட்டென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும்," என்னைப் போலவே தமிழிலக்கியத்திலும் ஆர்வமுண்டா", என்ற கேள்வியும் என்னுள் எழுந்தது. பதிமூன்று வருடப் பிரிவையும் கடந்த ரத்த பாசம் ஒரு சில கணங்கள் என்னை நெகிழ்த்தித் தான் விட்டது. தொடர்ச்சியாக என்னுடைய சாயலை வெளிப் படுத்திய ஆல்பர்ட் சிலவேளைகளில் டேவிட்டை எரிச்சலூட்டினானோ என்ற கவலையும் கூடவே என்னுள் எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"பாக்கறதுக்கு எப்படியிருந்தா என்ன ஸ்ரீதர்? குணம்? அதுதான் என்னால சகிச்சுக்க முடியுமான்னு சந்தேகமா இருக்கு, ஸ்ரீதர். பதிமூணு வருஷம் கழிச்சு மீண்டும் டேவிட்டோட வாழறாப்போல ·பீல் பண்ண ஆரம்பிப்பேனோன்னு பயமாயிருக்கு. அப்படியிருந்துச்சுன்னு வைய்யேன், நா ஒரு வழியாயிடுவேன். நா சொன்ன பேச்சு கேக்கறதில்ல. செய்யவேண்டியத, ஒரு ஈமெயில் ரெகுலரா பண்ணுடான்னு சொன்னதச் செய்யறதில்ல. அதுக்கு நல்லா சமாளிக்கற மாதிரி பதில். பணம் வேணும்னா மட்டும் கேக்கத் தெரியுற சரியான காரியவாதி,.. குணத்துல அப்படியே டேவிட் தான்", என்றதும் ஸ்ரீதர் பொறுமையிழந்து கூடத்திலிருந்து குளியலறைக்குள் நுழைந்து குளிக்கத் துவங்கி விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;000&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆல்பர்ட் ஒரு வழியாக விமானம் ஏறியே விட்டான். எதிர் கொண்டழைக்க சாங்கி விமான நிலையத்துக்குப் போயிருந்தோம், ஸ்ரீதரும் நானும். மூன்று வயதில் பார்த்த பிறகு அவனை அவனது பதினாறாவது வயதில் பார்க்கப் போகும் பதற்றம் என்னில் நான் எவ்வளவு முயன்று விலகாமல். பார்த்ததும் அவனிடம் எப்படிப் பேச என்று ஒரே குழப்பம். ஏதோ முதன்முதலாக பிரமுகர் ஒருவரைச் சந்திக்கப் போவதைப் போல ஒரு படபடப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையிலிருந்து வந்த விமானம் தரையிறங்கிவிட்டிருந்தது. "நான்ஸி, நீ ஆல்பர்ட்ட டேவிட்டோட பிரதியாப்பாக்காத. சொல்லப் போனா, உன்னுடைய சாயல்களையோ சுவடுகளையோ தேடறதக்கூட மறந்தும் செய்யாத. ரெண்டுமே உனக்கு நிம்மதியக் கொடுக்காது. அப்படிப்பார்த்தும் யோசிச்சும் பழகிட்டேன்னா, உன்னோட மனசு அதன் அந்தந்த நிலைகேத்தாப் போல யோசிக்க ஆரம்பிக்கும். உன் நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாக் குறையும். நீ ஆல்பர்ட்ட உன் மகன்ற உணர்வையும் தாண்டி ஒரு தனி மனிதனா, ஒரு சிநேகிதனாப் பாரு. அவன் மூணு நாலு வயசுலயே உன்னப் பிரிஞ்சு, எவ்வளவோ குழப்பங்கள அனுபவிக்க ஆரம்பிச்சவன். உன்னப் புரிஞ்சுக்க அவனுக்கு டைம் கொடு. அந்த டைம்ல நீ அவனையும் புரிஞ்சுக்கோ. ரிலாக்ஸ்", என்று சொல்லிக் கொண்டே என் தோளில் தட்டிக் கொடுத்த ஸ்ரீதரைப் பார்த்துச் சிரித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டே ஆல்பர்ட் வருவது தெரிந்தது. "ஹாய் ஆல்பர்ட், வெல்கம் டு சிங்கப்பூர்", ஸ்ரீதர் குதூகலத்துடன் கூவியபடி கையை அசைத்து வரவேற்றான். டேவிடைப்போலவே என்ன உயரம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப்போல,.. கிளைந்து பரவக் கிளம்பிய சிந்தனையைக் கட்டுப் படுத்திக் கொண்டே,"ஆல்பர்ட், எப்படியிருக்க?", என்றதும்,"ம்,.. நல்லா இருக்கேன்", என்றபடி காரில் ஏறினான். வீட்டிற்குள் நுழைந்த சில மணிநேரங்களிலேயே ஆல்பர்ட் குளித்துவிட்டு சாப்பிட மேசைக்கு வந்தான். ஸ்ரீதர் தன்னையறியாமல், "ஏய், திரும்பு. உன்னோட முகத்துல நான்ஸிக்கு இருக்கற மாதிரியே மரு இருக்கு. எங்க காட்டு", என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ம், இப்ப ஒரு வருஷமாதான் வந்திருக்கு. இது வந்ததுலயிருந்தே அப்பா என்கிட்டயிருந்த விலகிட்டாரு. நா கூட குழம்பிட்டிருந்தேன். ஒரு நாள் கோபத்துல 'உன்னப்பாக்கறப்பயெல்லாம் அவ நெனப்பு வருது',னு சொன்னப்பதான் எனக்கு புரிஞ்சுச்சு. இனிமே அப்பாவுக்கு எம்மூஞ்சி, அதுல இருக்கற மரு, அம்மா நினைப்பு எதுவும் வராது. குடிக்கறது கூட கொறஞ்சுடும்னு நினைக்கிறேன்", என்றபோது ஸ்ரீதர் முகம் முழுக்க தர்மசங்கடத்தைப் பூசியபடியே அதிர்ந்திருந்த என்னைப் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(முற்றும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9687302-115493703355118497?l=jeyanthisankar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyanthisankar.blogspot.com/feeds/115493703355118497/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9687302&amp;postID=115493703355118497&amp;isPopup=true' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/115493703355118497'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/115493703355118497'/><link rel='alternate' type='text/html' href='http://jeyanthisankar.blogspot.com/2006/08/blog-post.html' title='சாயல்  ( சிறுகதை - போட்டிக்காக)'/><author><name>ஜெயந்தி சங்கர்         (Jayanthi Sankar)</name><uri>http://www.blogger.com/profile/04533483437106248358</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9687302.post-115172903821875065</id><published>2006-07-01T12:41:00.000+08:00</published><updated>2006-07-01T12:46:57.783+08:00</updated><title type='text'>கல்மரம்</title><content type='html'>&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=487660&amp;amp;sid=uwP90sCIP6" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆசிரியர் - திலகவதி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;வாசிப்பு : ஜெயந்தி சங்கர்&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;தலைப்புத் தேர்வு கவித்துவமாக இருக்கிறது. கற்களால் வளரும் மரமாக கட்டடத்தைச் சொல்வது அழகு. இரண்டும் நிழல் தரும் என்றாலும் கட்டடத்திற்கு உயிரில்லை. அதைக்கட்டியவர்களுக்கோ அங்கீகாரமில்லை. பெரிய கோவிலை இராஜராஜசோழன் கட்டினான் தாஜ்மஹாலை ஷாஜ்ஜஹான் கட்டினான் என்பதுபோல முதல்போட்டவரைத் தான் கட்டடத்தைக் கட்டியவராகப் பார்க்கிறது சமூகம் என்கிற ஆதங்கம் ஆசிரியருக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அடித்தட்டு மக்களின் ஒரு பகுதியினரான கட்டுமானப்பணியார்களின் கடின வாழ்வு மற்றும் தொழில்முறைச் சிக்கல்களை மிகவும் அக்கறையுடன் அணுகியிருப்பது பாராட்டுக்குரியது. இவர்களுக்கு காப்பீடு, பாதுகாப்பு என்று எதுவுமே இல்லை. முதலாளிகளின் உழைப்புச் சுரண்டல் கதை நெடுகிலும் கண்டிக்கப்படுகிறது. தவிர, வேலையின்மையும், கிடைத்த வேலையில் மனநிறைவில்லாமையும், மேஸ்திரி/கொத்தனார்களின் சீண்டல்கள் மற்றும் உரிமை மறுப்பு போன்ற ஏராளமான அழுத்தங்கள் நிறைந்த வாழ்வைக்கொண்ட இவர்கள் எப்படி சமூகத்திலிருந்து அந்நியமாகிப் போகிறார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்காக ஆசிரியர் களப்பணிமேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கிய பாத்திரங்கள்---------------------------&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிலட்சுமி, காசி, காவேரி, சுசீலா, கன்னியம்மாள், ஆர். ஆர். எம், ராகினி, அத்தை போன்றோர்.&lt;br /&gt;&lt;br /&gt;கதைச்சுருக்கம்-------------------&lt;br /&gt;&lt;br /&gt;காசி வேலைகிடைக்காமல், என்றாவது கிடைக்கும் சில்லரைவேலையைச் செய்து சம்பாதிக்கும் ஓரு குப்பத்து இளைஞன். எந்தவேலையும் ஒழுங்காகத் தெரியாதவன். அவனது தாய் ஆதிலட்சுமி மேஸ்திரியாக இருந்து வேலையின் போது விபத்தில் இறந்த தன் கணவனின் கதி பிள்ளைக்கு வரக்கூடாது என்ற கவலையில் கொல்லு வேலைக்குப்போகக்கூடாது என்று அவனிடம் சத்தியம் வாங்கிக்கொள்கிறாள். அவளின் ஒரு மகள் கன்னியம்மாள் கர்பவதி. புகுந்தவீட்டில் பிரச்சனை என்றும் கணவனுக்கு வரக்கூடாத பால்வினை நோய் வந்திருக்கிறது என்றும் சொல்லிக்கொண்டு அம்மா வீட்டுக்கு வந்துவிடுகிறாள். கடைசி மகள் காவேரி பத்தாவது படித்திருக்கும் துடிப்புள்ள பெண். அவள் சுசீலாவோடு நட்புகொள்கிறாள். சுசீலா தன் நல்வாழ்வை விட்டுவிட்டு கட்டடத்தொழிலாளிகளின் நலனுக்காகவே குப்பத்தில் வந்து வாழும் பெண். காசிக்கு மணமுடிக்கிறாள் ஆதிலட்சுமி. வந்துசேரும் மருமகள் ராகினி வசதியாக வாழ்ந்தவள். முதலில் இவர்களின் வீட்டைக்கண்டு முகம் சுழித்துவிட்டு, கொஞ்சநாளிலேயே காசிக்கு தன் சகோதரன் மூலமாக வாட்ச் மேன் வேலை வாங்கித் தருகிறாள். அடுக்ககம் கட்டும் தளத்தில் ஷெட் ஒன்று கட்டிக் கொடுக்கிறார் ஆர். ஆர். எம் என்னும் முதலாளி. அங்கே குடியேறும் காசி, ஓரளவிற்கு கையில் காசுபார்க்கிறான். அங்கேயே ராகினிக்கும் கணக்கர் வேலை கிடைக்கிறது. அந்த முதலாளி கொத்தனார் சித்தாள் மற்றும் பிற வேலையாட்களை மனிதாபிமானமில்லாமல் நடத்தும் விதத்தையெல்லாம் இவர்கள் காணநேர்கிறது. உழைப்புச் சுரண்டலையும் பாதுகாப்பில்லாத எளியமக்களின் வாழ்க்கையையும் காணும் ராகினி மனம் மாறி அவர்களுக்காக சுசீலா அமைக்க நினைக்கும் யூனியன் நிறுவும் பணியில் கைகொடுத்து, கொத்தனார் பயிற்சிக்கும் விண்ணப்பித்துச் சேருகிறாள். தொழிலாளர்களுக்குச் சேரவேண்டிய சம்பளபாக்கியை யூனியன் மூலம் எப்படி வாங்கலாமென்று தொழிலாளர்களுக்குச் சொல்லி நம்பிக்கையூட்டுகிறாள்.&lt;br /&gt;---------&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிலட்சுமி கதாபாத்திரம் இயல்பும் சிறப்பும் கொண்டதாக அமைந்திருக்கின்றது. அவளின் பாசம், தவிப்பு மற்றும் கவலை யாவும் ரசிக்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல இட்லிக்கடை வைத்திருக்கும் அத்தை பாத்திரமும் அதற்கு நிகரான சிறப்பினைக் கொண்டுள்ளது. இருவரின் உணர்ச்சிவெளிப்பாடுகள் மற்றும் உளவியல் சார்ந்த சிந்தனைகள் அருமை.&lt;br /&gt;&lt;br /&gt;காசி ஒரே ஒரு முறை குடிப்பதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் அம்மக்களிடையே குடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. சரி, குடிக்காதவன் குடித்தான் என்று கொள்வோம். அம்மாவுக்கு செய்துகொடுத்த சத்தியத்தை மீற முயற்சிப்பதாகவும் அது தொடர்பான சில சிக்கல்களையும் சொல்லியிருந்தால் ஒரு எதார்த்த இளைஞனாக இருந்திருப்பான் காசி.&lt;br /&gt;&lt;br /&gt;காசிக்கு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யும்போது பெண்பார்த்தல் கட்டம் வருகிறது. யாருக்குமே தெரியாமல் குழாயடியில் தண்ணீர் பிடிக்க வரும் பெண்ணைப்பார்த்துவிட்டு வருவதாக கதையில் வருகிறது. அலங்காரம் செய்து நிற்கவைத்துப் பெண்பார்ப்பதைக் கேவலமாக நினைக்கும் இவ்வெளிய மக்களிடமிருந்து நடுத்தரவர்க்கம் கற்றுக்கொள்ளவேண்டியது இது. இதுபோல சில சின்னச் சின்ன ரசிக்கும் படியான எளியமக்களின் வாழ்க்கைக் கூறுகள் கதை நெடுகிலும் வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்பாத்திரங்கள் எல்லாமே ஏதோ ஒரு சிறப்பு கொண்டவையாக அமைக்கப்பட்டுள்ளன. ஆதிலட்சுமி அக்கறையான தாயாக, காவேரி துடுக்கான முன்னேறத் துடிக்கும் இளைஞியாக, கன்னியம்மாள் பொறுமைநிறைந்தவளாக, சுசீலா தொழிலாளர் நலனுக்காகவே தன் முனைவர் வாய்ப்பினைக்கூட உதறியவளாக, ராகினி தொழிலாளிர் நலனைப்பற்றி யோசிப்பவளாக வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுமானப் பணியாளர்கள் எப்போதும் முதலாளியின் ஏதோ ஒருவகையான உழைப்புச் சுரண்டலையும் அலட்சியத்தையும் சந்தித்து வருகிறார்கள். இதற்கு நிறைய சிறியதும் பெரியதுமான நம்பகத்தன்மையுடைய நிகழ்வுகள் சொல்லப்பட்டுள்ளன. எடுத்துக்கொண்ட கருவுக்கு இது மிக அவசியம். ஆனால், அதே அடித்தட்டு மக்களிடையேயும் அந்த முதலாளிகளின் சுரண்டல் மனப்பான்மை கொண்ட சிலர் இருக்கலாம். அவர்களையும் பாத்திரங்களாக உருவாக்கி உலவவிட்டிருக்கலாம். அதேபோல முதலாளிகளில் நல்லவர்களும் இருக்கிறார்கள். அத்தகைய முதலாளிகளையும் காட்டியிருக்கலாம். இப்படிச்செய்யும்போது இயல்புத்தன்மை கூடியிருக்கும். ஆசிரியர் ஒரு காவல்த்துறை அதிகாரி. சட்ட மீறல்களைக் கொண்ட நிகழ்வுகளைச் சொல்லி அதற்கேற்ற வழக்கு தண்டனை என்று அவர் பணிசார்ந்து இன்னும் சிறப்பாக எழுதியிருக்கமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுசீலாவின் கதாப்பாத்திர அமைப்பு மிகவும் மேலோட்டமாக இருப்பதாக வாசகன் உணர்வான். அவளுக்குப் பின்புலமாக ஒரு கிளைக்கதை அமையாதது ஒரு காரணம். அப்படி அமைந்திருக்கும் பட்சத்தில் முனைவர் பட்ட வாய்ப்பைக்கூட அவள் மறந்து தொழிலாளர்களுக்காகவே யோசிப்பதற்கும், செயல்படுவதற்கும், குப்பத்தில் வாழ்வதற்குமான காரணங்கள் சரியாக அமைந்து கதையே கனம் கூடியிருக்கும்.&lt;br /&gt;ராகினியின் பாத்திர அமைப்பில் முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் பெரிய வேறுபாடு. முதல் பாதியில் புகுந்த வீட்டின் வறுமையை விமரிசித்தபடியிருக்கும் இவ்விளம்பெண் மறுபாதியில் தொழிலாளர்களுக்காக யோசிக்கிறாள். அவர்கள் சுரண்டப்படுவதற்காக வருந்துகிறாள். சில நிகழ்வுகளைக் காண்கிறாள் என்றாலும் அவளின் மனமாற்றத்திற்கான காரணம் திடமாகச் சொல்லப்படவில்லையோ என்ற நெருடல் வாசகனுக்கு எழாமல் இருக்காது. மூன்று ஸ¥ட் கேஸ்கள் நிறைய எதையோ நிரப்பி ( ப 114 ) ராகினியிடம் ஆர்.ஆர்.எம் கொடுத்து பத்திரமாக மறைத்து வைக்கச்சொல்கிறார். அதில் பணமும் நகையும் நிறைய வைத்திருந்ததாக பிறகு அவரே சொல்கிறார். போலீஸ் சோதனை செய்து பிடித்தால், ராகினி மாட்டிக்கொள்வாள் என்ற நோக்கத்துடன் அவர் செயல் பட்டிருப்பது வாசகனின் ஊகத்திற்கு விடப்படுகிறது. ஆனால், இதுவே ராகினியின் மனமாற்றத்திற்கு முக்கிய காரணம் என்று நிறுவப்படவில்லை. வாசகனே தன்னைச் சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டுமானால் உதவலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னைத் தமிழில் உரையாடல்கள் இயல்பாக இருக்கின்றன. இருந்தாலும், உரையாடல்களால் மட்டுமே நிரம்பிவிடும் சில அத்தியாயங்கள் வாசகனுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய அனுபவத்தினை கொடுக்க தவறிவிடுகிறது. Narration என்றறியப்படும் கதை சொல்லலில் ஆசிரியர் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயம் இது நேர்ந்திருக்காது. அதோடு புதினம் முழுமையடையவும் உதவியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களே கொத்தனார் பயிற்சிக்குப் போகிறார்கள். காசி வாட்ச் மேன் வேலையே போதுமென்று நினைத்து விட்டானோ? இத்தனை முற்போக்குச் சிந்தனைகொண்ட பெண்கள் சூழ்ந்திருக்கும்போது கொஞ்சம் கூடவா ஒரு இளைஞனுக்கு வேகம் பிறக்காது? காசி பயிற்சிக்கு போகாதது குறையே. அவன் போயிருந்தால், யூனியனிலும் அதுகொடுக்கும் பாதுக்காப்பிலும் ஆதிலட்சுமிக்கும் வாசகனுக்கும் நம்பிக்கை வந்தாற்போலிருந்திருக்கும். நிச்சயம் கதைக்கு வலுச்சேர்த்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பரிசு மற்றும் விருதுகள் வாசகனைப் பலவேளைகளில் குழப்பித்தான் விடுகின்றன. பரவலான வாசிப்புள்ளோர் இதற்குப் பல எடுத்துக்காட்டுகளை எளிதில் முன்வைத்துவிடுவார்கள். இந்தக் கதையின் நோக்கத்திற்கும் கருவிற்கும் கொடுக்கப்பட்டுள்ள விருதேயன்றி படைப்புக்கு இல்லை என்பதை ஒரு சாமான்ய வாசகனும் நிச்சயம் படித்துமுடித்ததும் புரிந்துகொள்வான். களப்பணி இருந்துகூட ஏதோ செவிவழிச்செய்திகளை வைத்து எழுதிவிட்டது போன்ற ஒரு நிறைவின்மை தோன்றிவிடுவதைத் தவிர்க்கமுடியவில்லை. பிரச்சனைக்குத் தீர்வு எனும் ஒரே குறிக்கோளை மட்டுமே கவனத்தில் கொண்டு கதையை நகர்த்தியிருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். பிரமாண்டமான விளம்பரங்கள் எப்படி திரைப்படத்தினைப் பற்றி ஒருவரிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துமோ அதேபோல இந்நூலுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விருதும் வாசகனில் இருக்கக்கூடிய எதிர்பார்ப்பைக் கூட்டிவிடுகிறது. அதுவும் வாசகனுக்கு ஏற்படக்கூடிய ஏமாற்றத்திற்கு ஒரு காரணமாகிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிழைகள் நிறைய இருப்பதைப்பார்க்கும்போது இது திருத்தப்பட்ட பதிப்பு தானா என்ற கேள்வி எழுகிறது. காட்டாக ( ப. 14) த. ஜெயகாந்தன் என்று இருக்கவேண்டிய இடத்தில் த. ஜெகாந்தன் என்று அச்சாகியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்மரம்நாவல்ஆசிரியர் :&lt;br /&gt;திலகவதி&lt;br /&gt;(திருத்தப்பட்ட) இரண்டாம் பதிப்பு 2005&lt;br /&gt;அம்ருதா பதிப்பகம்&lt;br /&gt;எண் 5,&lt;br /&gt;5வது அவென்யூசக்தி நகர்&lt;br /&gt;போரூர்சென்னை - 600116&lt;br /&gt;91-44- 2252 2277&lt;br /&gt;&lt;a href="mailto:amrudhapathippagam@yahoo.com"&gt;amrudhapathippagam@yahoo.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;---------ஜெயந்தி சங்கர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9687302-115172903821875065?l=jeyanthisankar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyanthisankar.blogspot.com/feeds/115172903821875065/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9687302&amp;postID=115172903821875065&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/115172903821875065'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/115172903821875065'/><link rel='alternate' type='text/html' href='http://jeyanthisankar.blogspot.com/2006/07/blog-post.html' title='கல்மரம்'/><author><name>ஜெயந்தி சங்கர்         (Jayanthi Sankar)</name><uri>http://www.blogger.com/profile/04533483437106248358</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9687302.post-115140092959794642</id><published>2006-06-27T17:29:00.000+08:00</published><updated>2006-08-18T05:10:40.846+08:00</updated><title type='text'>தலைச்சன் ( சிறுகதை )</title><content type='html'>'பகல்நேரக் காப்பக'த்திலிருந்து அப்பாவை அழைத்து வீட்டிற்கு வந்துசேர்ந்தபோது இருள் கவியவாரம்பித்திருந்தது. கால்சட்டையைக் கழற்றச் சொன்னபோது அடம் பிடித்தார். பேண்டின் பக்கிளை அவிழ்த்தும் கழற்றவிடாமல் காலைமடித்துக் கொண்டு டபக்கென்று படுக்கையின் மீது உட்கார்ந்து விட்டார். கைலியைக் கட்டிக்கொண்டால் வெளியே போகக்கூடாது என்பது அவரது எண்ணம். அது அவராகவே தனக்குள் ஏற்படுத்திக் கொண்ட நியமம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேண்ட்டைமாற்றிக் கைலியைக் கட்டிவிட்டாலே பெரும்பாலும் வீட்டைவிட்டுக் கிளம்பமாட்டார். என்றாலும் அப்பாவை முழுமையாக நம்பவிடவும் முடியாது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் திடீரென்று ஒருநாள் வெளி ‘கேட்’ பூட்டாமல் இருக்கவே கைலி கட்டியிருந்த அப்பா மேல்சட்டையைப் போடாமலேயே வீட்டைவிட்டுக் கிளம்பிச் செருப்பணியாத தன் கால்போனபோக்கில் போய் விட்டார். தன் பெயர், முகவரி போன்றவிவரங்கள் அவருக்கு மறந்து விட்டிருந்த நேரம். பகுக்கும் அறிவு மழுங்கி குடும்பத்தினரையும் அடையாளம் தெரியாதிருந்தது அவருக்கு. சமீபகால நினைவுகள் மறைந்து அவரின் மாணவப்பருவத்தில் நடந்தவற்றைப்பற்றியெல்லாம் சம்பந்தமேயில்லாமல் பேசினார். குளித்து முடித்து கூடத்திற்கு வந்த நான் அப்பாவைக் காணாமல், வீட்டுகேட்டும் திறந்துகிடப்பதைப் பார்த்துவிட்டு திடுக்கிட்டு ஓடோடி, அடுக்கு மாடியிலிருந்து கீழேயிறங்கி எந்தத்திக்கில் போயிருப்பார் என்று யூகிக்கமுடியாது நாலாப்புறமும் கண்களை ஓட்டிக்கொண்டே ஓடியோடித் தேடினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த திடலில் சிறுவர்கள் கூட்டம். "பைத்தியம், பைத்தியம்", என்று பல இனப்போக்கிரிப்பிள்ளைகள் சிலர் கத்திக்கொண்டும் மற்ற சிறார்கள் சுற்றி வேடிக்கை பார்த்தும் கொண்டிருந்தனர். கூட்டத்தை விலக்கி அப்பாவைக் கூட்டிக்கொண்டு வருவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. வரமாட்டேன் என்று ஒரே பிடிவாதம். நான் பெற்ற பிள்ளையைப்பார்த்துக் கொள்வதைப்போல என்னைப் பெற்றவரைப் பார்த்துக் கொள்ளும் நிர்பந்தம். நான் சிறுவனாய் இருந்தபோது அப்பாவிற்கு என்னை அதட்டும் உரிமையாவது இருந்திருக்கும். அதட்டிச் சொன்னாலும் அவருக்குப் புரியவும் புரியாதநிலை ஆயிற்றே. அவரைச் சமாளிக்கப்பட்ட பாடுகள், அப்பப்பா,.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'நா உங்கள இன்னிக்கி ‘பிஷான் பார்க்’குக்குக்கூட்டிட்டுப்போறேம்பா,. இப்ப நீங்க லுங்கியக் கட்டிப்பீங்களாம், என்ன,' என்று நைச்சியமாக ஏதேதோபேசி கட்டிவிட்டுக் கையைப்பிடித்துக் கூடத்திற்கு அழைத்து வந்தேன். சோபாவில் உட்காராமல் என் கையை உதறிவிட்டுத் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்தார். அவர் எப்போதும் பார்க்கும் சூரியத் தொலைக்காட்சியையும் உயிர்ப்பித்ததும், கையிலிருந்து ரிமோட்டைச் சடாரென்று பிடுங்கி இரண்டுமுறை அழுத்தி கார்ட்டூன் சானலைப் போட்டுக்கொண்டு, தலையைத் திருப்பி ஒரு வெற்றிப்பார்வையை என்பக்கம் வீசினார். சின்னச்சின்ன மாற்றங்கள் அவரிடம் ஏற்பட்டுவருவதுகுறித்து எண்ணியபடி அவரைப்பார்த்துச் சிரித்தேன். சமையலறைக்குள் புகுந்து தேநீரைத் தயாரித்து எடுத்துக் கொண்டு மீண்டும் கூடத்தை அடைந்தபோது அப்பா எலியைத்துரத்தித் துரத்திப் பூனையடித்த லூட்டியில் தன்னையே மறந்து ஆழ்ந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எண்பத்தியிரண்டு வயதில் இரண்டு வயதுக்குழந்தையின் குதூகலத்துடன் அமர்ந்திருந்தவரிடம் அவரின் பழைய கம்பீரத்தை தேடவேண்டியிருந்தது. ஐம்பத்தெட்டு வயதுவரை கண்ணைப் பறிக்கும் வெள்ளையுடையில் மருத்துவமனையில் 'ஆண் நர்ஸ்' வேலை செய்த அப்பாவின் நினைவு, கலைந்த மேகமாய் மட்டுமே மனதில் இருந்தது. தன்னைவிடப் பன்னிரண்டு வயது இளையவரான அம்மாவைத் தன் நாற்பத்திமூன்றாவது வயதில் தாமதமாகத் திருமணம் செய்து ஒன்பது வருடங்களுக்குப்பின்னர் ஒரே மகனான என்னைப்பெற்றிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையை முழுமையாய் வாழ்ந்த பெருமிதம் அவரின் நடையுடை பாவனைகள் மட்டுமின்றி பேச்சிலும் தெரியும். தனக்கு வயதாகிவிட்டதாய் நம்பமறுத்து, சுத்தம், சுறுசுறுப்பு, செய்நேர்த்தியின் கலவையாக விளங்கிய அப்பா ஓய்வுபெற்றபின் ஒரே வாரம்தான் வீட்டில் இருந்தார். அதற்குள் குட்டிபோட்ட பூனையைப்போல வீட்டைச்சுற்றிச்சுற்றிவந்தார்.சும்மா இருக்க முடியாமல் அவர் பட்ட அவஸ்தை அலாதியாய்த் தானிருந்தது. மிடுக்காக அடர்நீலச் சீருடையணிந்து தேடாமலே கிடைத்த தன் பேரங்காடியின் 'காவல்காரர்' பணிக்குக் கிளம்பிய நாட்கள்தான் அவரின் தன்னம்பிக்கை முழுமையாக வெளியான நாட்கள். சோம்பியிருப்பதை வெறுத்த அவர் தன் 'ஸெக்யூரிட்டி' வேலையை மிகவும் நேசித்தார். ஆயுளின் இறுதி மூச்சின் போது அளிக்கப்பட்ட 'போனஸ்' ஆண்டுகளாகவே தன் வேலையை அவர் நினைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுவாயிலில் நிழலாடியது. சாருதான் வேலைமுடிந்து வீடு திரும்பியிருந்தாள். "ஏங்க, என்னங்க இது 'கேட்'டைப் பூட்டாம? ", என்றபடியே நிறைமாத வயிறு முன்னே வர உள்ளே நுழைந்து சோபாவில் அமர்ந்தவளிடம், "அடடா, மறந்தேபோயிட்டேம்மா", குற்றுவுணர்வுடன் கூறிவிட்டு, அவளுக்கும் ஒரு கோப்பையில் தேநீரை எடுத்து வந்துகொடுத்தேன். சாருவின் முகம் வழக்கத்தைவிட அதிகம் சோர்ந்து காணப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பலமுறை சாருவிற்குத் தரித்த கரு தங்காமல், பத்துவருடங்களுக்குமேல் ஏராளமாகச் செலவு செய்துவிட்டிருந்தோம். இம்முறை கருத்தங்கவென்று ப்ரத்யேக முறைகளைக் கையாண்டார் மருத்துவர். முதல் இரண்டு மாதங்கள் கால்மாட்டில் கட்டிலின் கால்கள் அதிக உயர்வாக இருக்கும் படி ஏற்பாடுகள். அதன்பிறகு இரண்டு மாதங்களுக்குக் கர்பப்பைவாயை தைத்துவிட்டிருந்தார். அதிருஷ்டவசமாக பலன் அவர் நினைத்தபடியே அமைந்தது. நான்கு மாதங்களுக்கும் விடுப்பெடுத்து ஓய்வில் இருந்ததாலேயே பிரசவ சமயம் வரை வேலைக்குப்போகவேண்டிய கட்டாயம் வந்துவிட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு வாரமாவே மாமா கார்ட்டூன் மட்டும்தான் பாக்கறார் கவனிச்சீங்களா, ..ம்?", சிரித்துக்கொண்டே சாரு என்னிடம் சொன்னதுமே, 'மாமா' என்ற பதத்தைக்கேட்டதும் திரும்பிப்பார்க்கும் வழக்கமான இயல்புடன் அப்பா தலையைத் திருப்பிப் பார்த்தார். முன்பின்தெரியாத யாரையோ பார்ப்பதைப் போலத் தன் மருமகளைப் பார்த்துவிட்டு சட்டென்று தொலைக் காட்சிக்குத் திரும்பிவிட்டார். அப்பாவென்று நான் அழைத்தால் யாரோ யாரையோ கூப்பிடுவதைப் போலச் சலனமற்றிருந்தார் சமீபகாலம்வரை. அந்த அளவிற்குச் சிலமாதங்களுக்கு முன்னர்வரை சாருதான் அப்பாவைக் கவனித்துக் கொள்ளும் முழுப்பொறுப்பையும் ஏற்றிருந்தாள். புரிந்தாலும் புரியாவிட்டாலும் சூரியதொலைக் காட்சியையே கண்ணிமைக்காமல் பார்க்கும் அப்பாவிற்கு திடீரென்று ஏற்பட்டிருந்த 'கேலிச் சித்திர' ஈடுபாடு என்னைப்போலவே சாருவுக்கும் விநோதமாய்த் தான் தோன்றியிருக்கிறது.&lt;br /&gt;இரண்டு வாரங்களுக்கு முன்பு சாரு தனது மருத்துவச்சோதனை முடித்து வீட்டிற்கு வந்து என்னிடம் விவரங்கள் சொல்லிக்கொண்டிருந்தாள். 'ஸ்கான்' செய்ததில் பிறக்கப்போவது மகன் என்ற பெருமை அவள் முகத்தில் தெரிந்தது. டக்கென்று திரும்பி என்னைப் பார்த்த அப்பாவின் கண்களில் புதிதாய் ஒரு மின்னல்! ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு எப்போதோ மிகுந்தமகிழ்ச்சியில் என்னைப்பார்த்த அதே பார்வையைப் போலத்தான் இருந்தது. உறுதியாகவும் சொல்ல முடியவில்லை. ஆனால், கணநேரமேயானாலும் எனக்கு அது மறக்கமுடியாததானது. மறுநாள் காலையில் 'ஸ்கான்' படங்களைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்ததைத் தான் பார்த்ததாக சாரு சொன்னாள். அன்று பகல்நேரக்காப்பகத்தின் அடுத்த கட்டடத்திலிருந்த குழந்தைக் காப்பகத்தில் வேலைசெய்த தாதியிடம் அடம்பிடித்துக்கேட்டு ஒரு கிலுகிலுப்பையை வீட்டிற்குக் கொண்டுவந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தன் ஒரேவயதுக் குழந்தை முதல்முறையாக 'அம்மா' என்றழைக்கும்போது ஒருதாய் அடையும் பெருமிதம் என்னுள் வந்தது. பத்திரமாக இருந்தது கிலுகிலுப்பை அவருடைய மற்ற பொருட்களுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவரின் ஆலோசனையின்பேரில் நாளிதழ்களைப் படித்து அவரைக் கேட்கச்சொல்லும்போது மாட்டென்று அடம்பிடித்தவர், சாருவின் விடாமுயற்சியால் படிப்பதைக்கேட்க ஆரம்பித்திருந்தார். எப்போதாவது பிடிவாதம் தலைதூக்கவே செய்யும். சிலவேளைகளில் படித்ததிலிருந்து அப்பாவைக் கேள்விகேட்டும் பார்ப்பாள் அவள். "மாமா, இது என்ன?", என்று 'மெர்லைன்' படத்தைக் காட்டிக்கேட்டால் சிலவேளைகளில் சரியாகவும் வேறுசிலவேளைகளில் புலி, டைனசோர் என்று வாயில் வந்ததையும் சொல்வார். சொல்லிவிட்டு 'சரியா', என்று சாருவின் முகத்தைவேறு குழந்தையைப்போலப் பார்த்துக்கொள்வார். சாருவைக் கண்டதுமே, குடுகுடுவென்றோடி தமிழ்முரசையோ ஆங்கில நாளிதழையோ எடுத்துவரும் அளவிற்கு முன்னேறினார். சாருவின் கர்பம் வளரவளர அந்தப் பழக்கத்தை விட்டிருந்ததும் கொஞ்சம் வித்தியாசமாய்த் தானிருந்தது.&lt;br /&gt;ஆரம்பகாலத்தில் அப்பாவைச்சமாளிக்க அம்மாவுக்கும் எனக்கும் பொறுமையே இல்லாதிருந்தது. அதனாலேயே, சாரு அதிகசிரமப்பட வேண்டியதாகிவிட்டது. காப்பகத்திற்கு அழைத்துச்செல்லும்போதும், உணவூட்டும்போதும் தன்னிலையில்லாமல் கோபத்தில் சாருவை அடித்தும், கடித்தும்,கிள்ளியும் துன்புறுத்தியிருக்கிறார். அவளுக்குத் தலைப்பிள்ளையாகவே ஆகியிருந்தார் அப்பா. மிகவும் குறும்பும் பிடிவாதமும் நிறைந்த பிள்ளை. குழந்தை வளர்ப்பில் முன்னனுபவமே பெற்று விட்டிருந்தாள் சாரு அப்பாவின் மூலம். அப்பாவோடு அவளுக்கிருந்த அனுபவங்கள் அப்படி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேநீரைக்குடித்து முடித்து,"கேட்டை பூட்டலன்னா பிரச்சனையாயிடும் சத்யா. விழுந்தா மாமாக்கு அப்பளம் மாதிரி எலும்புநொறுங்கிடும்னுவேற சொல்லியிருக்காரு டாக்டர். அதுசரி, மாமா ‘மைலோ’ குடிச்சாரா?", என்றவளை ஆமோதித்து தலையசைத்தேன். கண்மூடி சோபாவில் சாய்ந்த சாருவின் நெற்றி சுருங்கிச் சுருங்கி விரிந்தாற்போலிருந்தது. அவளை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு நானே சமைத்துவிட நினைத்து காய் கறிகளை அரிய ஆரம்பித்தேன்.&lt;br /&gt;எதிர்பாத்துக் காத்திருந்ததாலேயே ஓய்வை அப்பாவால் அவரின் முதுமையைப் போலவே இயற்கையாய் இருகரம் நீட்டி ஏற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால், சற்றும் எதிர்பாராமல் ஆறு வருடங்களுக்கு முன்னர் பொருளியல் நெருக்கடியின் போது நஷ்டப்பட்ட பேரங்காடி இழுத்து மூடப்பட்டபோது, முன்னறிவிப்பே இல்லாமல் தன் வேலை போனதைத் தான் அவரால் தாங்கிகொள்ளவே முடியவில்லை. செய்தி திடீரென்று ஒருநாள் பெரிய இடியாக வந்து இறங்கியிருந்தது அவர்மேல். ஊன்று கோலைச் சடேரென்று பிடுங்கியது தொபேரென்று வீழும் குடுகுடுக் கிழவனைப்போல, திடீரென்று வாழ்வின் மீதிருந்த ஒரே பற்றையும் விட்டவரானார். வீட்டிற்கு வந்தவர் ஒருவரிடமும் ஒன்றுமே பேசாமல் உட்கார்ந்துவிட்டார். உடன் வேலை பார்த்தவரிடம் "இனிமே என்ன இருக்கு?", என்று விரக்தியின் உச்சியில் பலமுறை சொன்னார் என்று பிறகு தான் தெரிய வந்தது. அடுத்தநாள் முதல் அவரின் நடவடிக்கை களில் பெரும் மாற்றம் தெரிந்தது. பிடிப்பேயில்லாமல் இருக்கவாரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்துவந்த நாட்கள் மிகப்பெரும் சவால்களைக்கொணர்ந்தன. எப்போதும் அம்மாவையே சண்டைக்கு இழுத்தார். கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு கொன்றுவிடுவேன், குத்திவிடுவேன் என்றெல்லாம் மிரட்டினார். அப்போதெல்லாம் அது வரை பார்த்திராத வேறு யாரையோ பார்ப்பதைப்போன்ற உணர்வே என்னுள் மேலிட்டது. உட்காரச் சொன்னால் நின்றார். படுக்கச்சொன்னால் நடக்கப்போகிறேன் என்று பிடிவாதம். சொல்லப்பட்ட பதிலில் மனம் கொஞ்சம்கூடப் பதியாததால், கேட்டகேள்வியையே கிளிப்பிள்ளைபோல நூறுமுறை அலுக்காமல் கேட்டார். ஒருவாய் சாப்பிடவைப்பதற்குள் எனக்குப் பொறுமையே போய்விடும். அவரைச் சாப்பிடவைக்க சாருவால்தான் முடிந்தது. எதிர் பாராமல் ஒருநாள் வீட்டில் நான்கு பேருக்குச் சமைத்துவைத்த உணவை அவர் ஒருவரே யாரும் கவனிக்காத நேரத்தில் மூச்சுமுட்டச் சாப்பிட்டு முடித்திருந்தார். அடுக்கு மாடிக்கட்டடத்தின் ஜன்னல் வழியாக ஒரு வயதுக் குழந்தையைப்போல கையில் கிடைத்ததையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு எட்டிப்பார்த்தார். இன்றும் ஜன்னல்களை அடைத்தே வைத்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திடீர்திடீரென்று குளிக்க மாட்டேனென்று அடம். அவருக்குத் தோன்றிய போது குளித்தார். ஒருநாள், குளித்துவிட்டு இடுப்பில் துண்டைக் கட்டாமல் பிறந்த மேனியோடு குளியலறையிலிருந்து வெளியே வந்துவிட்டார். சாரு பார்த்ததும் பதறி ஓடி என்னைக்கூப்பிட்டு, நான் பாய்ந்துசென்று அப்பாவின் இடுப்பில் துண்டைச் சுற்றினேன். அன்றுதான் மருத்துவரின் உதவி தேவையென்றே எங்களுக்கு உறைத்தது. மருத்துவரிடம் போனதுமே எங்களுக்கு எதுவும் சொல்லப்படவில்லை. ஆறு மாதங்களுக்கு அவரின் நடவடிக்கைகளைக் குறித்து வைத்துக் கொண்டுபோய் வாரவாரம் மருத்துவரைக்கண்டோம். பிறகுதான், அவருக்கிருந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'அல்சைமர்' நோயினால் மூளைக்குச் செல்லவேண்டிய செய்திகள் செல்லவில்லை. அப்பாவுக்கு 'டெமென்ஷியா' என்று கூறப்பட்டது. மருத்துவர் விவரிக்கவிவரிக்க அப்பாவின் அப்போதைய யோசனை, நினைவாற்றல் குறைந்திருந்ததற்கான காரணம் புரிந்தது. நர்ஸிங்க் ஹோமில் சேர்த்துவிட மருத்துவர் சொன்ன யோசனையை ஏற்க ஏனோ எனக்கு மனமேயில்லை. சிறுவயதில் எனக்குச் செய்ததை திருப்பிச் செய்யும் வாய்ப்பாகக் கருதி வீட்டிலேயே அவரை வைத்துக்கொள்ள சாருவும் நானும் முடிவுசெய்தோம். சாருதான் அப்பாவைச் சமாளிக்கவென்று மனோதத்துவ வகுப்பொன்றுக்குப் போய்வந்தாள். தொடர்ந்து அப்பாவை பிஸியோதெரபி மற்றும் மருத்துவ மனைக்குக் கூட்டிப்போவது உலாவப்போவது என்று சாரு மட்டு மில்லாதிருந்திருந்தால், ஒருவேளை மனதைக் கல்லாக்கிக் கொண்டு அப்பாவை மருத்துவமனையில் சேர்த்திருப்பேனோ என்னவோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று கூடத்திலிருந்து தீனமானகுரல் கேட்டாற்போலிருந்தது. கூர்ந்துகேட்டேன். கேலிச்சித்திரத்தில் ஏதோ அழுகையலி. தொடந்து அப்பளம் பொரிக்க சட்டியில் எண்ணையை ஏற்றினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா வேலையிலிருந்து திரும்பவும் எப்படியும் இரவாகிவிடுகிறது. செய்துவந்த தையல் வேலையை விடச்சொன்னாலும் முத்லில் கேட்கவேயில்லை. தொடர்ந்து நச்சரித்ததில் விட்டுவிடலாமென்று நினைத்தார். ஆனால், அப்பாவிற்கு திடீரென்று ஏற்பட்ட சித்தஸ்வாதீனமில்லாமல் போனதுதான் அவர் மனதை மாற்றிவிட்டது. தன் சம்பளத்தை வீட்டுச்செலவுக்குக் கொடுப்பதில் அவரது மனதிற்குத் திருப்தி ஏற்பட்டதென்று அம்மா சொல்லவே அதை ஏன் மறுக்கவேண்டுமென்று நானும் பிறகு சொல்வதையே விட்டுவிட்டேன். ஆரம்பத்தில்," ஏன் நமக்கு மட்டும் இப்பிடி ஆகணும்? ஏன்?", என்று அப்பாவை நினைத்து மாய்ந்துமாய்ந்து போன அம்மா, அப்பாவிடம் பட்டபாட்டில் சீக்கிரமே அவரிடமிருந்து விலகி, பிறகு மெள்ள மனதளவில் ஏற்கவும் பழகி, அப்பா கண்ணில் மட்டும் படாமலிருக்க ஆரம்பித்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாருவின் வலியில்தோய்த்த குரல் உரக்கவே கேட்டது. குக்கரின் வாயை மூடியதும்தான் என் சந்தேகம் சரிதானென்று உறுதியானது. உடனே பாய்ச்சலாய் ஓடிச்சென்று பார்த்தவனுக்கு அதிர்ச்சி. வியர்வையில் குளித்திருந்த முகத்தில் வலியின் முடிச்சுகள். "சாரும்மா,. என்னாச்சு?ம்?", என்றபடி அவள் நெற்றியில் விழுந்திருந்த கேசத்தை ஒதுக்கிவிட்டு அவளின் கையைப்பிடித்துக்கொண்டேன். பதட்டத்தில் செய்வதறியாது அவளின் முகத்தையே பார்த்தபடியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி என்னைப்பார்த்த அப்பா டீவியை டப்பென்று அணைத்துவிட்டு என்னருகே வந்து நின்று என்முகத்தையும் ஒரேயரு வினாடி சாருவின் முகத்தையும் பார்த்தார். மறுபடியும் கண்களில் அதேமின்னலைப் பார்த் ததைப் போல இருந்தது. உடனே எதையோ மறந்தவரைப்போல அறைக்குள் விடுவிடுவென்று நுழைந்தார். கையில் கிலுகிலுப்பையை எடுத்துக் கொண்டுவந்து என்னையே பார்த்துக்கொண்டு நின்றார். திடீரென்று அதைத்தன் இடுப்பில் கைலியின் மடிப்பில் செருகிக் கொண்டே,"டாக்ஸி கூப்பிடு",என்று முணுமுணுப்பாகச் சொன்னதுமே அவரிடமேற்பட்டிருந்த மாற்றத்தைக் கவனிக்கக்கூடத் தோன்றாமல், தொலைபேசியை நோக்கி ஓடினேன். பேசிக்கொண்டிருக்கும்போது தான் அப்பாவின் மாற்றம் மெதுவாக என்மனதில் பதிய, திரும்பினால்,..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலியில் துடித்துக்கொண்டிருந்த சாருவை எழுப்ப முயன்று விட்டு இரண்டு கைகளாலும் தூக்க முயற்சிப்பதைப் பார்த்து அப்படியே செயலிழந்து உறைந்தேன்."வா,சீக்கிரம்,..ஹெல்ப் பண்ணு,.காலப் பிடி,.. தூக்கிகிட்டுப் போயிடலாம் டாக்ஸிக்கு", விளையாட்டுத் தோழனிடம் சொல்லும் குழந்தைக்குழறலில் சொன்னார். 'அன்று புதிதாய்ப் பிறந்தவரை'ப் பார்ப்பதைப்போல விழிகள் விரிய ஆவென்று பார்த்தேன். பார்வையை அவர்மீதிருந்து விலக்காமலே, அருகில் சென்று அவர் கைகளை அனிச்சையாக விலக்கிவிட்டு மெதுவாக அவளை நானே தூக்கினேன்.&lt;br /&gt;( முற்றும் )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;---- ஜெயந்தி சங்கர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : நிலாசாரல்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9687302-115140092959794642?l=jeyanthisankar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyanthisankar.blogspot.com/feeds/115140092959794642/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9687302&amp;postID=115140092959794642&amp;isPopup=true' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/115140092959794642'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/115140092959794642'/><link rel='alternate' type='text/html' href='http://jeyanthisankar.blogspot.com/2006/06/blog-post.html' title='தலைச்சன் ( சிறுகதை )'/><author><name>ஜெயந்தி சங்கர்         (Jayanthi Sankar)</name><uri>http://www.blogger.com/profile/04533483437106248358</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9687302.post-114845559002646867</id><published>2006-05-24T15:21:00.000+08:00</published><updated>2006-05-26T18:50:53.440+08:00</updated><title type='text'>மதுமிதா கவனிக்க</title><content type='html'>வலைப்பதிவர் பெயர்: &lt;strong&gt;ஜெயந்தி சங்கர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பூ பெயர் : &lt;strong&gt;வல்லமை தாராயோ&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உர்ல் : &lt;a href="http://jeyanthisankar.blogspot.com/"&gt;http://jeyanthisankar.blogspot.com/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்: &lt;strong&gt;சிங்கப்பூர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாடு: &lt;strong&gt;சிங்கப்பூர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பூ அறிமுகம் செய்தவர்: &lt;strong&gt;சந்திரமதி கந்தசாமி &amp;amp; ஈழநாதன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : &lt;strong&gt;01 டிசம்பர் 04&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது எத்தனையாவது பதிவு: 62&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பதிவின் உர்ல்: &lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://jeyanthisankar.blogspot.com/2006/05/blog-post_24.html" target="_blank"&gt;http://jeyanthisankar.blogspot.com/2006/05/blog-post_24.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: &lt;strong&gt;முக்கியமாக அச்சிதழ்களில் பிரசுரமாகும் என்னுடைய படைப்புகளை இணைய வாசகர்களுக்கு அளிக்கும் நோக்குடன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்தித்த அனுபவங்கள்: &lt;strong&gt;வாசகர்களின் எண்ணிக்கை பெருகியது. அதில் பலர் நண்பர்களானார்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெற்ற நண்பர்கள்: &lt;strong&gt;நிறைய&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கற்றவை: &lt;strong&gt;பின்னூட்ட எண்ணிக்கையை மட்டும் வைத்து வாசகர்களின்/ வருகையாளர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்க முடியாது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: &lt;strong&gt;எப்போதும் போல் தான்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி செய்ய நினைப்பவை: &lt;strong&gt;தற்சமயம் ஒன்றுமில்லை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://jeyanthisankar.blogspot.com/2004/12/blog-post_19.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;என்னைப் பற்றி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: வலைப்பூக்கள் மிக வலுவான ஊடகமாகி வருகிறது. அதனைப் பயன்படுத்துவதில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு தேவை.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9687302-114845559002646867?l=jeyanthisankar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyanthisankar.blogspot.com/feeds/114845559002646867/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9687302&amp;postID=114845559002646867&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/114845559002646867'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/114845559002646867'/><link rel='alternate' type='text/html' href='http://jeyanthisankar.blogspot.com/2006/05/blog-post_24.html' title='மதுமிதா கவனிக்க'/><author><name>ஜெயந்தி சங்கர்         (Jayanthi Sankar)</name><uri>http://www.blogger.com/profile/04533483437106248358</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9687302.post-114826468396407399</id><published>2006-05-22T10:21:00.000+08:00</published><updated>2006-05-22T11:53:00.626+08:00</updated><title type='text'>சிங்கப்பூரில் தமிழ்</title><content type='html'>&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=474702&amp;amp;sid=uDH87lyAX9" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனர்களைப் போல தமிழர்களும் சிங்கப்பூரின் வந்தேறிகள் தாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஆங்கிலேய ஆட்சியின் கீழ் திட்டமிட்ட படி நவீன சிங்கப்பூர் நகரம் உருவாக ஆரம்பித்த நேரம். ஆங்கிலேயர்கள் தமிழ் நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் சென்னையிலிருந்து தமிழர்களை பல்வேறு வேலைகளுக்கு என்று கப்பலில் கூட்டி வந்தனர். பெரும்பாலும் சாலை அமைக்கும் பணியைப்போலக் கடினவேலைகளுக்கு என்று சொல்லலாம். இதில் ஆங்கிலேய ஆட்சியில் 'குற்றவாளிகள்' என்று சிறைபடுத்தப் பட்டோரும் அதிகம். தண்டனையின் ஒரு பகுதியாக தீவின் காடுகளை அழித்து அப்புறப்படுத்தி, சாலைகள், கட்டடங்கள் மற்றும் பாலங்கள் கட்டுதல் போன்ற வேலைகளைச் செய்தனர். சிலருக்கு காடுகளைச் செம்மைப்படுத்தி வேளாண்மைக்கு ஏற்ற நிலங்களாக மாற்றும் அரும்பணியும் உண்டு. கடும் வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்து குறைந்த கூலியைப் பெற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர, தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் வறட்சி காரணமாக பிழைப்பு தேடிய சில தமிழர்களை சிங்கப்பூர் இழுத்தது. வேலையும் வணிகமும் செய்தனர் இவர்கள். காவல்துறையிலும் தமிழர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அப்படியெல்லாம் வந்தவர்களின் சந்ததியினர் தான் இன்றைய சிங்கப்பூர் தமிழர்களின் பெரும்பகுதியினர். இதில் இஸ்லாமியர்களும் அடங்குவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய வளர்ச்சியடைந்த சிங்கப்பூரின் செழுமைக்கு தமிழர்களின் பங்கும் உண்டு என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம். பல்வேறு துறைகளில் வெற்றி கண்ட முன்னோர்கள் பலர் தமிழ்ச் சமூகத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். காட்டாக, ஏழ்மை நிலையிலிருந்து உழைத்து வணிகத்துறையில் வென்ற திரு. பி. கோவிந்தசாமிப் பிள்ளை மற்றும் பத்திரிக்கைத் துறையில் தடம் பதித்த தமிழ்வேள் கோ. சாரங்கபாணி. அப்போதெல்லாம் வட்டி தொழில் முறையற்றிருந்தது. அண்ணாமலைச் செட்டியார் செட்டியார் சங்கத்தினை நிறுவி, வணிகம் செய்ய விரும்புவோருக்கு வட்டிக்குப் பணம் கொடுக்கும் முறையினை ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வந்தவராவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது தமிழர்களாகிய நமக்குப் பெருமை சேர்ப்பவர் சிங்கப்பூரின் அதிபர் திரு. எஸ். ஆர். நாதன். இன்றும் சில துறைகளில் பல தமிழர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் படி திகழ்கிறார்கள். குறிப்பாக, கல்வி அமைச்சர் திரு. தர்மன் சண்முகரத்தினம் அவர்களைச் சொல்லலாம். இளைய சமூகத்தினரைச் சென்றடைந்து, அவர்களோடு உறவாடி தன் துறையில் புத்த புதிய வரவேற்கத் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தும் இன்னொருவர் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. விவியன் பாலகிருஷ்ணன். சட்டத்துறையில் வெற்றி பெறும் தமிழர்களை இங்கு அதிகம் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீப சதாப்தங்களில் சிங்கப்பூரில் உயர் பதவிகளுக்கு தமிழகப் பொறியாளர்களின் வருகை அதிகரித்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. நிரந்தரவாசம் பெற்றுக் கொண்டு குடும்பத்தினரோடு இங்கு வசிக்கும் இவர்கள் கல்வியிலும் மற்ற துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். குடிமக்களுக்கு இணையான பற்பல சலுகைகளை நிரந்தரவாசிகளுக்கும் அரசாங்கம் அளித்துள்ளது. கடுமையாக உழைக்கும் உழைப்பாளிகளும் தமிழகத்திலிருந்து இங்கு வந்து வேலை செய்து நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகப் பார்த்தால் தமிழர்களின் வாழ்க்கைத் தரம் சிங்கப்பூரில் அதிக ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் திருப்திகரமாகவே இருக்கிறது. எனினும், சில குடும்பங்கள் பொருளாதார மற்றும் குடும்பப் பிரச்சனைகளில் சிக்குவதுண்டு. அத்தகைய குடும்பங்கள் தங்கள் சிரமங்களிலிருந்து மீண்டு வர சிண்டா (Singapore Indian Development Association) போன்ற அமைப்புகள் பெரிதும் உதவி புரிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரதம், கர்நாடக இசை ஆகிய நூண்கலைகளை வளர்த்தெடுக்கும் நோக்குடன் செயல்படும் தனியார் பள்ளிகளான, சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம், ந்ருத்யாலயா ஈஸ்தெடிக்ஸ் சொஸைட்டி, டெம்பிள் ஆ·ப் ·பைன் ஆர்ட்ஸ், ஷ்யாமாஸ், ஆலாபனா போன்ற இசைப்பள்ளிகள் செவ்வனே இயங்கி வருகின்றன. மாணவர்களுக்குப் போட்டிகள் மற்றும் விழாக்கள் நடத்துவதன் மூலம் கலை வளர உதவுகின்றனர். சிங்கப்பூரின் கல்வி அமைச்சு சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் சான்றிதழ்களை அங்கீகரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களிடையே பண்பாட்டுணர்வு இருந்தே வருகிறது எனலாம். இங்கு தமிழ்ப் பண்பாடு என்பது தைப்பூசம், தீபாவளி, தீபாவளியை முன்னிட்டு நடக்கும் தீமிதி போன்றவற்றினை அடையாளமாகக் கொண்டுள்ளது. தமிழ் மொழி இங்கு அரசாங்க மொழிகளுள் ஒன்று என்பதோடு, தீபாவளிக்கு இங்கு அரசு விடுமுறை. இன்னொரு நாள் அரசு விடுமுறை கிடைத்திருக்க வேண்டியது என்றும், தமிழர்களில் ஒருசிலர் தைப்பூசைத்தைத் தேர்ந்தெடுத்து, வேறு ஒரு குழு பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு என்று கருத்து வேறுபட்டதால் ஒரே நாள் போதுமென்று அரசாங்கம் தீபாவளியினை மட்டும் அரசு விடுமுறையாக அறிவித்தது என்றும் மூத்த தலைமுறையினர் சொல்வதைக் கேட்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் பெரும்பான்மையிரான சீனர்களின் சிற்சில பழக்கவழக்கங்களை தமிழர்கள் எடுத்துக்கொள்வதையும் நாம் பார்க்கலாம். காட்டாக தீபாவளி என்பது ஆங்காங்கே கலை நிகழ்ச்சியாகவும், விருந்துகளாகவும் ஒரு மாதகாலத்திற்கு நீள்வதைச் சொல்லலாம். சேலைகட்டும் கலாசாரத்தினை வளர்த்தெடுக்கும் 'சேலை அழகு ராணி'ப் போட்டிகள் நடப்பதுண்டு. பொங்கலை ஒட்டி கோலம் ரங்கோலி வரையும் போட்டி போன்றவை ஆங்காங்கே சமூக நிலையங்களிலும், கோயில்களிலும் நடத்தப்படுவதைப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே தமிழர்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு திரைப்படங்களில் அதிக ஆர்வம் இருக்கிறது. பாடல், கலைநிகழ்ச்சி. உடை, செய்திகள் என்று திரைப்படம் சார்ந்தவற்றில் எப்போதுமே கூடுதல் ஈடுபாடு தான். தமிழகத்தில் வெளியாகும் அன்றே திரைப்படங்கள் சிங்கப்பூரின் திரையரங்குகளில் திரையிடப் படுவதுண்டு. இளையர்கள் தமிழை மறந்துவிடாமல் இருப்பதற்கு திரைப்படங்கள் உதவுகின்றன என்றால் மிகையில்லை. சிங்கப்பூர் இளையர்களுக்கு மற்ற இளையர்களுக்கு இணையாகத் தங்களை எல்லாவிதத்திலும் வளர்த்துக் கொள்ள வேண்டிய சவால் இருக்கிறது. குறைந்தபட்சம் உருவ உடை விஷயத்திலாவது அவர்கள் மற்ற இனத்து இளையர்களைப் போல இருக்க நினைக்கிறார்கள். மற்றொரு புறம் திரைப்பட நாயகர்களும் அத்தகைய தாக்கங்களை இளையர்மீது திணிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரில் சுமார் 30 இந்துக் கோயில்கள் உண்டு. வழிபாட்டு முறைகள் எல்லாமே எவ்வகையிலும் தமிழகக் கோயில்களுக்கு குறைந்ததில்லை. சிறப்பு நிகழ்ச்சிகளான குடமுழுக்கு போன்ற வைபவங்களுக்கும், கோபுரத் திருப்பணிகளுக்கும் இந்தியாவிலிருந்து சிற்பிகள் மற்றும் ஆகம விதிகள் அறிந்த அறிஞர்கள் வரவழைக்கப் படுவதுண்டு. கோவில்களில் மாணவர்களுக்கு தேவார வகுப்புகள் போன்ற சில நடவடிக்கைகள் நடை பெறுகின்றன. சமூகசேவைகளிலும் கோயிலின் நிர்வாகத்தினர் ஈடுபடுவதைக் காணலாம். ஒவ்வொரு ஆண்டும் திருமுறை மாநாடு நடத்தப்பட்டு பக்தி இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதற்காகவென்று இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள் மற்றும் சொற்பொழிவாளர்கள் வரவழைக்கப் படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'கொஞ்சம் கொஞ்சம்' தமிழ் பேசும் சீன டாக்ஸி ஓட்டுனர்களைச் சந்திக்கவும் நேர்வதுண்டு. இந்து மதத்தைச் சாராத இஸ்லாமிய மற்றும் கிருஸ்தவ தமிழர்களும் அவரவர் சமயம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டபடி தானிருக்கின்றன. சமயம் தாண்டி தமிழ் மொழியின் மூலம் இணையவும் செய்கிறார்கள். பொதுவாக தமிழிலக்கிய ஆர்வம் சிங்கப்பூரில் குறைந்துவிடவில்லை எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 4-5 வருடங்களாக கடற்கரைக் 'கவிமாலை' என்ற ஒரு கூட்டம் மாதமொருமுறை கூடுகிறது. சடங்குகளற்ற சிறு கூட்டம் இது. ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டு எல்லோரும் கவிதை வடிப்பார்கள். உடனுக்குடன் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசும் கொடுக்கப்படுகிறது. பிறகு, பரிசு பெற்ற மற்றும் எல்லாக் கவிதைகளுமே படைப்பாளிகளாலேயே படிக்கப் பட்டு மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளப் படுகின்றன. அனுபவம் வாய்ந்த கவிஞர்கள் வழிநடத்துகிறார்கள். ஊக்கங்களுக்கும் ஆக்கங்களுக்கும் குறைவில்லாத இடம். தனக்கும் படைப்புத் திறன் இருப்பதைக் கண்டறிந்தவர்களும், அத்தோடு நின்றுவிடாமல் மென்மேலும் வளர்த்துக்கொண்டவர்களும் பலர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதே பாணியில் 'கவிச்சோலை' என்றொன்றும் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக பல பொருளாதாரச் சிக்கல்களுக்கிடையில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு என்று இயங்கி வரும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் மாதந்தோறும் நடத்துகிறது. இது தவிர, 'முத்தமிழ் விழா' வையும் நடத்துகிறது. இதில் வருடாவருடம் சின்னஞ்சிறார்களுக்கு மாறுவேடப்போட்டி, சிறார்களுக்கு கதை சொல்லும் போட்டி, பேச்சுப்போட்டி, உயர் நிலை மாணவர்களுக்கு கட்டுரை/கதை எழுதும் போட்டி என்று ஏற்பாடு செய்து வருகிறது. பொதுப்பிரிவில் சிறுகதைப் போட்டியும் நடைபெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் தமிழ் நூல்கள் ஏராளமாய் இருக்கின்றன. வருடா வருடம் பெரிய தொகை ஒதுக்கப் படுகிறது தமிழ் நூல்களுக்கென்று. சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு ஆகப் பெரிய தொகையில் நூல்கள் வாங்குவது சிங்கப்பூர் தேசிய நூலகம் தான். அவ்வகையில் அரசாங்கம் தமிழ் வளரப் பெரிதும் உதவுகிறது என்றே சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலைநாட்டு நூலகங்களில் எங்குமே இல்லாத மிக மிக முக்கியமான ஒன்று சிங்கப்பூர் தேசிய நூலகங்களில் உண்டு. ஒவ்வொரு பகுதியிலும் தமிழுக்கும் இடமிருப்பது தமிழர்களாகிய நாம் பேருவகைப் படக்கூடிய சிறப்பு. திரைப்பட வட்டுகள், நாளிதழ்கள், சஞ்சிகைகள் முதல் புத்தகங்கள் வரை ஒவ்வொரு பகுதியிலும் தமிழும் இருக்கும்.நூலகத்தின் தமிழ்த் துறைக்கென்று தொகை ஒதுக்கப் பட்டு வருகிறது. தமிழில் சமீபத்திய நூல்களைக் கூட இங்கே சிங்கப்பூர் தேசிய நூலகங்களில் காணலாம். இலக்கியம் குறித்த கூட்டங்களை நூலகங்கள் ஏற்பாடு செய்யவும், வெளிநாட்டிலிருந்து வரும் தமிழ் எழுத்தாளர்களுடன் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நுலகக் கிளைகளில் தமிழ் நூல்கள் இரவல் பெறுவது எண்ணிக்கையில் குறையும் போது தமிழுக்கு என்று ஒதுக்கப்படும் தொகை குறைக்கப்பட வாய்ப்புகள் உண்டு. இதுவே தமிழ் ஆர்வலர்களின் மிகபெரிய கவலை. நூல்களை இரவல் பெறவென்று ஒரு பெருங்கூட்டம் எப்போதுமே உண்டு. ஆனால், புதிய வாசகர்கள் தான் உருவாவதில்லை. பொது மக்களிடையே தமிழில் நூலகத்தில் வாசித்தலை ஊக்குவிக்கும் பொருட்டு 'கதையும் காட்சியும்' என்று சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக ஏற்பாட்டில் மாதம் ஒரு முறை நடத்தப்படும் நிகழ்ச்சி இலக்கியப் படைப்பாளிகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் அச்சிலிருந்து திரைக்குப் போன படைப்புக்களையும் படைப்பாளியையும் பற்றி அலசும். வட்டார நூலகக்கிளைகளில் இது நடக்கும். திரைப்படம் சில நிமிடங்களுக்கு மட்டுமே திரையிடப்பட்டு ஆய்வுரையும், கலந்துரையாடலும் முதன்மையாக நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் துவங்கப் பட்டிருக்கும் சிங்கப்பூரின் தமிழ் 'வாசகர் வட்டம்' இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நடக்கிறது. ஒரு நூலைப் படித்துவிட்டு ஆய்வுக்கட்டுரை வாசிப்பார்கள் சிலர். பின்னர், நூலைப்பற்றி முழுமையாக ஆராய்ந்து கலந்துரையாடல் நடை பெறும். இந்தக் கூட்டத்தின் நோக்கம் வாசிப்பு அனுபவத்தினைப் பகிர்ந்து வாசித்தலில் வளர்ச்சியடைதல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தைகைய அனைந்து முயற்சிகள் மிகவும் பயனுள்ளவை. இருப்பினும், ஏற்கனவே பங்கேற்போரை மட்டுமே மீண்டும் மீண்டும் கூட்டங்களில் காணமுடிவது தான் ஏற்பாட்டாளர்களின் முயற்சி முழுப்பயனைக் கொடுக்கவில்லையோ என்று யோசிக்கச் செய்துவிடுகிறது. புதிய வாசகர்களோ ஆய்வாளர்களோ உருவானால் முயற்சிகளினால் ஏற்படக்கூடிய பலன் மிகவும் உவகையளிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய கலைகள் மன்றத்துடன் தேசிய நூலகமும் இணைந்து நடத்தும் எழுத்தாளர் வாரம் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். இதில் உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் எழுத்தாளர்கள் கருத்தரங்குகள் மற்றும் ஆய்வரங்குகளை முன்னின்று நடத்துவர். மற்ற மொழிகளைப்போலவே தமிழிலும் கவிதைக்கும் சிறுகதைக்கும் 'தங்க முனைப்பேனா விருது' வழங்கப்படுகிறது. பொதுப் பிரிவில் நடத்தப்படும் இப்போட்டிக்குப் பரிசுத்தொகை பெரியது. சிறந்த சிறுகதை, கவிதைகளுக்கு முதல் பரிசாக S$ 10,000 வெள்ளி வழங்கப் படுகிறது. ஆண்டுதோறும் தமிழில் வெளியிடப்படும் புத்தகங்களில் மேலான ஆக்கத்திற்கு 'சிங்கப்பூர் இலக்கியப் பரிசு' என்று S$10,000 பரிசளிக்கிறது. இது தவிர, புதிதாக நூல்களை வெளியிடவும் உதவித்தொகை வழங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நூல் வெளியீட்டு விழாக்கள், நூலாய்வுரைகள் போன்ற நிகழ்ச்சிகளும் அடிக்கடி நடக்கின்றன. பெரும்பாலும் இந்நிகழ்வுகளுக்கு அனுமதி இலவசம். இருந்தாலும், வருகையாளர்களின் எண்ணிக்கை மட்டும் பூரிக்கும் விதத்தில் இருப்பதில்லை என்பதுதான் கொஞ்சம் வருந்தக்கூடியது. எல்லாமே மீண்டும் மீண்டும் பார்த்த முகங்கள். அதையும் தாண்டி நிகழ்வுகள் நடந்தபடிதான் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாசிக்கும் கலாசாரத்தினை மேலும் வளர்த்தெடுக்கும் நோக்குடன் 'வாசிப்போம் சிங்கப்பூர்' என்ற இயக்கம் சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் ஏற்பாட்டில் ஆண்டு தோறும் நடத்தப் படுகிறது. இதற்காக மற்ற மொழிகளைப்போலவே தமிழிலும் 3 புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்துரையாடல், நூலாய்வுரைகள் என்று விதவிதமான நிகழ்வுகள் நடத்தப் படுகின்றன. எல்லா வயதினரையும் கவரும் நல்ல படைப்புகள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. 2005 ஆம் ஆண்டில் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்', சிவசங்கரியின் '47 நாட்கள்' மற்றும் உள்ளூர் படைப்பாளியான அமரர் நா. கோவிந்தசாமியின் 'தேவு' ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாண்டின் (2006) 'வாசிப்போம் சிங்கப்பூர்' நிகழ்விற்கு அசோகமித்ரனின் 'ஒற்றன்', திலகவதியின் 'கல் மரம்' மற்றும் புதுமை தாசனின் 'உதிரிகள்' ஆகிய மூன்று நூல்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. இத்தேர்வு 'தங்களையும் யதார்த்த உண்மை நிலையையும் புரிந்து கொள்ளத் தூண்டும் வாழ்வனுபவங்கள்' என்ற அடிப்படையில் நடந்துள்ளது. வாசிப்பு அனுபவத்தின் வழியாகவும் அனுபவப் பகிர்தலின் மூலமாகவும் வாசித்தலில் அதிக ஈடுபாட்டினை வளர்ப்பதே குறிக்கோள். தமிழில் வாசிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்துவதும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'தமிழிலக்கியத்தைப் பற்றி பேசி, கலந்துரையாடி அதன் வழி தமிழின்பத்தைத் துய்த்தல்' எனும் ஒரே நோக்கத்தோடு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாதமொரு முறை மிகச் சிறப்பாக இயங்கி வருவது இலக்கிய வட்டம். நிரந்தரமாய் பங்கெடுப்போர் பத்துபேரும், முடிந்தபோது வருவோர் பத்துபேரும் மட்டுமே கொண்ட இக்கூட்டத்தில் உள்ளூர் வெளியூர் தமிழறிஞர்கள் தமிழ் இலக்கியங்களைக் குறித்து உரையாற்றுவர். சமயம் சார்ந்த இலக்கிய வகையென்றாலும், அதனைத் தமிழிலக்கியமாக மட்டுமே ரசித்து வருகின்றனர். கலந்துரையாடலும் உண்டு. இங்கு வரும் இலக்கிய ஆர்வலர் ஏமார்ந்துபோனதாய் சரித்திரமே இல்லை. இவை தவிர மாதவி மன்றம், சிங்கை முரசு என பல்வேறு தமிழ் ஆர்வல அமைப்புகள் தமிழ் இலக்கியம் குறித்துப் பேசுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சி, செய்தித்தாள் மற்றும் வானொலி. சிங்கப்பூரிலில் தமிழின் அடையாளமாக விளங்கும் சில விஷயங்களாகும். ஒரே தமிழ் வானொலியில் படைப்பாளர்கள் நல்ல தமிழைக் கையாள்கிறார்கள்.தொலைக் காட்சியில் தமிழின் பங்கு கிட்டத் தட்ட சிங்கப்பூரின் தமிழுக்கு இணையாகவே உள்ளது. செய்தி வாசிப்பில் மட்டும் தமிழ் சிறப்பாயுள்ளது எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் மட்டுமின்றி, பாலிவுட்டில் பெரும் ஆர்வம் கொண்ட வட இந்தியர்களும் மலாய் சமூகத்தினரும் தொடர்ந்து வாங்கி வரும் பாலிவுட் கோலிவுட் செய்திகள், கவர்ச்சிப்புகைப் படங்கள், கிசுகிசுக்கள் மற்றும் பேட்டிகள் ஆகியவற்றை உள்ளக்கிய 'இந்தியன் மூவி நியூஸ்' என்னும் ஒரே ஒரு மாத இதழ் (இரு மொழி / bilingual) மட்டும் பல வருடங்களாக தொடர்ந்து வெற்றியோடு நடந்து வருகிறது. சிங்கைச் சுடர் என்னும் மாத இதழ் (இரு மொழி/bilingual) சமாளித்துக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி ஒரு ஆப்பிளை ஆரஞ்சோடு ஒப்பிட முடியாதோ அதுபோல தமிழ்நாட்டின் தமிழ் இலக்கிய வளர்ச்சியோடு சிங்கப்பூரின் தமிழ் இலக்கிய வளர்ச்சியினை ஒப்பிடவே முடியாது. சிறிய நாட்டின் சிறுபான்மையினர் தமிழர். தமிழர்களிடையே நவீன தமிழிலக்கியத்தில் ஆர்வமோ ஈடுபாடோ கொண்டவர்கள் தான் குறைவுதான். இலக்கிய உலகில் ஒருவரை ஒருவர் நிராகரித்தல் என்னும் தமிழகத்தின் தமிழிலக்கியக் கலாசாரம் இங்கும் உண்டு. சிங்கப்பூர் எழுத்தாளர்களிலேயே கூட தமிழிலக்கியத்தின் நவீன போக்குகள் குறித்தும், உலக இலக்கிய போக்குகள் குறித்தும் விரிவான வாசிப்பு கொண்டவர்கள் குறைவு. முழுநேர எழுத்தாளர்கள் என்ற வர்க்கம் இங்கில்லை எனலாம். நாட்டின் எழுத்தாளர்கள் வாழ்க்கைக்கு வேண்டிய பொருளாதார வசதிகளுக்கென்று கடுமையாக உழைக்கவேண்டிய சூழல் நிலவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகைகள் ஆரம்பித்தவர்கள் கையைச் சுட்டுக்கொண்டு போய்விட்டார்கள். திரு. கோ.சாரங்கபாணி அவர்களால் 1935ல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் முரசு இன்றும் நிலைத்து நின்று வருகிறது. வார இறுதியில் விற்கப்படும் தமிழ் நாளிதழின் எண்ணிக்கைகூட வாரநாளில் கிடையாதாம். இதனை வாங்குவோர் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிறுகளில் பதினாறு பக்கங்களும் மற்ற நாட்களில் சுமார் பத்து பக்கங்களும் கொண்ட நாளிதழில் கொஞ்சம் உள்ளூர் செய்திகள் தவிர மற்ற எல்லாமே முதல் நாள் சூரிய தொலைக்காட்சியில் வந்த தலைப்புச் செய்திகள் தான் இடம் பெறும். பெரும்பாலும் சிங்கப்பூரில் தமிழ்ப் படைப்பாளிகள் இந்த ஒரே நாளிதழான தமிழ் முரசை நம்பியே எழுதத் துவங்குகிறார்கள். அதில் அதிக பக்கங்கள் ஒதுக்க முடியாத நிலையில், வேறு களமில்லாததால் படைப்பாளிகளின் எழுத்து வேகம் குறைகிறது. விடாமுயற்சியுடன் எழுதி மலேசிய மற்றும் தமிழக சஞ்சிகைகளுக்கு எழுதுபவர்கள் மிகச் சிலரே. மிகச் சிலர் சிறுபத்திரிக்கைகள், இணைய இதழ்கள், வலைப்பூக்கள் என்று வேறு மாற்று ஊடகங்களுக்குச் செல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற இனத்தாரோடு குடிமக்களுக்கு இருக்கும் நட்புறவு தமிழ் எழுத்தாளர்களுக்கு மற்ற இன எழுத்தாளர்களுடன் இருப்பதாகச் சொல்லிவிட முடியாது. அதாவது எந்தவிதக் கருத்துப்பரிமாற்றமோ மொழி பெயர்க்கும் முயற்சிகளோ பெரும்பாலும் இருப்பதில்லை. தவிர சிங்கப்பூரின் தமிழிலக்கியம் குறித்து கவனத்தோடும் பொறுப்போடும், விருப்பு வெறுப்புகளற்று ஆய்வு செய்தவரில்லை என்பது ஒரு குறையே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரில் தமிழிலக்கியம் பெரும்பாலும் அமைப்புகள் சார்ந்து குழுக்களாகவே இயங்கி வருகிறது. குழுக்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் இருந்தபோதிலும் வெளிப்படையான உரசல்களோ ஆரோக்கியமான இலக்கிய சர்ச்சைகளோ பெரும்பாலும் இருப்பதில்லை. இலைமறைக்காயாய் சில சில்லறைப் பூசல்கள் உண்டு. தொடர்ந்து எழுதாமல் 'ஒருகாலத்தில் எழுதியதால்' எழுத்தாளர்கள் என்றறியப் படுபவர்களும் இங்கு உண்டு. பெரும்பான்மையான படைப்பாளிகள் சிறுபத்திரிக்கை, இணையம் என்று தங்களை விரிவு படுத்திக் கொள்ளாமலே இருந்து விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு மாணவர்கள் தமிழை ஒரு பாடமாக மட்டுமே பார்க்கிறார்கள். பல்லினக்கலாசார சமூகத்தில் ஆங்கிலமே அதிகம் பாவிக்கப் படுகிறது. வீட்டிலும் ஆங்கிலம் பேசும் தமிழ்க்குடும்பங்கள் தான் அதிகம். அத்தகைய மாணவர்களுக்கு தமிழ்ப் பாடம் மிகவும் கடினம். வீட்டில் தமிழ் பேசும் மாணவர்கள் மிகக்குறைவு. இவர்களுக்கும் பாடத்திற்குத் தேவையான மொழிவளம் அமையப்பெறுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சுத் தமிழை வளர்க்க கல்வி அமைச்சு பள்ளிகளில் தமிழ்மொழியில் வாய்மொழிப் பாடத்தின் (oral) மதிப்பெண்களை சமீபத்தில் கூட்டியுள்ளது. கொடுக்கப்படும் தலைப்பில் பேசவேண்டும் / கலந்துரையாட வேண்டும் எனும் போது நேரத்தில் எழுத்துத் தமிழைப் பயன் படுத்தவேண்டியதில்லை, பேச்சுத் தமிழே போதுமானது என்று தளர்த்தியுள்ளது. வருடந்தோறும் தமிழ் மொழிபண்பாட்டுக் கழகம் 'சொற்களம்' என்று ஒரு போட்டியினை மாணவர்களுக்கென்று அதிக உழைப்புடன் நடத்துகிறது. பள்ளியைப் பிரதினிதித்து உயர்நிலை மாணவர்கள் கொடுக்கப்பட்ட தலைப்பில் ஒட்டியோ வெட்டியோ பேசுவர். சுமார் ஐம்பது பள்ளிகள் பங்கேற்கும் இந்தப்போட்டி பல சுற்றுகள் கடந்து வரும். இறுதிச் சுற்றுகள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப் படும். வருடத்தின் ஆரம்பத்திலேயே துவங்கி இறுதியில் முடிகிறது. திறமையான மாணவ பேச்சாளர்கள் உருவாகவோ இனம் காணப் படவோ செய்கிறார்கள். இருப்பினும், விவாதமேடையைத் தாண்டி மாணவர்கள் தங்களின் தமிழறிவை வளர்த்துக் கொள்ள நினைப்பதோ ஆசைப்படுவதோ இல்லை என்பதே உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக தங்கள் கருத்தே சிறந்தது, தங்களின் அறிதலே உயர்ந்தது என்று நினைக்கும் / நம்பும் பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இங்கிருக்கிறார்கள். பெரும்பாலோர் குறுகிய வட்டத்தைத் தாண்டி சிந்திப்பதில்லை. இலக்கிய உலகின் மாற்றங்களைக் கண்டறிந்து தங்களை மேம்படுத்திக்கொள்ள நினைக்கும் போக்கு குறைவாகக் காணப்படுவது கொஞ்சம் வருந்தத்தக்கது தான். சிங்கப்பூரின் தமிழ்ப் படைப்புகள் மற்றும் படைபாளிகள் இதுவரை உலகத் தமிழிலக்கியத்தின் கவனத்தைப் பெறத் தவறியதற்கு இதுவும் முக்கியக் காரணமாகவே படுகிறது. நோக்கங்கள் ஏதுமின்றி வாசிப்பதும், வாசித்தலில் உள்ள பரவசத்தை உணரவும் பெறவும் நினைக்கும் மாணவர்களே பெரும்பாலும் இல்லை என்று சொல்லலாம். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழறிஞர்களுக்கும் காத்திருக்கும் மிகப்பெரிய சவால் இளைய தலை முறையினரைத் தமிழ் இலக்கியத்தின் பக்கம் இழுப்பது. இலக்கியத்தின் வழி இளையர்களது உலத்தினுள் இவர்கள் நுழைவது என்பது சாத்தியமாகும் போது அதுவும் சாத்தியமாகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(முற்றும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-----ஜெயந்தி சங்கர்&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : சி·பி டாட் காம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9687302-114826468396407399?l=jeyanthisankar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyanthisankar.blogspot.com/feeds/114826468396407399/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9687302&amp;postID=114826468396407399&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/114826468396407399'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/114826468396407399'/><link rel='alternate' type='text/html' href='http://jeyanthisankar.blogspot.com/2006/05/blog-post_22.html' title='சிங்கப்பூரில் தமிழ்'/><author><name>ஜெயந்தி சங்கர்         (Jayanthi Sankar)</name><uri>http://www.blogger.com/profile/04533483437106248358</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9687302.post-114800933578847631</id><published>2006-05-19T11:01:00.000+08:00</published><updated>2006-05-20T09:12:20.776+08:00</updated><title type='text'>பாலி</title><content type='html'>'கடவுள்களின் தீவு' என்று உலகநாடுகளால் அழைக்கப்படும் பாலி இயற்கை வளத்துடன் மிகச்செழுமையான கலாசாரக் கூறுகளைக் கொண்டுள்ளது. கடவுள்களின் தீவென்றபோதிலும் பாலியர்களுக்கும் மற்ற எல்லா சராசரி மக்களைப்போலவே சவால்களும் சோதனைகளும் இருக்கவே செய்கின்றன.&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406860&amp;amp;sid=nMQ41uAHI9" border="0" /&gt;&lt;br /&gt;பாலியர்களின் மதம் 'ஆகம இந்த பாலி' ஆகும். இந்து மதம் மற்றும் பௌத்தமதம் ஆகியவற்றின் பல்வகைக் கூறுகளைக் கொண்டது. தீவின் 2.5 மில்லியன் மக்கட்தொகையில் தொண்ணூறு சதவிகிதத்தினர் இவ்வகை இந்துக்களாவர். தெய்வங்களை இருவகைப் பிரிவில் வைக்கிறார்கள். முதல் பிரிவில் இந்துக்கடவுள்களான விஷ்ணு போன்ற தெய்வங்களையும் இரண்டாவது பிரிவில் இயற்கையோடு தொடர்புடைய சிறுதெய்வங்களும் வரும். கடவுள்களை மட்டுமின்றி மூதாதையரையும் இவர்கள் வணங்குவர். மலைகளில் வாழும் இவ்விருவரும் தங்கள் வாழ்வில் நல்லவற்றைக் கொண்டுவருவதாயும், கடல்களில் வாழும் தீயசக்திகளான பேய்பிசாசுகள் தீயவற்றைக் கொண்டு வருவதாயும் மிகவும் நம்புகிறார்கள். மலைக் கோயில்களும் கடல்கோயில்களும் ஆங்காங்கே தனித்தனியே இருக்கின்றன.&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406861&amp;amp;sid=gtO17sAHP1" border="0" /&gt;&lt;br /&gt;இயற்கையின் ஒவ்வொரு நிகழ்வும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்று கருதும் பாலியர்கள் தங்களின் இருப்பின் மேன்மை அருவ உலகில்தான் இருக்கிறது என்று மிகத் திடமாக நம்புகிறார்கள். அவ்வுலகில் உலவும் மூதாதையர்கள் தங்கள் வாழ்வின் முக்கியபகுதி என்றும், அவர்களை மகிழ்வித்தால், பாதுகாப்பான வாழ்வு உறுதி என்றும் வழிவழியாக நம்பிவரும் பாலியர்கள், அந்நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர்களின் எல்லாவிதமான செயல்பாடுகளையும் அமைத்துக் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாலியர்கள் மூன்று விதமான நாட்காட்டிகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒன்று வழக்கமாக உலகெங்கும் பயன்படுத்தப்படும் ஆங்கில ஆண்டைக் காட்டுவது. மற்ற இரண்டும் 'வுகு' மற்றும் 'சகா' காலண்டர்கள். முக்கிய பெரியகோயில்களின் விழாக்கள் சகா வழக்கப்படி கணிக்கப்படும். சகா ஆண்டு சந்திரஆண்டை ஒத்திருக்கும். ஆண்டுக்காண்டு சிலநாட்கள் கூடுதலாகவும் குறைவாகவும் இருக்கும். வுகு வழக்கப்படி, செப்டம்பர் கடைசி முதல் அக்டோபர் தொடக்கம் வரையில் இருக்கும் பௌர்ணமி நாட்களிலும், ஏப்ரல் முதலிருவாரங்களில் வரக்கூடிய பௌர்ணமி நாட்களிலும் எல்லாக்கோயில்களிலும் முக்கியவிழாக்கள் கொண்டாடப் படுகின்றன.&lt;br /&gt;பாலியர்களிடையே சாதிவேறுபாடுகள் உண்டு. ஒரு கூட்டத்தில் உயர் இருக்கை மற்றும் தாழ்வான இருக்கைகள் அமைப்பதிலிருந்து, ஒருவரது சாதியைப்பார்த்து அதற்குத் தகுந்தாற்போல பேசும் போது குரலை உயர்த்தியோ தாழ்த்தியோ பேசுவது வரை வேற்றுமைகள் விதவிதமாகப் புலப்படும். உயர்சாதியென்றறியப்படுபவர்கள் 'மலையை நோக்கி' என்னும் பொருள்பட 'காஜா' என்றழைக்கப்படுகிறார்கள். கீழ்சாதி என்று நம்பப்படுகிறவர்கள் 'கடலை நோக்கி' என்ற பொருளில் 'கெலோட்' எனப்படுகிறார்கள். பாலியர்கள் இயற்கையையட்டிச் சிந்திப்பதை இவ்வாறு பற்பல இடங்களில் நம்மால் பார்க்கமுடியும். சென்ற நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பியராட்சி, அரசியல் போன்ற பல்வேறு காரணங்களினால், அதற்கு முன்னர் நிலவிவந்த சாதிமுறையில் பற்பல மாற்றங்கள் வந்தது. பிறகு, மீண்டும் கொஞ்சம் சீரானபோதிலும் குழப்பங்கள் நிலவியபடியே தானிருக்கின்றன. சாதிவேற்றுமைகள் மட்டும் மறைந்துவிடவில்லை என்பதுடன் செல்வம், அந்தஸ்து போன்ற வேறு பலவேறுபாடுகளும் சேர்ந்தே நிலவிவருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இம்மக்களில் ஒருவரைப் பார்த்து, "நீங்கள் யார்?", என்று கேட்டால் உடனே தன் பெயரைச் சொல்லமாட்டார். முதலில் மற்ற பாலியர்களின் அந்தஸ்தோடு தன் அந்தஸ்தை ஒப்பிட்டுச் சொல்லிவிட்டு, பிறகு தனது மூதாதையரின் கதைகளைச் சொல்லிவிட்டுத் தான் தன்பெயரையே சொல்வார்.&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406858&amp;amp;sid=lWY90abvw2" border="0" /&gt;&lt;br /&gt;அவரவர் வீட்டுமுற்றத்தில் ஒரு கோயில் அமைத்துக்கொள்கிறார்கள். அதன் அளவு அவரவர் வசதிக்கேற்ப இருக்கிறது. உறவினர்கள் குடும்பங்களுக்கு என்று பொதுவாக 'கோவிட்டன்' என்ற ஒரு பொதுக்கோயில் இருக்கும். அவர்களுடைய பொதுவான மூதாதையரை இங்கு வழிபடுவார்கள். இந்தக் கோயிலின் பழைமையைப் பொருத்தது இவர்களின் அந்தஸ்து. எப்படியும் ஒரு குடும்பத்துக்கு ஐந்து முதல் பத்து கோயில்கள் வரை தொடர்பிருக்கும். இது தவிர கிராமத்துக்கோயில் என்று வேறு ஒன்றுரிருக்கும். இப்படி எண்ணிலடங்காக் கோயில்கள் சிறிதும் பெரிதுமாக பாலியில் காணலாம்.&lt;br /&gt;மலையிலிருந்து கிளம்பிய நதிநீராதது, கடலையடைந்து, கடல் நீர் ஆவியாகிப் பின் மழையாக நிலத்தில் விழுந்து, நிலத்தை வளமாக்குவதைப்போல மனிதவாழ்வும் கடலுக்குக்கொண்டுபோய் அந்திமக்கிரியைகள் செய்யப்பட்டு விடப்பட்டதும், ஆத்மா மலைகளிலேறி மூதாதையரை அடைந்து, பிறகு மீண்டும் பூமியில் வந்து மனிதனாகப் பிறக்கிறது என்பது நம்பிக்கை. இப்படிப்பல முறை பிறந்தும் இறந்தும், இறுதியில் முக்தியடையந்து நிரந்தரமாக மலைகளில் தங்கமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாந்திரீகங்களிலும் அமானுஷ்யசக்திகளிலும் மிகுந்த நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவர்கள் பாலியர்கள். ஆவிகளோடு பேசுவதும், பேயோட்டும் நிகழ்வுகளும், அவை தொடர்பான பல்வேறு சடங்குகளும் அடிக்கடி ஆங்காங்கே நடைபெறுவதைக்காணமுடியும். தெய்வமோ மூதாதையரோ ஒரு மனிதருள் 'இறங்கி'யிருப்பதாக நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகக் கருதப்படும். ஆனால், தீயசக்திகள் 'இறங்கி'யிருப்பின் கவலைக்குரியதாகக் கொள்ளப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'பாலியன் தக்சு' என்றழைக்கப்படும் நபர் அருவு உலகிலிருக்கும் தெய்வங்கள், மூதாதையர் மற்றும் பேய்களோடு தொடர்பு கொள்ளக் கூடியவர்கள். இருவேறு உலகங்களிடையே ஒரு தொடர்புச் சாதனமாக இருந்து செயல்படும் இவர் பலசடங்கு சம்பிரதாயங்களைச் செய்து செய்யவேண்டியவற்றை மக்களுக்குப் பரிந்துரைப்பார். சாதி, வயது, பால் மற்றும் அந்தஸ்துக்கு அப்பாற்பட்ட பாலியன் தக்சுக்கள் யாராலும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. இவர்களுக்குப் பயிற்சி என்று ஒன்றுமில்லை. 'அழைப்பு' வரும்போது ஒருவர் பாலியன் தக்சு ஆகிறார். சடங்குகளைச் செய்யவும் ஆரம்பிக்கிறார். 'அழைப்பு' திடீரென்று வராது என்று நம்புகிறார்கள். ஒருவரது வாழ்வில் அவ்வப்போது 'அறிகுறிகள்' ஏற்பட்டுக்கொண்டுதானிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரியபொருட்கள் கோயிலிலோ, வீட்டிலோ அவருக்குக் கிடைக்கலாம். அது அரியவகைக் காசாகவோ, மோதிரம் போன்றவையாகவோ, இல்லை ஒரு விநோத வகைக் கல்லாகவோகூட இருக்கலாம். இப்பொருட்கள் மிகவும் கவனமாகப்பாதுகாக்கப்படும். சிலவேளைகளில் 'அறிகுறி' அவருக்கோ அவரது நெருங்கிய உறவினருக்கோ வரும் உடல்மன உபாதையாவும் அமையும். பிறகு, ஒரு கனவாகவோ, இல்லை உள்ளுணர்வாகவோ 'அழைப்பு' வரும் போது அவருக்கு அந்தத் தகுதி வரும். அறிகுறிகளை அலட்சியப்படுத்துவோருக்குச் சோதனைகள் மன நோயாகவும் உடல் உபாதையாகவும் பலவிதமாய் அமையும். குடும்பத்தினருக்கும் அவ்விதமே நிகழக்கூடும். வேறு ஒரு பாலியன் தக்சு எடுத்துரைத்து, இவர் பாலியன் தக்சு ஆகும்போது தீங்குகள் மெல்லமெல்ல விலகுவதை உணர்வார்கள். பாலியன் தக்சுக்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோயில்களில் பக்தர்களில் சிலருக்கு சாமிவருவதுண்டு. தெய்வம் தன் இருப்பை மக்களுக்கு உணர்த்த பக்தர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருள் 'இறங்கி'யிருப்பதாக நம்பப்படுகிறது. பக்தனின் இந்நிலையை 'திடன்' என்றழைக்கிறார்கள். கூடியிருக்கும் மக்கள் இவரைப்பார்த்து அச்சம்கொள்வதில்லை. மாறாக அவரை மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள். ஊதுபத்திகள் கொளுத்தி வணங்கி புனிதநீர்பருகக் கொடுப்பர். கோயில் பூசாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சமயச்செயல்பாடுகள் குறித்து கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் கேட்டுக்கொள்வர். சிலசமயங்களில் வேண்டுமென்றே ஒரு சிறுவனுக்கோ பூசாரிக்கோ ஊதுபத்தி ஏற்றிவைத்து, மந்திரங்கள் ஓதி வலுவில் சாமிவர வைப்பதுமுண்டு. மூங்கில்களால் செய்யப்பட்ட குதிரைமேல் ஏறி, குதித்துக் குதித்து ஆடிக்கொண்டு வெறும்காலோடு சாமிவந்தவர் தீமிதிப்பார். அவருக்குத் துளிகூட தீக்காயமோ வேறு காயமோ படுவதில்லை. இவ்வகை நடனம் கிராமத்தில் மோசமான விளைச்சல், கொடியநோய் போன்ற தீங்குகள் நேர்ந்தால் நடத்தப்படும். கடவுள்களை மகிழ்வித்து கிராமத்தில் நல்லவை நடக்க அருள் போலிக்கச் செய்வதே நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தீவிலோ, கிராமத்திலோ இல்லை குடும்பத்திலோ பொதுவாக வெகுநாட்களுக்கு தீர்வில்லாமல் இழுத்தடிக்கும் பிரச்சனைகள் மற்றும் ஓயாத குடும்பப்பூசல்கள், சிறுபிள்ளைகள் மரணம் போன்ற இருப்பின் பாலியன் தக்சு தெய்வங்களோடு தொடர்புகொண்டு இறுதியான ஒரு தீர்வைச் சொல்வார். சடங்கு சம்பிரதாயங்களையோ மதத்தையோ அவமதிக்கும் ஒருவரை தீயசக்திகளின் பிடியிலிருந்து கடவுள்கள் காப்பாற்றமாட்டார்கள். பெரும்தீங்கு ஏற்பட்ட ஒருவர் நேரம் தாழ்த்தாது செயல்பட்டு கடவுள்களைத் திருப்திப் படுத்த வேண்டும். எவ்வகையில் என்று அறிய உதவுவார் பாலியன் தக்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தவுடன் பாலியன் தக்சு அழைக்கப்படுவார், சம்பிராதாயசடங்குகள் நடத்தவும், மூதாதையரின் விருப்பங்களை அறியவும். அக்குடும்பத்தினரின் மூதாதையரை சடங்குகள் மூலம் 'தொடர்பு' கொண்டு அவரது விருப்பத்தை அறிந்து சொல்லுவார். அதன்படி குடும்பத்தினர் சடங்குகளை நடத்துவர்.&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406872&amp;amp;sid=tEL68cwzY3" border="0" /&gt;&lt;br /&gt;இறப்பின் போதும் பாலியன் தக்சுவுக்கு வேலை அதிகம். இறந்தவரின் இறுதிச்சடங்கு/யாத்திரை எவ்வாறு அமையவேண்டும் என்பதை இறந்தவரையே 'தொடர்பு' கொண்டு குடும்பத்தினருக்குச் சொல்வதுடன், தெய்வங்களுக்குச் செலுத்தவேண்டிய காணிக்கைகள் ஏதும் செலுத்தப்படாமலிருந்தால், அவற்றையும் அறிந்து சொல்வார். குடும்பத்தினரோ, இறந்தவரின் நெருங்கிய உறவினரோ அவற்றை நிறைவேற்றுவார். இவ்வாறு செய்வதால், இறந்தவர் மறுபிறப்பெடுக்கும்போது, கடனாளியாகப் பிறக்க வேண்டியிருக்காது என்பது நம்பிக்கை. பாலியன் தக்சுவைச் சந்திக்க கூட்டமாக உறவினர்களோடு போகலாம். குறைந்தது ஒருவராவது உடன் போகவேண்டும். இறந்தவரின் கணவன்/மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் போவார்கள். குழந்தைப் பிறந்திருக்குமானால், பெற்றோரும் தாத்தாபாட்டிகளும் அவசியம் போவார்கள்.&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406871&amp;amp;sid=kFH99anDM8" border="0" /&gt;&lt;br /&gt;பாலியன் தக்சுக்கள் அவரவர் திறன்களைப்பொருத்து பிரபலமாகலாம். தூரத்திலிருந்தெல்லாம் கூட ஒருவரைக் காணவருவார்கள். சிலர் நோய்களுக்குத் தீவு 'கேட்டு'ச் சொல்வர். வேறு சிலரோ எல்லாவிதமான சிறுபிரச்சனைகளையும் 'கேட்டு'த் தீர்த்துவைப்பர். வருபவர்களின் எண்ணிக்கையைப் பொருத்து, இலக்கங்கள் வழங்கப்படும். வரிசையில் அறைக்குள் சென்று பாலியன் தக்சுவைச் சந்திப்பார்கள் மக்கள். அறை சிறியதாக சடங்குகளுக்குத் தேவையானவற்றைத் தன்னுள் கொண்டிருக்கும். 'கமர் சுகி' என்றறியப்படும் அப்புனித அறையில் மேடை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். அதன் மீது தெய்வச்சிலைகள், ஜாடிகளில் புனிதநீர், வெள்ளைத் துணி, மஞ்சள் துணி போன்றவை வைக்கப்பட்டிருக்கும். அத்துடன் பாலியன் தக்சு அறிகுறிகளாகக் கண்டெடுத்த கல், மோதிரம் போன்ற பொருட்களும் இடம் பெறும். அது ஒன்றுக்கு மேற்பட்டும் இருக்கலாம். இவை 'பராங் சுகி' என்றழைக்கப்படும். புனிதமான இப்பொருள்களைக் கழுவிய நீரை நோயாளிகளுக்கும் விஷக்கடிபட்டவர்களுக்கும் உட்கொள்ளக்கொடுக்கிறார் பாலியன் தக்சு. நிச்சயம் குணமடைவார்கள் என்றும் நம்புகிறார்கள்.&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406870&amp;amp;sid=bCY56opzR3" border="0" /&gt;&lt;br /&gt;வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் தேங்காய், முட்டை, அரிசி, பூக்கள், பிஸ்கட்டுகள், பழம் ஆகியவற்றை வைத்துப்படைத்து வணங்கியபின் வெள்ளையுடையுடுத்திய பாலியன் தக்சு, புனிதநீரை அவர்கள் மீது தெளிப்பார். பிறகு, சடங்குப்பூர்வமாக தெய்வங்களையும் மூதாதையர்களையும் கண்களை மூடிக்கொண்டு அழைப்பார். அப்போது அழைக்கப்பட்ட தெய்வமானது பாலியன் தக்சுவின் உடலில் 'இறங்கி', பின் பேச ஆரம்பிக்கும். பலவிதமான குறுக்குக் கேள்விகள் கேட்டு, கண்டிக்கவும் செய்து, பின்னர் தீர்வுகள் வழங்கும். சிலவேளைகளில் மூதாதையர்கள் 'பேசு'வர். குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு ஏற்ப தீர்வுகள் சொல்வதுண்டு. மூதாதையரின் ஆவி தன் நகைச்சுவையான பேசின் மூலம் குடும்பத்தினரையும் மற்றவரையும் சிரிக்கவும் வைக்கும். அறைக்குள் நடப்பது எதுவும் ரகசியமாக நடப்பதில்லை. அந்நியர்களாக இருக்கக்கூடிய மற்றவர்களும் கேட்டுக்கொண்டும், பார்த்துக்கொண்டும் இருப்பார்கள். அவ்வகையில், மக்கள் பரவலாய் பலவிதப் பாடங்களைக் கற்கலாம் என்றே நம்பப்படுகிறது.&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406869&amp;amp;sid=mxH55qLPW7" border="0" /&gt;&lt;br /&gt;தெய்வமோ மூதாதையரோ பாலியன் தக்சுவின் உடலைவிட்டுச் சென்றதும், பாலியன் தக்சு தன்னிலை பெறுவார். உடனே, அவர் வாடிக்கையாளரிடம், தங்களுக்கு வேண்டிய விடை/தீர்வு கிடைத்ததா என்று கேட்டுக்கொள்வார். புனிதநீர் கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு, அடுத்தவரைக் கூப்பிட்டு மீண்டும் சடங்குகளைத் தொடங்குவார். நவீன யுகத்தில், மக்கள் பாலியன் தக்சு வழியாக மூதாதையர் 'பேசும் பேச்சு'க்களைப் பதிவுசெய்துகொண்டு, பலமுறை கேட்கவென்று வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406862&amp;amp;sid=yHP19gkPW6" border="0" /&gt;&lt;br /&gt;உள்ளூர் பாணி உணவுவகைகள் மற்றும் மற்ற கலாசாரத்தின் தாக்கம் கொண்ட சில மாற்றங்களுடனான உணவுகள் ஏராளம். எத்தனை வகை உணவு சாப்பிட்டாலும் கொஞ்சமாவது சோறு சாப்பிடவேண்டும் என்பது நியதி. வகைவகையாக அரிசியைச் சமைக்கிறார்கள். இவர்கள் அரிசிச்சோற்றுக் கொடுக்கும் முக்கியத்துவம் மிக அதிகம். இதற்கும் சமயத்தொடர்பையே நாம் பார்க்கலாம். எண்ணிலடங்காத பெண்தெய்வங்கள் கொண்ட அவர்களது கலாசாரத்தில் 'தேவி ஸ்ரீ' என்ற அரிசிக்குரிய தெய்வமே அவற்றுள் முதன்மையானது. இத்தெய்வத்திற்குத்தான் அறுவடை சமயத்திலும் வழிபாடுகள் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406867&amp;amp;sid=sPU54oFJS9" border="0" /&gt;&lt;br /&gt;இது தவிர பழவகைகள் இவர்களது உணவில் மிகமுக்கிய இடத்தைப்பிடிக்கின்றன. வாழைப்பழ வகைகள் மட்டுமே ஆயிரக்கணக்கில் விளைகின்றன இத்தீவில். இளநீர், பப்பாளி, பலாப்பழம், மரவள்ளிக்கிழங்கு, தேங்காய்ப்பால் போன்றயவையும். அரிசியை ஆவியில் அவித்து, பின்னர் புளிக்கவைத்துச் செய்யப்படும் பானம் போன்ற பலவகை பானங்கள் இங்கு மிகவும் பிரபலம்.&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406866&amp;amp;sid=EGR06isIY5" border="0" /&gt;&lt;br /&gt;பலவகைப்பண்டிகைகள் கொண்டாடப்பட்டபோதிலும் மிக முக்கியமானது புதுவருடப்பிறப்பு. 'நையிபி' என்றழைக்கப்படும் இந்நாளில் தீவே அமைதியில் ஆழ்ந்திருக்கும். அன்று பயணம் செல்வது, நெருப்பூட்டுவது, பணிக்குச் செல்வது போன்றவை தவிர்க்கப்படும். வீட்டைவிட்டு யாரும் வெளியில் செல்லமாட்டார்கள். அதற்கு முதல் நாள் அதற்கு நேர்மாறாக இரைச்சலாய் இருக்கும். கொண்டாட்டமும் குதூகலமுமாக இருக்கும் இந்நாளே தீவின் ஆக அதிக இரைச்சல் மிகுந்த நாள் என்றறியப்படுகிறது. ஆங்காங்கே தீவெங்கும் உலாவுவதாக நம்பப்படும் பூதாதிகளுக்கு சாலை கூடுமிடங்களிலெல்லாம் இறைச்சிவகைகள், மதுவகைகள் என்று படையல்களாகப் அடுக்கப்பட்டிருக்கும். பின்மாலையில் இருள் கவியும் நேரம் எல்லோருமே வெளியில் வீதிகளில் வந்து பெரிய வாத்தியக்கருவிகளைப் பேரதிவுகளுடன் இசைத்து, தீப்பந்தங்கள் கொளுத்தி தீயசக்திகளை விரட்டுவர். அடுத்த நாளான புத்தாண்டன்று விரட்டப்பட்ட தீயசக்திகள் மீண்டும் வராமலிருக்கத்தான் அமைதி காக்கிறார்கள். அவை வந்தாலும், பாலியில் மனிதநடமாட்டமே இல்லையென்று ஏமார்ந்து போய் ஓடிவிடும்.&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406865&amp;amp;sid=lmN63eEGJ2" border="0" /&gt;&lt;br /&gt;படையலுக்கு ஏற்புடையவற்றை அலங்காரமாக அடுக்கிவைப்பது பெண்களின் பணி. சிறுமிகள் சிறுவயது முதலே பெரிய பெண்களிடமிருந்து இதைக் கலை நயத்தோடு செய்யக் கற்கிறார்கள். 'பன்தென்' என்றழைக்கப்படும் இக்கலையை பெண்கள் மிகுந்த ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் கற்கிறார்கள். பனையோலைகளைக் கோண்டு கூடைபோன்ற தட்டுகளைச் செய்கிறார்கள். படையலுக்கு மிகவும் முக்கியமானது அரிசி மாவால் செய்த பிஸ்கட்டுகள். இவை மரம், செடி, கொடி, விலங்கு, மனிதன் போன்ற பல்வேறு வடிவிலும் செய்யப்படும். அவற்றுடன், பூக்கள், பழங்கள், அரிசி, கருப்பு, முட்டை, தேங்காய் மற்றும் இறைச்சி ஆகியவற்றையும் சேர்த்து அழகாக அடுக்குவார்கள். ஒவ்வொரு அடுக்கின் மேலும் மூன்று வெற்றிலைகள் அடுக்கபடும். இவை பிரம்மா, விஷ்ணு, சிவனுக்கானவை. இதுபோல இக்கலையில் ஒவ்வொன்றுக்கும் ஒருவிளக்கம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406864&amp;amp;sid=nxz60orVY7" border="0" /&gt;&lt;br /&gt;'கலுங்கன்' மற்றொரு முக்கியப் பண்டிகை பாலியில். பத்துநாட்களுக்குக் கொண்டாடப்படும் இப்பண்டிகையின் போது தெய்வங்களும் முதாதையர்களும் பூமிக்கு வருகிறார்கள். பாலியர்கள் பலமணிநேரம் செலவிட்டு வீதியோரங்கள், வீடுகள், கோயில்கள் என்று ஆங்காங்கே விதவிதமான நுணுக்கங்களுடன் கூடிய அழகிய அலங்காரங்களை ஆர்வத்துடன் அமைக்கிறார்கள். இக்காலத்தில் தான் தீவெங்கும் இருக்கும் இந்துக்கோயில்களில் பலவகையான பெரியளவுக் கொண்டாட்டங்கள் நடைபெறும். இவ்விழாவும் புத்தாண்டைப்போல மார்ச் மாதத்தில் தான் கொண்டாடப்படுகிறது. எல்லா மாதங்களிலும் பண்டிகைகளும் விழாக்களும் நடந்தபடியே தான் இருக்கும். அதில் அதிகமானவை இந்துக்கோயில்களில் நடக்கும் சமயவிழாக்கள். சிறுபான்மையிரால் கொண்டாடப்படும் மொஹ்ரம், ரம்ஸான், ஈஸ்டர்,ஆங்கில வருடப்புத்தாண்டு மற்றும் கிருஸ்துமஸ் போன்ற விழாக்களும் உண்டு. இதுதவிர விதவிதமான வடிவங்களோடு, கண்கவர் வண்ணங்களில் பெரியபெரிய பட்டங்கள் பறக்க விடும் விழா போன்ற பொதுவிழாக்களும் கணக்கேயில்லாமல் கொண்டாடப்படும்.&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406862&amp;amp;sid=yHP19gkPW6" border="0" /&gt;&lt;br /&gt;கோயில் திருவிழாக்களில் 'பாரோங்க்' என்றழைக்கப்படும் நடனநாடகம் நடத்தப்படும். இதில் பலவகையுண்டு. 'பாரோங்' என்பது புராணவிலங்கு ஒன்றினைக்குறிக்கும். இது 'ரங்டா' எனப்படும் சூன்யக்காரியை அழித்து தீவைக் காப்பதால் பாலியர்களுக்கும் பாரோங்கை மிகவும் பிடிக்கும். பெரும்பாலும் இரு ஆண்கள் ஆடுகிறார்கள். முகமூடிகளையணிந்து இந்நடனத்தை ஆட பிராமணர்களுக்கே உரிமையுண்டு. சண்டையிடுவதைப்போன்ற பாவனையோடு, நடனம் உச்சத்தையடையும்போது நன்மையும் தீமையும் சேர்ந்தே இருக்கமுடியும் என்பதை உணர்த்துவிதமாக இருபுறமும் வெற்றி தோல்வியின்றியே முடியும். முகமூடிகள் கோயிலிலேயே வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருக்கும். அதற்கும் சடங்குகள் செய்யப்படுகின்றது. இது தவிர பெண்களுக்கே உரிய நளின அசைவுகளுடனான பாரம்பரிய வகை நடனங்களும் உண்டு.&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406863&amp;amp;sid=nPS82jpxF6" border="0" /&gt;&lt;br /&gt;விதவிதமான மரத்தாலான காற்று வாத்தியங்கள், தந்தி மற்றும் தாள வாத்தியங்கள் கொண்ட பாலியர்களின் இசை குதூகலம் நிறைந்தது. இசையும் பெரும்பாலும் மதநம்பிக்கைகளோடு தொடர்புடையதாகவே இருந்துவருகிறது. இசைக்குழுக்கள் 'கமெலன்' என்றழைக்கப்படுகின்றன. நடனம், நடன நாடகம், இசை போன்று ஓவியமும் பலவிதமான வளர்ச்சிகளைக் கண்டுவந்துள்ளது. மதம் சார்ந்த புராணங்களைச் சித்தரிக்கும் பாரம்பரிய ஓவியங்களோடு நவீன ஓவியங்களும் இவர்களது கலாசாரத்தில் தீட்டப்பட்டு வருகின்றன. மரம் மற்றும் கல்லில் சிற்பக்கலை, தங்கம் வெள்ளி போன்ற உலோகங்களில் நுணுக்கங்கள் நிறைந்த கலைப் பொருட்கள் ஆகியவையும் பாலியின் சிறப்புக்கள். ஜாவாவிலிருந்து பெறப்பட்ட 'பதிக்' எனப்படும் துணிஓவியம் உள்ளூர் ரசனைக்கேற்ப சின்னஞ்சிறு மாறுதல்களுடன் பொலிகிறது.&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406868&amp;amp;sid=wLV92dCLM4" border="0" /&gt;&lt;br /&gt;இறப்பை அறிவிக்க கோயிலின் உச்சியிலிருக்கும் மணி அடிக்கப்படுகிறது. இறப்பு இன்னொரு உலகிற்கான பயணம் என்று அவர்கள் நம்புவதால், அழுகை என்ற பேச்சுக்கே இடமில்லை. காகிதம் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட கோயில் போன்ற பல்லக்கிலோ அல்லது எருமை வடிவம் கொண்ட பல்லக்கிலோ உறங்குபவரைப் போல இறந்தவரைப்படுக்க வைத்து இறுதி ஊர்வலத்தைத் துவங்குகிறார்கள். மறுபிறவி எடுக்கக் கூடிய ஆன்மாவிற்கு சில சடங்குகள் செய்து சிதை எரியூட்டப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனித்துவம் வாய்ந்த கலாசாரத்தைக் கொண்டிருக்கும் பாலியர்கள் வாழ்க்கையில் மிகவும் திருப்தியடைந்தவர்கள் என்றால் அது சற்றும் மிகையில்லை. ஒரு பாலியரிடம் போய்,"சொர்க்கம் எப்படியிருக்கும்", என்று கேட்டோமானால், சற்றும் தயங்காது,"ஒரு விதமான கவலையும் இல்லாமல் பாலியைப்போல இருக்கும்", என்பார். அவர்கள் பாலியில் பிறந்து, பாலியில் இறந்து பின்னர் பாலியிலேயே மறுபிறவி எடுக்கத்தான் விரும்புகிறார்கள். இருப்பினும், பாலியர்கள் தவிர்க்கமுடியாத மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உடையவர்கள்தான் என்பதற்கு நிறைய வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--------- ஜெயந்தி சங்கர்&lt;br /&gt;&lt;br /&gt;(முற்றும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி நிலாச்சாரல்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9687302-114800933578847631?l=jeyanthisankar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyanthisankar.blogspot.com/feeds/114800933578847631/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9687302&amp;postID=114800933578847631&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/114800933578847631'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/114800933578847631'/><link rel='alternate' type='text/html' href='http://jeyanthisankar.blogspot.com/2006/05/blog-post_19.html' title='பாலி'/><author><name>ஜெயந்தி சங்கர்         (Jayanthi Sankar)</name><uri>http://www.blogger.com/profile/04533483437106248358</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9687302.post-114773902734583642</id><published>2006-05-16T08:17:00.000+08:00</published><updated>2006-05-17T17:38:32.586+08:00</updated><title type='text'>நான் அவனில்லை    ( சிறுகதை )</title><content type='html'>&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=472159&amp;amp;sid=hnr29dpvy7" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிக நிறுத்தங்கள் இல்லாமல் தம்பனீஸிலிருந்து ஈஷ¤னுக்கு விரைந்து செல்லும் பேருந்தில் ஏறினாள் மீனா. கவிதா பள்ளியிலிருந்து வந்திருப்பாள் என்று நினைத்துக்கொண்டே நின்றவளுக்கு அடுத்த நிறுத்தத்திலேயே உட்கார வாகாய் இடம் கிடைத்தது. அருகில் உட்கார்ந்திருந்த சீனர் 'பீயர்' குடித்திருந்தார் என்று அவளின் நுகர்புலன் பளிச்சென்று கிரகித்த செய்தியை மூளை சொன்னது. ஐந்து வருடங்களுக்கு முன்பென்றால், உட்காராமல் நின்று கொண்டே பயணித்திருப்பாள். சென்ற சில வருடங்களில் வீட்டிலேயே மேற்படி வாடைகள் வாடிக்கையானதில் அவளுக்கு பழகி வெறுப்பு விடைபெற்றுவிட்டிருந்ததோ. யோசிக்கும்போது ஆச்சரியமாகவும், ஏன் சிரிப்பாகவும் கூட இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திறந்தவெளிச் சாப்பாட்டுக் கடைகளில் கூட குடிக்கும் மற்ற இனத்தவர் பெரும்பாலும் கலாட்டாக்கள் செய்வது இல்லை. கடந்துசெல்லும்போது சில இந்தியர்களின் ஆர்பாட்டங்களை கவனிக்க நேர்ந்தால், கூனிக்குறுகித் தான் போவாள் மீனா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கைப்பையிலிருந்து செல்பேசியை எடுத்து வீட்டிற்குத் தொலைபேசினாள். பலமுறை அடித்தபிறகுதான் கவிதா," ஹலோ, அம்மா, இப்பதாம்மா வீட்டுக்குள்ள நொழஞ்சேன். உடனே நீங்க போன் அடிச்சிட்டீங்க", என்றாள் உற்சாகமாய். "சாப்டியா? நாளைக்கி என்ன கணக்கா? ரூமுக்குப் போய் படிம்மா, ம், சரியா", என்று சொல்லி முடித்துத் துண்டித்தாள். சாப்பாட்டின் நினைவு பசியை அதிகப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடடா, அப்பா வந்து விட்டாரா என்று கேட்க மறந்துப்போனோமே என்று தோன்றியது. வந்து தானிருக்கவேண்டும். பிற்பகலிலேயே மூக்கிலிருந்து ஒழுகும் அளவிற்குக் குடித்திருந்ததால், போதையில் தொலைபேசி அடித்தது எப்படிக் கேட்கும். வரவர சலிப்புதான் மண்டியது.&lt;br /&gt;போன செவ்வாயன்று பின்மாலையில் பேசிக்கொண்டிருந்தபோது, "உங்க 'ஹெல்த்' கெட்டுப்போயிடும், இத விட்டுடுங்க டாடி", என்று மகள் அருகில் அமர்ந்து கொஞ்சினாள். உடனே, "ஆமாடா கண்ணு, இனிமே அதுகிட்டக் கூடப் போகமாட்டேன் ! " மீறுவதற்கென்றே செய்யும் அழுத்தமான சத்தியங்கள்.  பள்ளிப்பாடங்களில் படித்ததையும், அப்பாவுக்காகவே இணையத்தில் தேடியதில் கிடைத்த தகவல்களையும் வரிசையா ஒவ்வொன்றாய் விரித்து விளக்க ஆரம்பித்து விட்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் 'குடிக்காதே', என்று மீனா சண்டைபோடும்போது வாயைமூடிக் கொண்டிருந்துவிட்டு, " மீனா, இனிமேல் அதத்தொட்டேன்னா கேளு", என்று மனைவிமேலும், மகளின் மேலும் சத்தியம் செய்துவிட்டு அடுத்த நாளே பாட்டில்களுடன் வந்ததைப்போலவே புதனன்றும் வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;" எம்பொண்ணு பார்க்கதாண்டி அச்சு உன்னைய மாதிரியேயிருக்கா. ஆனா, கொணத்துல அவ எங்க அம்மாவேதான்", என்று வாயுக்கு வாய் நெகிழ்ச்சியுடன் சொல்வார். ஒரே மகளைக் கொண்டாடுவதும் கூத்தடுவதும் போத்தலைத் திறக்கும் வரைதான். அதன் பிறகு, தேவனொருவன் சாத்தானாகிப் போனானோ என்றெண்ணும் படிதான் இருக்கும் தோற்றமும் செயலும். எப்போதும் மிடுக்காக உடுத்தியிருக்கும் காப்பீட்டு அலுவலக அதிகாரியா என்று வியக்கும்படி. உடை நழுவுவதும் தெரியாமல், கொளகொளவென்று நடந்து, தன்னிலை மறந்து, மங்கல் பார்வையோடு தடுமாறுவதைப்பார்த்தால், அந்நியன் யாரையோ பார்த்ததுபோலிருக்கும் அவளுக்கு ஒவ்வொருமுறையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிதாவின் அப்பா குடித்துவிட்டால், முன்னால் நிற்பது ஆணா, பெண்ணா, நாயா பூனையா என்றுகூடத் தெரியாதபடி மயங்குவார். நல்லவேளை வீட்டோடு குடிக்கிறார் என்று ஒரு சின்ன நிம்மதி. அதற்கு மட்டும், " பொதுவிடத்துல போதைல என்ன செய்றேன்னு தெரியாது. எதுக்கு வீணான்னுதான் மீனா நா வீட்டுக்கு வந்து குடிக்கிறேன் தினமும். ", என்று பெருமையாகச் சொல்லவேண்டியது. குழந்தைக்குச் சொல்வதைப்போல பன்னிப் பன்னியும், கோபத்தில் பளேர் பளேரென்று அடிக்கும் வார்த்தைகளாலும் சொல்லிப் பார்த்தாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை சாலை விபத்தில் காலை உடைத்துக்கொண்டு, இரண்டு மாதங்கள் வீட்டிலிலேயே இருக்கவேண்டியிருந்தது. பாழாய்ப்போன குடிப்பழக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தார் வரப்போக இருந்த அவரின் 'உற்ற நண்பன்'. குடித்து அழிந்தாலும் கவலைப்பட யாருமில்லாத தனிக்கட்டையான அவர் குற்றவுணர்வால், பின்வந்த நாட்களில் வீட்டுப்பக்கம் தலைவைத்தே படுப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த நாலைந்து வருடங்களில் நூறாயிரம் சண்டைகள். மீனா கவிதாவை இழுத்துக்கொண்டு பினாங்கில் இருக்கும் அம்மாவீட்டுக்கு போவது, அதற்குப்பிறகு தொலைபேசியில் மீனாவிடம் கெஞ்சுவதும், பிறகு தானே நேரில் வந்து கூட்டி வருவதும் நிறைய தடவைகள் நடந்தேறிவிட்டன. ஒரேநாள் குடிக்காமல், குட்டிபோட்ட பூனையாக வீட்டிற்குள் வலம் வந்து, செய்வதறியாது விழித்து, அசடுவழியச் சிரித்து, இரவெல்லாம் தூங்க முடியவில்லையென்று புலம்பிவிட்டு, மறுநாளே சேர்த்துவைத்துக் குடிக்கவேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வருடம் மருத்துவரின் உதவியோடு ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்தும் சிகிச்சையாகச் செய்து பார்த்தாயிற்று. விடாமல் குடித்த உடம்பு குடிக்காமல் பட்ட பலவித கஷ்டங்களைப் பார்த்ததும் தாயும் மகளும் அவர் இயல்பாய் தன்னிச்சையாய் குடியை விடட்டும் என்று கூட்டிக்கொண்டு வந்துவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிதாவுக்கு அவளின் அப்பாவுடனான உறவில் தேனித்திருக்க, நினைவில் நிலைத்துப் போயிருந்த நிகழ்வுகள் ஏராளம் இருந்தன. நூலகத்தில் வெகுநாட்களாகத் தேடிய புத்தகம் கிடைத்த மகிழ்ச்சி, இரவல் வாங்கிப் போட்டிபோட்டுக் கொண்டு படித்தது, நீச்சல் குளத்தில் மறுகரையைத் தொடவென்று நீந்தியது என்று நீண்டு, தந்தையர் தினத்துக்கும் மகளின் பிறந்தநாளுக்கும் பரிசுகள் பரிமாறிக்கொண்டது என்று சின்னதும் பெரிதுமாக நிறைய. தகப்பனும் மகளுமாய் கட்சிகட்டிக்கொண்டு மீனாவைக் கிண்டலும் கேலியும் செய்த சந்தர்ப்பங்களும் அதில் அடக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கத்தைவிட சீக்கிரமே விரட்டிக்கொண்டு வந்துவிட்டார் மலாய் ஓட்டுநர். வெயில் இன்னமும் கொளுத்திக் கொண்டிருந்தது. விடுவிடுவென்று நடந்து அடுக்ககத்தின் மின்தூக்கியில் ஏறி ஆறாம் மாடியை அடைந்து, வாயிற்கதவைச் சாவிபோட்டுத் திறந்துகொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளறையிலிருந்து, "அப்பா, ப்ளீஸ் அப்பா, என் காலு நசுங்குதுப்பா, நகருங்க. உங்க மீச குத்துது டாடி,.நகருங்க", என்று கவிதா தீனமாய் முனகுவது கேட்டது. முரட்டுத்தனமாய் ஏதாவது விளையாடுகிறார்களோ என்று நினைத்தபடி அறைக்குள் எட்டிப்பார்த்தவள் வானமே என் தலையில் விழுந்தாற்போன்ற பேரதிர்ச்சியில் அப்படியே உறைந்தாள் !&lt;br /&gt;ஒரு நொடிதான். பாய்ந்து சென்று கவிதாவின் மீது கவிழ்ந்து படுத்திருந்தவரைப் பிடித்து ஒரே தள்ளு தள்ளிவிட்டதும் படுக்கையின் நடுப்பகுதியில் தொப்பென்று விழுந்து, சிறிதும் சலனமேயின்றி அப்படியே கிடந்தார். "அடப்பாவி மனுஷா, போச்சே புத்தி", என்றபடி ஓங்கி ஒரு குத்து வைத்தாள் முதுகில். இதற்கெல்லாம் அசைவேனா என்று கிடந்ததைப்பார்த்து ஆத்திரம் பொங்கியது. மீண்டும் தோளைப்பிடித்து உலுக்கி கோபமாகக் கத்திப்பார்த்தாள். ஒரு குடம் தண்ணீரைக்கொட்டினாலும் பலனிருக்காது என்று சலிப்புடன் அறையைவிட்டு வெளியேறும் போது அங்கிருந்த மேசையில் அப்பாவியாய் நின்றிருந்த இரண்டு காலிபாட்டில்கள் கண்ணில் பட்டன. முதுகிற்குப் பின்னால், "மீயா, ஆய் மீயா, யாழு, யகள பண்ணழ்து", என்ற முனகல் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முட்டைக்கண்ணை விரித்துத் திருதிருவென்று விழித்துக்கொண்டு நின்றிருந்த கவிதாவைக் கூட்டிக்கொண்டு கூடத்திற்கு வந்தபோது, " நான் மட்டும் இன்னும் கொஞ்சம் தாமதமாக வந்திருந்தால்," என்ற எண்ணம் தோன்றியதுமே மீனாவினுள் நடந்திருக்கக்கூடியதை நினைத்து பயம் தலையோடு கால் சிலிர்த்து அடங்கியது. கவிதாவின் முகத்தைப் பார்த்தாள். காலையில் பள்ளிக்குச் செல்லுமுன் பின்னிவிட்டிருந்த இரட்டைப்பின்னல்கள் சீரின்றிக் கலைந்திருந்தன. முகத்தில் எந்தவிதமான பெரிய உணர்ச்சியும் இல்லாமல் நின்றாள். விபரீதம் புரியவில்லையோ ஒருவேளை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேலியே பயிரை என்றெல்லாம் தோன்றியது சரிதானா என்றே முதலில் புரியவில்லை. ஆனால், போதையில் நிதானம் இழக்கும் தகப்பன் உயிராய் இருக்கும் மகளுக்கே தீங்கிழைக்கவிருந்தார் என்பது மீனா சற்றும் எதிர்பார்க்காதது மட்டுமில்லாமல், கண்ணால் காட்சியைலவள் மனம் இன்னமும் ஏற்றுக்கொள்ளவும் நம்பவும் ஆரம்பிக்கவில்லை.&lt;br /&gt;கொஞ்ச நேரத்தில், மீண்டும் இத்தகைய விபரீதம் வருமுன்னர் தடுக்கவேண்டியதன் அவசியம் மட்டும் புரிந்தது. எப்படி என்று தான் தெரியவில்லை. வேலையைவிட்டுவிட்டு வீட்டோடு மகளுக்குக் காவலிருப்பதா? குடிகாரனுக்கு அப்படியெல்லாம் மறைமுகமாக சௌகரியம் செய்துகொடுப்பதாவது? வெளியில் போகும்போதும் வரும்போதும் மீனா மகளின் பாதுகாப்பில் அக்கறைகொள்வது இயல்பு. வீட்டிலேயே என்றால்,.. நினைக்கும்போதே வேதனையும் கோபமும் மிகுந்தது. இப்படியரு இக்கட்டு வருமென்று யார் தான் நினைத்திருப்பர்? குற்றம் சூழ்நிலையின் மேலேயே இருக்கட்டும். அத்தகைய சூழலை உருவாக்கும் குடியை விட்டால் தான் என்ன இந்த மனுஷன்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;" கவிதா, உடனே கிளம்பி பாட்டிவீட்டுக்குப் போயிடுவோம். எப்ப விஷயம் இவ்வளவு தூரம் வந்துடுச்சோ, அப்ப நாம இங்க இருக்கறது ஆபத்து. எப்படியும் உங்கப்பா குடிக்கறதையும் நிறுத்தப்போறதில்லை. நான் பினாங்குலயே ஒரு வேலையத் தேடிக்கவேண்டியதுதான். உன்னையும் அங்கயே நல்லதா பார்த்து ஒரு பள்ளிக்கூடத்துல சேர்த்துடறேன்". பயணப்பையை அலமாரியின் மேல்தட்டிலிருந்து எடுத்து, அதன் வாயைப் பிளந்து, கையில் கிடைத்த துணிகளை ஒவ்வொன்றாய் எடுத்து அதனுள் போட்டாள். போடப்போட கவிதா அவற்றை எடுத்து எடுத்து வெளியே வைத்தாள். எரிச்சலுடன் கவிதாவின் முகத்தை ஏறிட்டாள். அப்போதுதான் கவனித்தாள். தன்னுடைய சின்ன பொட்டை வைத்துக்கொள்ளாமல் அம்மாவின் பெரிய அடர்சிவப்புப் பொட்டை நெற்றியில் வைத்திருந்தாள்.&lt;br /&gt;" ஏய், அதென்ன என்னோட பொட்ட வச்சிருக்க,.."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஹி ஹி, அதுவா, முகம் கழுவினதும் கண்ணாடியில உங்க பொட்டப் பார்த்தேனா, சும்மா வச்சிப்பார்ப்போம்னு தான் வச்சேன். நல்லா இருக்கில்ல, ...ஏம்மா, எனக்கு எக்ஸாம்ஸ் வருது. இப்போபோயி பாட்டிவீட்டுக்கு போலாம்ங்கறீங்களே"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அடியே, இப்ப நாங்கொஞ்ச லேட்டா வந்திருந்தா என்னாவாயிருக்குமோ,.. புரிஞ்சுதான் பேசறியா? இல்ல, உங்கப்பா மேல உனக்கிருக்கற அன்பும் நம்பிக்கையும் உன் புத்திய மழுங்கடிக்கிதா? இதுக்கு ஒரே வழி, இதான். கெஞ்சினாலும் மிரட்டினாலும் திரும்பி வரமாட்டேன். கிளம்புடி, சொல்றேன்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா, நா கணக்குல ஒரு சந்தேகம் கேக்கலாம்னு அப்பாவோட அறைக்குள்ள போனேன். என்னப்பார்த்ததுமே சிரிச்சுகிட்டே மீனா, மீனான்னு திரும்பத்திரும்ப உங்க பேரச்சொன்னாரு. அப்பா என்னோட தலகாணி விளையாடத் தான் வராராக்கும்னு,.."&lt;br /&gt;நிகழ்வின் தீவிரத்தைப்புரிந்துகொண்டதற்கான அடையாளங்கள் கவிதாவின் முகத்தில் கொஞ்சம் தென்பட்டன. பன்னிரண்டு வயதுக்கு கொஞ்சம் கூடப்புரியாமல் போகுமா என்ன. சில நிமிடங்கள் பேசாமல் தரையையே பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு நிமிர்ந்து அம்மாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே தயங்கித்தயங்கி, "குடிச்சாதாம்மா அப்பா கெட்டவரு. இல்லன்னா,.."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லன்னா ரொம்ப நல்லவருன்ற. சரி, இருக்கட்டும். ஆனா, குடிக்காத நாளே இல்லயே,.."&lt;br /&gt;"அம்மா, நானே அவர மாத்த ட்ரை பண்றேம்மா. ஒரே ஒரு சான்ஸ் கொடுங்கம்மா. இந்தத் தடவ அவரு குடிக்கறத நிறுத்தல்லன்னா நீங்க சொல்றத நாங்கேக்கறேன். ப்ளீஸ்மா எனக்கு அப்பா வேணும்மா", என்றசொல்லிக்கொண்டே மீனாவின் யோசிப்பில் இருந்த தீர்மானத்தை உணர்ந்தோ என்னவோ பெரிதாய் அழக்கிளம்பினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவளைச் சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. "கவிதா, அழதா,."&lt;br /&gt;நடந்த அமர்க்களத்தில் பசி மந்தித்திருந்தது. ஒரு டம்ளர் மோர் மட்டும் குடித்து விட்டு, சிந்தனையிலும் உடலியக்கத்திலும் முனைப்பின்றி சோபாவில் சரிந்திருந்தாள். கவிதா கணக்குப் போடப் போய்விட்டிருந்தாள். குருட்டு யோசனை கோபம் தோய்ந்திருந்தது. இடையில் ஒரு முறை அறைக்குள் எட்டிப்பார்த்தாள். உள்ளிறங்கிய சரக்கு வழக்கத்தைவிட அதிகம் போலும். அசைவையே காணோம். அருகில் போய் உலுக்கி எழுப்பி சண்டை போடுவோமா என்று நினைத்துபின், தனது உடற்சோர்வை நினைத்து, மனதை மாற்றிக் கொண்டாள். நடுராத்திரியில் எழுந்து தானே சாப்பிட்டுவிட்டு போட்டதுபோட்டபடி மறுபடியும் கொஞ்சம் சுருதி ஏற்றிக்கொண்டு படுத்தாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிரவு கவிதாவின் அறையில் உள்பக்கம் தாளிட்டுக்கொண்டு உறங்கும் மகளையே பார்த்தபடி, புரண்டுகொண்டேயிருந்தாள். மதியம் அடித்த வெயிலை ஈடு செய்ய, இடியோடு பெருந்தூறல் கிளம்பியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன் அப்பாவில் இருந்த குடிப்பழக்கத்தையும் தாண்டி கவிதாவுக்கு அவளின் அப்பாவிடம் இருந்த அபிமானம் ஆச்சரியத்தைக் கொடுத்தது. பளிங்குபோன்ற அவளின் வெள்ளை மனம் மீனாவுக்குள் சின்ன நிம்மதியைக் கொணர்ந்தது. அவளைப்போலத் தன்னால் யோசிக்க முடியவில்லையே என்று கூட ஏங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏழாவது மாடியில் தினமும் அலாரம் வைத்தாற்போல அழும் ஒரு வயது வாண்டு அழவாரம்பித்தான். அவனின் அம்மா முதலில் காள்காள்ளென்று கத்திவிட்டு, களைப்பு மேலிட இறுதியாக வழக்கம்போல் முதுகில் தட்டிக்கொண்டே, "க்வாய், க்வாய்", என்று சீனத்தில் சமாதானப்படுத்தினாள். கவிதாவின் அப்பா தினமும் குறித்த நேரத்தில் குடிப்பதைப்போல இவனின் அழும் படலம். அழுவதில் அவனுக்கு போதையோ !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன் ஒரே மகளுக்கு ஏதும் நேர்ந்துவிட்டிருந்தால் என்ற பயம் மட்டுப்பட்டு நடுநிலையுடன் யோசிக்க ஆரம்பித்தாள் மீனா. நாளை எழுந்ததும் தன் செயலை அறிந்தவுடன் கவிதாவின் அப்பா படப்போகும் அதிர்ச்சியும் அவமானமுமே அவருக்கு ஒரு பெரிய தண்டனையாகப் போகிறது. மகளின் மேலிருக்கும் பாசம் காரணமாய் குடிகாரனின் சத்தியமாக இல்லாமல், உண்மையிலேயே மனதில் உறுதியும் தீர்மானமும் பிறக்கலாம். பார்ப்போமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;---------ஜெயந்தி சங்கர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முற்றும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : நிலாசாரல்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9687302-114773902734583642?l=jeyanthisankar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyanthisankar.blogspot.com/feeds/114773902734583642/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9687302&amp;postID=114773902734583642&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/114773902734583642'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/114773902734583642'/><link rel='alternate' type='text/html' href='http://jeyanthisankar.blogspot.com/2006/05/blog-post_16.html' title='நான் அவனில்லை    ( சிறுகதை )'/><author><name>ஜெயந்தி சங்கர்         (Jayanthi Sankar)</name><uri>http://www.blogger.com/profile/04533483437106248358</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9687302.post-114653804620784930</id><published>2006-05-02T10:42:00.000+08:00</published><updated>2006-05-02T10:50:02.376+08:00</updated><title type='text'>செங் ஹ</title><content type='html'>&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406840&amp;amp;sid=kov88BZFN8" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொலம்பஸ¤க்கும், வாஸ்கோடகாமா வுக்கும் முன்னரே கிழக்கு நோக்கி அமெரிக்காவரை சென்று மேற்கிலும் ஆப்பிரிக்காவின் மேற்கரைவரை சென்று திரும்பியவர் சீனவீரன் செங் ஹ என்றால் நம்பமுடிகிறதா ? ! இவ்வாண்டு அவரின் பயணங்களின் துவங்கி 600 ஆண்டுகள் முடிவடைவதை விழாவாகக் கொண்டாடப்படுகிறது தென்கிழக்காசியா மற்றும் சீனா.&lt;br /&gt;'மா ஹ' என்ற பால்ய பெயரைக்கொண்ட செங் ஹ, 'யுன்னன்' என்ற தென்மேற்கு மாநிலத்தின் ஏழைக் குடும்பம் ஒன்றில், குன்யாங் என்ற சிறுநகரில் பிறந்தார். நிலவழிப்பயணமாக மக்காவிற்குச் சென்றனர் அவரின் தந்தை மற்றும் தாத்தா. அரேபிய மொழி, சீனம், மேலைநாட்டுக் கலாசாரம் மற்றும் பூகோளம் ஆகியவற்றை பயின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406834&amp;amp;sid=cFS29loCV1" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1368 ஆம் ஆண்டு சீனாவின் யுவன் முடியாட்சி முடிந்து மிங்க் முடியாட்சி துவங்கியது. அந்த சீனஇஸ்லாமியச் சிறுவன் செங் ஹ இளவரனுக்கு நண்பனானான். பிற்காலத்தில் இளவரசன் அரசனாக, நண்பன் செங் ஹ மனித இனத்தின் மிகமுக்கிய கடற்பயணத் தலைவனாவான் என்று அன்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. பத்து வயது முடிந்திருந்த செங் ஹ அரசகுடும்பத்தின் ஊழியனாகத் தேர்வு செய்யப்பட்டார். செங் ஹ எட்டடி உயரம் இருந்ததாகவும், கட்டுமஸ்தான உடலுடன், கூர்மையான முக உறுப்புகள், நீண்ட காதுமடல்கள் கொண்ட செங் ஹோ உறுதியான உரத்த குரலையுடையவர், புலியைப்போல நடையுடயவர் என்றும் அறியப்பட்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு நோக்கியபயணத்தில் அமெரிக்காவிற்கு மிக அருகில் போயிருக்கிறார் என்பதற்கான ஆதரங்களுண்டு. இந்தியப் பெருங்கடலில் பயணித்து கிழக்கு ஆப்பிரிக்கா, மக்கா, மலபார், இலங்கை, இந்தோனேசியா மற்றும் அரேபியப் பகுதிகளின் கரைகளைத் தொட்டவர் சீனத்தின் முக்கிய கடற்படை வீரர்களுள் ஒருவரான செங் ஹ. ஒருவகையில் ஆசிய வட்டாரத்தில் அக்காலத்தில் சீனா ஒரு பெரும்சக்தியாக உருவெடுக்க மறைமுகமாய் உதவியவராவார். 1420ல் ஐரோப்பியாவின் மொத்த கடற்படையைவிடப் பெரியதாகயிருந்தது சீனக் கடற்படை என்றால் நம்பமுடியவில்லையல்லவா? ஆனால், இருந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகெங்கிலும் இருக்கும் பழங்குடிகளுக்கு நாகரிகத்தைக் கற்பிக்கவென்றும், கன்·ப்யூஷியத்தைப் பரப்பவென்றும் அரசனால் செங் ஹ அனுப்பப் பட்டதாகவும் பல செய்திக்குறிப்புகள் உண்டு. அரச ஊழியராக நியமனமானதும், அவர் பௌத்தத்தைத் தழுவினார் என்றும் கூறப்படுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொலம்பஸ் 'செயிண்ட் மரியாஸ்' என்னும் 85 அடி நீளக்கப்பலில் 1492ல் அமெரிக்காவை அடைந்தார். அதில் 90 பேர் மட்டுமே இருந்தனர். ஆனால், கிட்டத்தட்ட 80 வருடங்களுக்கு முன்பே, 1405 முதல் 1433 வரை ஏழு முறை கப்பற்பயணத்தை மேற்கொண்டவர் மிங்க் முடியாட்சியைச் சேர்ந்த மாலுமி செங் ஹ என்பது மிகவும் வியக்கத்தக்கது. இவர் 'புதையல்' என்ற பெயர் கொண்ட 400 அடி நீளம் இருந்த கப்பலைப் பயன்படுத்தினார். 28 வருடங்களின் 50,000 கிலோமீட்டர் பயணித்து 37 நாடுகளைச் சென்றடைந்தார் என்பது ஆச்சரியத்தை அளிக்கக்கூடியது. அதில் சிங்கப்பூரும் அடங்கும். கப்பற்படையின் தலைவர்கள் முதலில் ஐரோப்பாவிற்குப் போவதைப்பற்றி ஆலோசித்து, பின் கைவிட்டனர். போயிருந்தால், ஒருவேளை உலக வரலாறு வேறு விதமாகியிருக்கலாமோ !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதன்முதலில் 1405 ஆம் ஆண்டு கிளம்பிய போதே, செங் ஹவின் பிரமாண்டமான கப்பற்படை 317 கப்பல்கள், 27,870 த்துக்கும் மேற்பட்ட போர்வீரர்கள், கணக்கர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பாடகர்கள், நடனமணிகள், மருத்துவர்கள், வானிலை வல்லுனர்கள்,கப்பலோட்டிகள், பல சிறியகப்பல்கள், குதிரைகள், அவற்றுக்கான உபகரணங்கள், சிறியபடகுகள், ஏராளமான பொருட்களைக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பயணத்தின் முதல் இலக்கு இன்றைய வியட்நாமின் ஒருபகுதியான 'சம்பா' என்ற ஊர். ஆனால், புயலில் சிக்கினர். அப்போது, கடலலை மிகவும்முரட்டுத்தனமாக இருக்கவே கப்பல்கள் கவிழ்ந்து கிட்டத்தட்ட மூழ்கும் நிலையேற்பட்டது. சில வீரர்கள் இறக்கத் தயாரானார்கள். மற்றவர்களோ தாவோ தெய்வத்தை வணங்கினர். பிரகாசமான ஒளியாகத் தோன்றியதாகவும், தோன்றியதுமே கடல் அமைதியானதாகவும் செங் ஹவே எழுதியிருக்கிறார். அன்றிலிருந்து செங் ஹ போன இடத்திற்கெல்லாம் தெய்வம் தொடர்ந்து போய் அருளியதாக நம்பப்பட்டது. உண்மையில் இன்றைய விஞ்ஞானிகள் அவ்வொளியை, கடல் நடுவில் ஏற்படக்கூடிய 'ஸெயிண்ட் எல்மோ' என்றறியப்படும் ஒரு வகை மின்சாரம் என்று கண்டறிந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்புயலில் செங் ஹவின் 62 கப்பல்கள் அழிந்தன. இறந்தவர்களும் நிறையபேர். பிழைத்தவர்களுக்கோ எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை. திசையைக் கணிக்க சுற்றிச்சுற்றி வந்து மிகவும் சிரமப்பட்டனர். நட்சத்திரங்களைக்கொண்டு கணக்கிட்டு தீவுதீவாகச் சென்று காட்டுவாசிகளைக் கண்டு அவர்களிடம் மரக்கலன்களுக்கு வேண்டிய மரத்தை, தங்களிடமிருந்த பொன்னும் பொருளும் கொடுத்துப் பெற்றுக்கொண்டதாக குறிப்புகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1406ல் வட அமெரிக்காவை நோக்கிப் போயிருக்கிறார்கள். அலாஸ்காவை நோக்கிப் போவதற்குப்பதிலாக காலி·போர்னியா அருகில் உள்ள பல தீவுகளுக்குச் சென்று ஆங்காங்கே அனுபவங்கள், கலைப்பொருட்கள் சேகரித்துக் கொண்டு நோய்களையும் குழந்தைகளையும் விட்டுச்சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏஜ்டெக் நகரை அடைந்தனர் ஆறு மாதத்தில். கலைப்போக்கிஷங்கள், தங்கம், அரிய வகை வாள்கள், சோளம், மொச்சை போன்றவற்றை நாட்டிற்குக் கொண்டுபோகவேண்டிச் சேகரித்துக்கொண்டனர். சீனர்களின் ஆளுமை முதலில் அந்நாட்டு அரசனுக்கு அச்சுறுத்தலாய்த் தோன்றியது. மெக்ஸிகோ மற்றம் ஏஜ்டெகின் மக்கள் சீனர்களிடம், விஞ்ஞானம், கப்பல் கட்டுதல் போன்றவற்றைக் கற்றனர். அங்கிருந்து ஹவாய்த் தீவுகளை அடைந்தனர் செங் ஹவின் குழுவினர். ஒரு வருடத்திற்குமேலானதால், இதற்குள் சீனநாட்டிலிருந்தோர், செங் ஹ மற்றும் குழுவினர் இறந்துவிட்டதாய் நினைக்க ஆரம்பித்துவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில அழகிய பெண்களையும் கப்பலில் ஏற்றிக் கொண்டு 1408ல் நான்கிங்கை அடையும் போது மக்களுக்கு நம்பமுடியாத பெரும் ஆச்சரியம். செங் ஹ சொன்ன கதைகளினாலும் ஊக்கத்தினாலும் ஈர்க்கப்பட்டு மிங்க் அரசன் ஜப்பான், கொரியா வரை ஊர்களைக் கவர்ந்து நாட்டின் எல்லையை விரிவு படுத்த ஆசைகொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதனைத் தொடர்ந்து 1409ல் சீனத் துறைமுகங்களில் கப்பல்கட்டும் பணி முடுக்கிவிடப்பட்டது. ஏராளமான வல்லுனர்கள் அமர்த்தப்பட்டு, பலருக்குப் பயிற்சியளித்து தொழில் வல்லுனர்கள் உருவாக்கப்பட்டனர். படையெடுப்புகள் ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை வெறுத்து எதிர்த்தவர்களும் இருந்தார்கள். இவர்கள் இந்நடவடிக்கைகளை வெறுத்து எதிர்த்தனர். சிறியது முதல் பிரம்மாண்டமானது வரை ஏராளமான கப்பல்கள் கட்டப்பட்டன. அடுத்த பதினைந்து வருடங்கள் சீனாவின் கண்டுப்பிடிப்புக்களைப் பொருத்தவரை பொற்காலம். அப்போதுதான் செங் ஹ மும்பைக்கும் கோழிக்கோடுக்கும் சென்றார். மும்பை-கந்தான் வணிகப்பாதை உருவானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை வியட்நாமைத் தொட்டுக்கொண்டு பயணித்த கப்பற்படை தென்சீனக்கடலைத் தாண்டி ஜாவா, சுமத்ரா மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்குச் சென்று மலாகாவை அடைந்தது. திரும்பும் போதும் கிட்டத்தட்ட அதே வழியில் இந்தியநாட்டு மேற்குக்கரையையட்டிப் பயணித்தது. ஆசிய நாடுகள் மற்றும் கோழிக்கோட்டிலிருந்து சீனாவிற்குச் செல்ல விரும்பிய சில அறிஞர்களோடு தாய்நாட்டை அடைந்தது. ஆங்காகே வணிகர்கள் சீன அரகுடும்பத்தினர் விரும்பிய தந்தம்,மிளகு, ஏலம், மூலிகைகள், அரிய மரங்கள், முத்துக்கள் போன்றவற்றை கொடுத்து, அவர்களிடமிருந்து அரக்குச் சாமான்கள், பட்டு, தங்கம், வெள்ளி, தாமிரம், பருத்தி, போர்ஸலைன் பொருட்கள் போன்றவை வாங்கி பண்டமாற்று செய்து கொண்டனர். அந்தந்த நாடுகளிலிருந்து அபூர்வப் பொருட்கள் பலவற்றைக்கொண்டு வந்திருந்தாலும் ஸோமாலியாவிலிருந்து செங் ஹ வியந்து, கொண்டு வந்த ஒரு ஒட்டகச்சிவிங்கி குறிப்பிடத்தக்கது. இரண்டாவது மூன்றாவது பயணங்களும் கிட்டத்தட்ட இதே பயணப்பாதையைக் கொண்டே அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது பயணத்தின்போது 'அம்சிக்டா' தீவினைக் கடக்கும்போது அங்கு பெருகியிருந்த ஜப்பானியர்களைக் காணத்தவறிவிட்டனர். ஜப்பானின் வடக்கில் இருந்த அல்யூசியன் தீவைக் கடந்து போகும்போது கப்பலில் இருந்த சில 'ஹைடா' இனத்தவரைச் சந்திக்கிறார்கள் கடல் நடுவே. இரு குழுவும் மற்றவர் மொழிபுரியாமல் திணறியிருக்கின்றனர். தொடர்ந்து பயணித்தபோது சாதுவான, பயந்த, கொடுமையான, மிகவும் பயங்கரமான பலவகை ஆதிவாசிகளைச் சந்தித்தனர். செங் ஹவின் குழுவினரின் எண்ணிக்கையை விடக் குறைவானர்களே ஆதிவாசிகள். ஆகவே, செங் ஹவை அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. பெரியபெரியமீன்கள் பிடிக்கப்பட்டு பதப்படுத்தி பயணத்திற்கென்று வைக்கப்பட்டது. அரிய தாவரமிருக வகைகளில் சிலவற்றையும் சேகரித்துக்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெக்ஸிகோவை அடையும்போது, அந்நாட்டுப் படைகள் தயாராய் நின்று தாக்கியது. ஆனால், சீனர்கள் எண்ணிக்கையிலும் பலத்திலும் கையோங்கியிருந்தனர். இறுதியில் ஒப்பந்தத்திற்கு வந்து போது, நூற்றுக்கணக்கான கப்பல்களில் பொருட்கள் சீனர்களுக்குக் கொடுக்கப்பட்டன. அதில் கோகோவும் ஒன்று. சீனர்களின் குதிரைகளையும் வெடிமருந்துகளையும் மகிழ்வோட பெற்றுக்கொண்டனர். செல்லுமிடங்களிலெல்லாம் வர்த்தக மையங்கள் அமைப்பதிலும், மக்களிடம் உரையாடுவதிலும் செங் ஹ கெட்டிக்காரராய் இருந்தார். ஆப்பிரிக்கா, மத்தியகிழக்கு நாடுகள், எகிப்து, பெர்ஷியா போன்ற நாடுகளில் நட்பை வளர்த்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406838&amp;amp;sid=ilq27jtLY2" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1413 ஆம் ஆண்டு மழைக்காலத்தில் நான்காம் பயணம் துவங்கியது. 30,000 ஆட்களோடு கிளம்பிய செங் ஹ, பெர்ஷியா, செங்கடல், அரேபியா, போன்ற வட்டாரங்களில் பயணித்து 19 நாட்டுத் தூதுவர்களோடும், அரசருக்கு ஏராளமான பரிசுப் பொருட்களோடும் நாடுதிரும்பியபோது பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு வருடங்கள் சீனநாட்டு நகரங்களுக்குச் சென்று ஆய்ந்தறிந்தபின் இத்தூதுவர்கள் செங் ஹவின் உதவியாலேயே மீண்டும் 1417 ஆம் ஆண்டு அவரவர் நாடுகளுக்குக் கூட்டிக்கொண்டு செல்லப்பட்டனர். இம்முறை ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றியிருந்த கரையோர இடங்களான மொடடிஷ¤, மடிண்டி, மொம்பஸா, ஜான்ஸிபார் போன்றவற்றை தொட்டார். ஆறாம் கடற்பயணமும் இதே வழியில் போனாதாகக் குறிப்புகள் உண்டு. 1424 ஆம் ஆண்டு செங் ஹ நாடு திரும்பிய கொஞ்ச நாட்களிலேயே மன்னர் யோங்க் லே உயிர் நீத்தார். 1430 ஆம் ஆண்டு ஏழாவது முறையாகப் பயணம் மேற்கொண்ட அறுபது வயது செங் ஹ, பெர்ஷியா, ஆப்பிரிகா போன்ற நாடுகளுக்குச் சென்று திரும்பும் வழியில் 1433 ஆம் ஆண்டு இந்தியாவில் மரணமடைந்தார். செங் ஹ 1435ஆம் வருடம் இறந்ததாகவும் நான்ஜிங்க் மாநிலத்தின் ந்யூஷோவ் என்ற மலையில் புதைக்கப்பட்டதாகவும் வேறுசில வரலாற்றுச்சான்றுகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செங் ஹவின் மரணத்திற்குப்பிறகு, எல்லாப் பயணங்களின்போதும் அவருடன் கூடவே சென்று அனுபவங்களைச் சேகரித்த அவரின் மகன் செங் ஹ லீ கடற்படையின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டதற்கான பதிவுகள் இருக்கின்றன. பிறகு வந்த அரசர்கள் செங் ஹவின் கடற்பயணங்கள் மிகவும் செலவு பிடித்ததாய் நினைத்து, எல்லைத் தகராறுகளில் கவனமும் செலவும் செய்ய ஆரம்பித்தனர். செங் ஹவின் உழைப்பும், சில கப்பல்களும் அழிக்கப்பட்டன. அடுத்த தலைமுறையினர் அன்று சீனாவிற்கு செங் ஹ பெற்றுத்தந்த பலத்தை அறியத் தவறிவிட்டார்கள். ஆகவே, பின்னாளில் போர்சுக்கீஸியர்கள் வணிகப்பயணங்கள் மேற்கொண்ட போதும், ஐரோப்பா சீனாவைக் கண்டடைந்தபோதும் செங் ஹவின் சாதனைகள் முற்றிலும் மறக்கப்பட்டு விட்டிருந்தன. தடையில்லாமல் அப்பணி தொடர்ந்திருந்தால், சீனா ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் கண்டடைந்த பெருமையைப் பெற்றிருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செங் ஹ பிறப்பால் ஒரு இஸ்லாமியர். அதனால் தான், அவரது கல்லறை இஸ்லாமிய விதிகளின் படி 1985 ஆம் ஆண்டு புதுப்பிக்கப் பட்டது. கல்லறையின் மீது 'அல்லா ஹ¤ அக்பர்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கின்றது. கல்லறையை அடைய புதுப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் நான்காகப் பிரிக்கப்பட்ட 28 படிகள் இருப்பது, அவரின் மேற்கு நோக்கிய ஏழு வெவ்வேறு பயணங்களைக் குறிக்கும். கல்லறையின் முன் மிங்க் முடியாட்சியை நினைவு படுத்தும் ஒரு கட்டமைப்போடு நினைவுக்கூடம் ஒன்று அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு செங் ஹவின் ஓவியங்களும் மற்றும் அவர் பயன்படுத்திய கடல் பயணப்பாதையின் வரைபடங்களும் காணக்கிடைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406837&amp;amp;sid=bjy81owyW1" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் 1999 ஆம் ஆண்டு கென்யாவிற்கருகே 'பேட்' என்றழைக்கப்பட்ட ஒரு குட்டி ஆப்பிரிக்கத் தீவில் 'ந்யூ யார்க் டைம்ஸ்' இதழின் இதழியலாளர், டீ. க்ரிஸ்டோ·ப் ஒரு விநோதமான அனுபவத்தைப்பெற்றார். ஒரு சிறு கிராமத்தில் அடர்ந்த மரங்களிடையே இருந்த கற்குடிசையில் வசித்த கிழவர்கள் சிலரைச் சந்தித்தார். பலநூற்றாண்டுகளுக்கு முன்னர், புயலில் சிக்கி ஒதுங்கிய சில கப்பல்கள் அங்கு வந்ததாகவும், தாங்கள் அந்தச் சீனக் கப்பற்பயணிகளின் சந்ததியினர் என்றும் கூறினர். ஒட்டகச்சிவிங்கிகளைக் கொடுத்துவிட்டு சீனர்களிடம் வாங்கிக் கொண்ட போர்ஸலைன் பொருட்களை அங்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பத்திரமாக இருப்பதைக்கண்டார். அவர்களின் முகங்களில் இருந்த மங்கோலியச் சாயல்களும் க்ரிஸ்டோ·ப்பை மிகவும் ஈர்த்ததுடன், செங் ஹவின் கப்பல்களின் வருகையை நிரூபித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406836&amp;amp;sid=ozG70luCE7" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செங் ஹ கட்டமைத்த மரக்கலன்கள் ஏராளம். அதில் உலகின் ஆகப்பெரிய கலன்களும் அடங்கும். அவற்றில் மூன்று இன்றும் நான்ஜிங்கில் நமக்குக் காணக்கிடைக்கும். மேற்கில் அறியப்படாத செங் ஹ கிழக்கில் இன்னும் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்.&lt;br /&gt;லண்டனின் 'காவின் மென்ஸீஸ்' என்னும் நீர்மூழ்கிக் கப்பல் வல்லுவர் மற்றும் வரலாற்றறிஞர் ஒரு பழமையான ஒரு வரைபடத்தினை முன்வைத்து, செங் ஹ உலகின் பெரும்பகுதிகளை 15 ஆம் நூற்றாண்டிலேயே கண்டடைந்தார் என்று நிரூபிக்கிறார். பெயிஜிங் பல்கலையின் சீனப்பழம் வரலாற்று ஆய்வுத்துறையின் துணைத் தலைவர் லீ ஸியாவ்கோங்க் 1459 ஆண்டு பதியப்பட்ட செங் ஹவின் பயணக்குறிப்புகளின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் வருடங்கள் நம்பத்தகுந்தவை என்று கூறியுள்ளார். சீன பழம்கலன் ஆய்வுத்துறையின் தலைவர் சென் யான்ஹாங் என்பவரும் செங் ஹவின் கப்பற்படைகள் அமெரிக்கக்கண்டத்தை அடைந்திருக்கக்கூடிய ஆற்றல் பெற்றவை என்றே கூறுகிறார். இந்த வரைபடத்தில் உள்ள பாதைதான் செங் ஹவால் பயன்படுத்தப்பட்டது என்பதையும் அது 1459 ஆம் தான் வரையப்பட்டது என்றும் நிரூபிக்கப்பட்டால், மென்ஸிஸ் கூறுவது சரியென்று சொல்லமுடியும் என்கிறார்கள் மற்ற அறிஞர்கள். வரலாறு ஆவணங்களின் படி, அரச அதிகாரி ஒருவர் செங் ஹவின் பயணங்களை வெறுத்து, அவரின் பயணக்குறிப்புகளையும் எரித்து விட்டார். அழிக்கப்பட்ட அவற்றில் இருந்த குறிப்புகள் பற்றி ஒன்றுமே தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406835&amp;amp;sid=irQ94bgpu1" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியநாட்டின் சீன அமைப்பின் ஒருங்கிணைப்பில் 2002 முதல் ஆண்டுதோறும் செங் ஹவின் பயணங்கள் குறித்த மாநாடு சீனாவின் ஸியான்மென் நகரில் நடைபெறுகிறது. இதில் அவரது பயணங்கள் சீன-மலேசிய உறவில் ஏற்படுத்திய பாதிப்புகள், அவருக்கும் மலாகாவின் 'சம் போ ஷன்' என்றறியப்படும் கப்பலுக்கும் உள்ள தொடர்பு, சீனாவில் செங் ஹவிற்காக அமைந்த கோவில், மற்றும் பலவகை ஆய்வுகள் மட்டுமில்லாது (2005) இவ்வருடம் செங் ஹவின் பயணம் தொடங்கி 600 ஆண்டுகள் நிறைவுற்றதைக் கொண்டாடப் பலவகை நடவடிக்கைகளைத் திட்டமிடுவதும் அடங்கும். மலேசியாவிலும் சீனாவின் ·பூஜென் மாநிலத்திலும் அவரைப்பற்றிய ஆய்வறிக்கைகள் பிரசுரம் செய்வதும் முக்கியமானது.&lt;br /&gt;தாய்சாங்க் என்ற இடத்தில் தான் செங் ஹ தனது முதல் பயணத்தைத் துவங்கினார். இங்குதான் சீன அரசாங்கம் இவ்வருடம் பிரம்மாண்டமான விழாவெடுக்கப்போகிறது. இது சுற்றுப்பயணிகளையும் முதலீட்டாளர்களையும் ஈர்க்கும்படியும் அமையும். தைவான் நாட்டு அமைப்புகளின் துணையோடு ஒரு பெரிய 'செங் ஹ நகரம்' ஒன்றும் உருவாகிவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கத்திய மற்றும் நவீன கடற்துறை, கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய கடற்துறை மற்றும் செங் ஹவின் அரும்பொருட்கள் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்ட 'செங் ஹ' அருங்காட்சியகம் சிங்கப்பூரின் மொஹமத் ஸ¤ல்தான் ரோட்டில் இருக்கிறது. இக்காட்சியகத்தைக் காண அனுமதிக்கு முன்பதிவு தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;(முற்றும்)&lt;br /&gt;&lt;br /&gt;------ஜெயந்தி சங்கர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9687302-114653804620784930?l=jeyanthisankar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyanthisankar.blogspot.com/feeds/114653804620784930/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9687302&amp;postID=114653804620784930&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/114653804620784930'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/114653804620784930'/><link rel='alternate' type='text/html' href='http://jeyanthisankar.blogspot.com/2006/05/blog-post.html' title='செங் ஹ'/><author><name>ஜெயந்தி சங்கர்         (Jayanthi Sankar)</name><uri>http://www.blogger.com/profile/04533483437106248358</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9687302.post-114532687486622204</id><published>2006-04-18T10:15:00.000+08:00</published><updated>2006-04-20T18:40:05.476+08:00</updated><title type='text'>திரவியம் (சிறுகதை)</title><content type='html'>&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=456413&amp;amp;sid=uLW79CDQX0" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சட்டைக்குள் வலக்கையைவிட்டு, கழுத்தில் தொங்கிய சிலுவையை வெள்ளத்தில் அடித்துக்கொண்டிருந்தவன் கிடைத்ததைப் பற்றிக் கொள்ளும் அழுத்ததோடு பற்றியிருந்தார். ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டுப் புதிதாகப் பார்ப்பதைப்போல என்னை வெறித்துப் பார்த்த படியேயிருந்தார். கத்தரிப்பூ நிறத்தில் பூப்போட்ட பேண்ட்டும், அடிக்கவரும் சிவப்புநிறத்தில் பெண்களணியும் சட்டையும் உடுத்தியிருந்தார். முகம் முழுவதும் தோலின் சுருக்கங்களுடன் கவலையின் ரேகைகள். வெள்ளிக்கிழமை. அன்றுதான் தாமஸ¤க்கு வாரத்தின் வேலையில்லாத ஒரே நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அலுத்தவுடன் நிராகரிக்கும் விலையுயர்ந்த பணக்காரபெண்களின் உடைகளைத் தான் அவற்றின் அளவைப் பொருட்படுத்தாது எப்போதும் அணிவார் தாமஸ். அவர்கள் அரைகுறையாக உபயோகித்து எறியும் கேசச்சாயப் புட்டியிலிருந்து எடுத்துத்தன் தலையில் தடவிக்கொள்வார். பலவகையான பழுப்பு, கருப்பு என்று அவ்வப்போது அவரது முடி நிறங்களில் மாற்றம் கண்டபடியிருக்கும். அதில் அவருக்குக் கடுகளவுக் கூச்சமும் கிடையாது. முதன்முதலில் பார்ப்பவர்க்கு அடக்கமுடியாமல் சிரிப்புவரலாம். 'கிறுக்கோ?' என்று ஜாடைமாடையாகச் சிலர் பேசிச்சிரிப்பது அவரைத் துளியும் தொந்தரவு செய்யாது. பழகிய பிறகுதான் தெரியும் அவர் தன் சொற்ப வருமானத்தில் தனக்கென்று உடைகளே வாங்குவதில்லையென்பது. " என்ன பெரிய வித்தியாசம் லா? 'ஜெண்ட்ஸ்' பாண்டுக்கு முன்னாடி ஜிப்பிருக்கு, இதுக்கு சைட்ல ஜிப்பிருக்கு. கொஞ்சம் கலர்கலரா பூவெல்லாம் போட்டிருக்கு. எனக்கு இது பிடிச்சிருக்கு லா. மத்தவங்க சிரிக்கிறதால எனக்கொண்ணும் கவலையேயில்ல. அவங்களா லா எனக்குத் துணி வாங்கித் தரப் போறாங்க", என்பார் தீவிரத் தொனியுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;பலமுறை தாமஸின் முதலாளி அவரை மருத்துவரிடம் போகச்சொல்லிச் சலித்திருந்தார். இரண்டுமாதங்களுக்கு முன்புகூட தாங்க முடியாத வறட்டு இருமல் வந்து மிகவும் அவதிப்பட்டுவிட்டார் தாமஸ். கூட்டிக் கொண்டு போய் எங்கள் அறையில் வைத்திருந்தோம் நான்கு நாட்களுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதிரேசன் வெற்றிலைக்கஷாயம் வைத்துக்கொடுத்தான். இருமல் சற்று குறைந்ததும் அரட்டையடிக்கத் தொடங்கிவிட்டார். கையில் தமிழ் முரசை1 வைத்துக்கொண்டு, "சம்முவம், இப்ப கொழந்த பெத்துக்கறவங்களுக்குதான் சிங்கப்பூருல நிறைய சலுகை. பேசாம இந்தூருக்காரிய கட்டிகிட்டு, வரிசையா கொழந்த பெத்துக்கோ லா", என்று என்னைச் சீண்டினார். " ஐயோ, அண்ணே, ஆள விடுங்க. நா எப்படா ஊருக்கு ஓடலாம்னு இருக்கேன். இதோ, கதிரேசன் இருக்கான். அவனுக்குத்தான் இந்த ஊர விடவே மனசில்ல", என்றதுமே, கதிரேசன்," நா ரெடி. ஆனா, இந்தூரு பொண்ணுக்கு என்னைப்பிடிக்கணுமே. காதுல வளையமில்ல,. பின்னாடிக் குடுமியில்லன்னா? பேசாம நீங்க ஒரு பொண்ணப் பாத்து கட்டிக்கங்கண்ணே", என்றான். உடனே சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு, "வேணாம்பா பேசாம சம்பாரிச்சுகிட்டு, ஊரப்பாக்கப் போய்ச்சேருங்க. மொதல்ல பெத்துக்காதன்னுவான், அப்பறம் திடீர்னு பெத்துக்கோன்னுவான். இதென்ன, வாழ்க்கையா இல்ல ·பாக்ட்ரியா,..ம்?", என்று சொன்னார். அந்தக் காலத்தில் பெற்ற ஒரே பிள்ளையைப் பிரிந்துபடும் துயர் அவர் முகத்தில் அன்று கவிந்திருந்தது. இருமல் குணமாகித் தன் இருப்பிடத்திற்கே திரும்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வாரமே சொந்த வேலையும் ஒதுக்கி விட்டு ஒரு நாள் அவரது இருப்பிடத்திற்குப்போனேன். முதல் நாளே சொல்லியிருந்தும், கதவு பூட்டியிருந்தது. வெள்ளிக்கிழமை எங்கு போயிருப்பார் என்ற யோசனையுடன் காத்திருந்துவிட்டு வீடு திரும்பிவிட்டேன். மறுபடியும் மாலையில் போனபோதும் வீடு பூட்டியே இருந்தது. கவலையுடன் இரவில் போனபோது, உள்ளே மின்விளக்கு எரிவது ஜன்னல் வழியே தெரிந்தது. கதவைத்தட்டியது திறந்தார். "எங்கண்ணே போயிட்டீங்க?", என்றதுமே, "இங்க தானே இருந்தேன்", என்றார் என் முகத்தைப் பார்க்காமலே. "ரெண்டுவாட்டி வந்தனே. டாக்டர்கிட்ட போகணும், ரெடியா இருங்கன்னேல்ல நேத்திக்கே.""செக்கப்பெல்லாம் வேணாம், சம்முவம். ஏதாவது கோளாறுன்னு சொல்லிட்டா,..""அப்ப, பயந்துகிட்டுதான் எங்கியோ போயிட்டீங்க, இல்ல?"" ஆமா லா, செந்தோசாவுக்குப் போனேன்", என்று ஒத்துக்கொண்டார். எனக்கு ஒன்றுமே சொல்லத் தோன்றவில்லை. மருத்துவப்பரிசோதனைக்கு பயந்து பக்கத்துத்தீவுக்கு ஓடிப்போகும் முதியவரை அவர் வழியிலேயே விட்டுவிடுவதுதான் சரியென்று அன்று தோன்றியது.&lt;br /&gt;குப்பைகளைச் சேகரித்து மறுபயனீட்டுக்கு அனுப்பும் சிறு நிறுவனத்தில் தாமஸ¤க்கு ஊழியம். சின்ன பிக்கப் வண்டியில் தெருத்தெருவாகச் சென்று வீடுகளில் வேண்டாமென்று களையும் பொருட்களைச் சேகரித்துக் கொண்டு வருவதுதான் வேலை. வாரத்தில் ஆறுநாட்களும். முதலாளி கொடுத்த அறுநூறு வெள்ளி2 சம்பளம் அவருக்குக் கைக்கும் வாய்க்குமாகவே இருந்தது. உடல்நிலை சரியில்லாமல் வேலைக்குப் போக வில்லையென்றால் கருணையே இல்லாமல் ஒரு நாளைக்கு நாற்பது வெள்ளி வெட்டப்படும். இதற்கு பயந்து புகைக்கும் சிகரெட்டினூடே, கல்கல்லென்று வெண்கலஇருமல் இருமிக்கொண்டே தாமஸ் வேலைக்குச் சென்ற நாட்கள் மாதத்தில் பாதியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சற்று உரிமையோடு, கொஞ்சம் கோபமும் கலந்து, "என்னாண்ணே, சின்னைப்புள்ள மாதிரி இப்பிடி அடம்பிடிக்கறீங்க?", என்றதுமே வலக்கையை சிலுவையிலிருந்து அகற்றாமல்,என்மீது பதித்திருந்த பார்வையை மட்டும் ஜன்னல் வழியாக வெகுதூரத்திற்கு அனுப்பினார். கூப்பிடுவது தான் அண்ணன் முறை வைத்து. மற்றபடி, கிராமத்தில் இருக்கும் என் பெரியப்பாவின் வயதுடையவர். இருக்கும் கிட்டத்தட்ட அறுபதுக்குமேல். "சரி, பசியாறிட்டுப் போவோம், உங்க பர்ஸ எடுத்து கிட்டீங்களா? ம்,. கிளம்புங்க சீக்கிரம்", மனமேயில்லாமல் தன் உடலை வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு வெளியேற்றினார். சாவியை வாங்கிக் கதவைப் பூட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படியிலிறங்கியபடியே அவரது கவனத்தைத் திசைதிருப்ப மறுபடியும் நானே பேச்சுக்கொடுத்தேன். "அண்ணே, இந்தவாட்டி கிருஸ்துமஸ¤க்கு உங்களுக்கு 'ஆ·ப்' உண்டு இல்ல? 'புலாவ் உபின்'3 போவோமாண்ணே. அலி கூட வரேன்னிருக்கான்", என்றதும் முகத்தில் கொக்கியாக ஒரு கேள்வியைத் தேக்கிக் கொண்டு பார்த்தார். "அதாண்ணே, அந்த பங்களாதேஷி, எங்கூட்டாளி", என்றபடி திரும்பிப்பார்த்தேன். சரியென்றோ ,வேண்டாமென்றோ அனுமானிக்கமுடியாத லேசான சலிப்பு கலந்த ஓர் இரண்டுங்கெட்டான் உணர்ச்சியையே அவரின் முகம் பிரதிபலித்தது. முன்னால் உலகைமறந்து ஒட்டியபடிவந்துகொண்டிருந்த சீனஜோடியின் மீது மோதிவிடாது கொஞ்சம் ஒதுங்கி நடந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலைநேரப்பரபரப்பு சாலையோரக் கடை ஊழியர்களிடமும் தொற்றிக்கொண்டிருந்தது. "சம்முவம், எனக்கு 'தேத்தண்ணி' மட்டும் போதும். ரொட்டிகிட்டி வாங்கிடாத", காலையிலிருந்து முதல்முறையாக வாயைத்திறந்தார். தாமஸின் கவலையும் பயமும் ஒரு புறம் வேடிக்கையாக இருந்தாலும் மறுபுறம் பரிதாபமே மிகுந்தது. அவர் எப்போதும் குடிக்கும் பால்சேர்க்காத தேநீரும் எனக்கு சர்க்கரை சேர்க்காத பாலும் சொல்லி விட்டு மேசையை அடைந்தேன். மறுபடியும் யோசனையுடனான தூரப் பார்வையில் லயித்திருந்தார். தொந்தரவு செய்யவேண்டாமென்ற தீர்மானத்துடன் நாற்காலியில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார்க்கவாரம்பித்தேன். தேநீரும் பாலும் கொண்டு வந்து வைத்த சீனப்பெண், தாமஸின் வழக்கத்திற்கு விரோதமான மௌனத்தைக் கண்களாலேயே மௌனமாய்ச் சில நொடிகள் ஆராய்ந்துவிட்டு அகன்றாள். தாமஸ் தன்னிச்சையாக தேநீரைப்பருகத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாலையின் எதிர்புறம் பிக்கப் வேனின் பின்புறம் மற்றவர்களுடன் ஏறிக்கொண்டிருந்த அலி என்னைப்பார்த்துக் கையசைத்தான். தேநீரைக்குடித்துமுடித்த தாமஸ் எழுதுகொண்டே, "அவஞ்சரியில்ல ஒடம்பம்புட்டும் பொய்யி,” என்றதும் சிரித்துக்கொண்டே," வாங்கண்ணே போவோம்,. அந்த 'ஆசோ'4 கிழவி சொன்னத வச்சிகிட்டு நீங்களும் அதையே சொல்லிகிட்டிருக்கீங்க. அவம்பொய் சொல்லல்லண்ணே, நடந்ததத்தான் சொல்லியிருக்கான். சரி, இப்ப அதெல்லாம் எதுக்கு, வாங்க இப்பவே லேட்டாயிடிச்சி",என்றுகூறி நடையை விரைவாக்கினேன். கூடவே நடந்த தாமஸின் முகத்தில் தற்காலிகமாக மறைந்திருந்த கவலை மீண்டும் பரவியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாமஸ¤க்குப் பூனைகளைக்கண்டால் அலாதியான பிரியம். தெருவில் அலையும் பூனைகள், கண்களை உருத்தும் அவருடைய உடைகளை வைத்துத் தெரிந்துகொள்ளுமோ, இல்லை மோப்பமோ, பசித்தால் அம்மாவிடம் உணவுகேட்கும் குழந்தைகளைப்போல தாமாஸைப் பின்தொடர்ந்து வரும். அவரும் பாலோ மீன்சோறோ வாங்கிக் கொடுத்து விட்டுத் தானும் உண்பார். அப்படிச்செய்வதால் பூனைகளைத் தொந்தரவு என்று நினைத்து வெறுத்த பணக்காரர்கள் பார்வையில் அவை பல்கிப்பெருகி சுற்றுப்புறத்துக்குத் தொந்தரவாகின. பலமுறை சொல்லியும் தாமஸ் அலட்சியப்படுத்தவே, போலிஸில் சொல்லிவிட்டனர். பூனைப்பிரியையான கிழவிதான் தாமஸ¤க்காகப் போலிஸிடம் பேசி அவரை வெளிக்கொணர்ந்தாள். அப்போதிலிருந்தே கிழவியின் பேச்சு தாமஸ¤க்கு வேதவாக்கானது. பூனைகளுக்கு உணவு கொடுப்பதை நிறுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திலோக் ப்ளாங்கா வட்டாரத்தின் பணக்காரர்கள் வசிக்கும் ஒரு தரை வீட்டில் வசித்த சீமாட்டியின் தாய் தான் இந்த 'ஆசோ' கிழவி. மற்ற இளைய தலைமுறையை ஒப்பு நோக்க அவளுக்குக் கொஞ்சம் இரக்ககுணமுண்டு. 'தாகா' 5வை அடுத்து இருந்த ஒரு சிறிய கிராமத்தில் அலியின் குடும்பம் இருந்தது. சென்ற வருடம் வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருந்த கிராமத்திலிருந்து வேறொருவனுக்குத் தகவல் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடனேயே அலி தன் குடும்பத்தினரை காப்பாற்றிவிடும் வேகத்தில் ஊருக்குக் கிளம்ப நினைத்தான். சிறுகச்சிறுக டிக்கெட்டுக்குப் பணம் சேகரித்தான். ஒன்றும் இரண்டுமாகக் கொடுத்தவர்களிடையே அலியின் கதையைக் கேட்டுவிட்டு மனமிளகி அப்போது முள்ளங்கிப்பத்தையாக ஐம்பது வெள்ளியைக் கொடுத்தவள் அந்தக்கிழவி. நண்பர்களின் உதவியும் கிடைத்தது. மறுநாள் காலையில் கிளம்பவிருந்தான். ஆடுமாடுகளையும் சேர்த்து குடும்பத்தோடு எல்லோரையும் 'பிரமபுத்ரா' விழுங்கிவிட்டது என்ற செய்தி பின்மாலைநேரம் எட்டியபோது உடைந்துபோனான். கதறியவனைத் தேற்றி ஊருக்குக் கிளம்பச்சொல்லியும் அவன் கேட்கவேயில்லை. இனிமேல் ஊருக்குப்போய் என்னதான் செய்வது என்று ஒரே புலம்பல். அவனது ஊர்காரர்களும் வந்து ஆறுதல் சொல்லி அவனைக் குடிக்கவைத்தனர். குடித்துக் கொண்டிருந்தவனை கிழவி பார்த்துவிட்டு, பொய் சொல்லிப் பணம் சேர்த்திருக்கிறான் என்று வட்டாரத்தில் வசித்த எல்லோரிடமும் பரப்பிவந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவமனையும் வந்துவிட்டது. தாமஸை எக்ஸ்ரே, ரத்தம் மற்றும் சளி போன்ற பரிசோதனைகளுக்கு உள்ளே அனுப்பிவிட்டு வெளியே காத்திருக்க முடிவு செய்தேன். "அண்ணே, நா அரமணி நேரமிருப்பேன். அதுக்கப்புறம் வேலக்கிக் கெளம்பிடுவேன்", என்றவனைப் பார்த்து சரியென்று தலையசைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தார், தேர்வுக் கூடத்திற்குள் நுழையும் பள்ளிச்சிறுவனின் பயத்தை முகத்தில் சுமந்துகொண்டு.&lt;br /&gt;தாமஸ¤க்கு வேலை கிடைத்தே இரண்டு வருடம் தான் ஆகியிருந்தது. அதற்குமுன்னால், சரியான வேலையில்லாமல் அலைந்து திரிந்து உணவகங்களில் தட்டுகழுவும்வேலை போன்று கிடைத்த சின்னச்சின்ன வேலையைச் செய்துவந்தார். முதல்முறையாக நான் அவரைப்பார்த்தது புகித் மேரா வட்டாரத்தில். சிநேகிதன் ஒருவனைப்பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தேன். ஐந்தாவது மாடியின் சுவரில் ஓர் ஆள் நிற்பது தெரிந்தது. தடுமாற்றமும் இருந்தது. மளமளவென்று மாடிப்படிகளில் ஏறிப்போய் பார்த்தால், இந்தியர் ! குடித்திருந்தார். மனைவியும் பிரிந்து, வேலைமில்லாததால், ஐந்தாவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தாராம். வயதான அந்த உடம்பில் ஊனத்தை நினைத்துப்பார்க்கவே நடுங்கியது. மெதுவாகப் பேசிக் கீழே அழைத்து வந்தேன். போதையில் தன்கதையைப் புலம்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் லீவெடுத்ததால், கையில் இருந்த வேலையும் போயிற்று. கடைசியாகக் கையிலிருந்த காசில் குடித்துவிட்டு சைனா டௌன் வட்டாரத்தில் குடிபோதையில் சுற்றுப்பயணியிடம் ஏதோ பேசப்போக, அந்த வெள்ளைக்காரர், அவரின் அழுக்குபடிந்த ஆடையை வைத்து பிச்சையெடுக்கிறார் என்று நினைத்து இரண்டு வெள்ளியை இவர் கையில் திணித்திருக்கிறார். இதைப்பார்த்த நீலச்சட்டை ஆசாமிகள் இவரைக் கொண்டுபோய் லாக்கப்பில் இரண்டு நாட்கள் வைத்திருந்து அனுப்பியிருந்தனர். வேலை ஒன்று நிரந்தரமாகக் கிடைத்துவிட்டால் அவரது பிரச்சனை தீரும் என்று தெரிந்தும் என்னால் பரிதாபம் மட்டுமே படமுடிந்தது. அதன்பிறகு வந்த நாட்களில் எங்களிடையே நட்பு வளர்ந்தது.&lt;br /&gt;"சைனா டௌன்லனதும் அரெஸ்ட் பண்ணினாங்க. இதே சிரெங்கூன்லன்னா, சும்மா கண்டிச்சு விட்டிருப்பாங்களோ. கூண்டுல கிளிய வச்சிகிட்டு சிரெங்கூன்ல ஜோசியம்ன்ற பேருல நெஜமாவே நா பிச்சையெடுத்தாலும், 'கலாசாரம்' வளக்கறோம்னு சந்தோசமா ஆதரிச்சிருந்தாலும் ஆதரிச்சிருப்பாங்க இல்ல?", என்று அந்தச் சம்பவத்தைப்பற்றிப் பேசும்போதெல்லாம் விரக்தியுடன் கேட்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சங்கிலியாகப் புகைத்த சிகரெட்டை வேண்டுமானால் விட்டுவிடுவதற்கு முயல்வாராம். மாலையில் குடிப்பதை மட்டும் விடமுடியாதாம். கேட்டால், வரிசையாகக் காரணங்கள். வேலையில் சேர்ந்த புதிதில் தன் சொற்ப சம்பளத்தில் வீட்டுவாடகை கொடுப்பதை அவரால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. அவருடைய முதலாளிதான் அடுக்குமாடிக் கட்டடத்தில் வாடகைக்கு அவர் எடுத்திருந்த ஓரறையில் தங்கிக் கொள்ளும்படி கூறினார். அங்கேதான் 'கோடௌன்' மாதிரி தற்காலிகமாகத் தரையிலிருந்து கூரைவரை பழைய பேப்பரும், பழைய டீவீ, ரேடியோ, பாத்திரம், பண்டம் என்று சகலவிதமான உயிரற்ற பொருள்களையும் குவித்து வைத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வப்போது அகற்றப்பட்டதுமே மேலும் குவியும். குவிந்திருக்கும் குப்பைகூளங்களிலிருந்து கிளம்பிய நெடியும் நாற்றமும் ஆரம்பத்தில் அவரைத் தூங்க விடாது துரத்தின. சிலவேளைகளில் சீமாட்டிகளின் வாசனைத் திரவியங்கள் கிடைத்தும் விடுவதுமுண்டு அவருக்கு. பொருட்களை ஒதுக்கி ஆறடிக்கு மூன்றடி இடம் செய்யவேண்டும். உரிமையுடன் கூளங்களிடையே உலவிய கரப்பான்பூச்சிகளுடன் பழையமெத்தையன்றை விரித்து உறங்கச் சீக்கிரமே பழகினார். அவ்விடத்தில் உறங்க வேண்டுமென்றால், உழைப்பில் வந்த உடலசதி மட்டும் போதாது. நுகரும்புலன் தற்காலிகமாகவேனும் சாகவேண்டும். குடிப்பழக்கம் அவருக்கு ஓரளவிற்கு உதவியதென்று சொல்லிகொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஏம்பா, ரீசைக்கிளிங்க்6 சாமானமெல்லாமே இந்த நாத்தமடிக்குதே, தினப்படி குப்பை அள்றாங்களே பங்க்ளாதேஷி ஆளுங்க,.எப்பிடித்தான் சகிச்சுக்கறாங்களோ", என்று வியப்பார். குழந்தைகளின் காலைக் கடன்களை ஏந்திய டையப்பர்கள், அழுகிய முட்டை, ஊசிப்போன இறைச்சி சமையல், பெண்களின் மாதந்திர சமாசாரங்கள் என்று உலகில் உள்ள அத்தனை துற்நாற்றங்களையும் கலவையாகக் கொண்ட குப்பைகளை அள்ளும் பங்க்ளாதேஷிக்களுக்கு நாளடைவில் பழகியது போலவே தாமஸ¤க்கும் பழகிவிட்டது. வேலையின் தேவை அவரைப் பழகும் நிர்பந்தத்திற்குத் தள்ளியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திறந்தவெளியில் சேகரிக்கும்போது இருந்த நாற்றம் அறைக்குள் நூறுமடங்காகிப் போகும் அதிசயத்தைச் சொல்லிச்சொல்லி வியப்பார் தாமஸ். முதல்முறை அங்கு போனபோது நிற்கமுடியாமல் திரும்ப ஓடிவந்து விட்டேன். ஒருமுறை தாமஸைக் கூப்பிடவந்த 'ஆசோ' கிழவி ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு மருத்துவ முகமூடிகளணிந்தே வந்தாள். கையை ஆட்டி சைகையால் கூப்பிட்டுவிட்டு ஓடியே போய்விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவச்சோதனைகள் அதிக நேரமெடுக்கவே நான் என் வேலைக்குக் கிளம்பினேன். ஒரு வருடமாகத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்திருக்கிருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன் அவருடைய முதலாளி மிகவும் வேண்டிக்கொண்டதால், மாலையில் போய் பேச்சையெடுத்ததுமே," வேணாமே,..ஏதாவது கோளாறுன்னு சொல்லிட்டா? குடிக்கறேன்ல, லிவர் போச்சுன்னுவான், இல்ல சிகரெட் பிடிக்கறேனா, டீபீன்னுவான். மொத்ததுல மொதலாளி என்னைத் தூக்கிட்டு வேற ஆளப்போட்ருவாரு. எனக்கு வேல போயிடுமே சம்முவம், அப்பறம் என்ன செய்ய சொல்லு, எனக்கென்ன ஸீபீஎ·ப் (CPF) 7 இருக்கா? பேருதாஞ்சிங்கப்பூரு,..ஒரு தேத்தணி வாங்கணும்னாலும்,.. நாயாபேயா ஒழைக்கணும் லா. சாவறதுக்கு முன்னகூட என்னோட பாலுக்கு ஒழைச்சுவச்சிட்டில்ல லா நா சாவணும், அதஎடுத்து ஊத்த ஒரு சொந்தமுண்டா, பந்தமுண்டா", என்று கலங்கிய கண்களுடன் வழக்கமான பல்லவியையே பாடினார். "எதுக்கு இப்ப உணர்ச்சிவசப்படறீங்க, இப்ப நாங்கல்லாம் இல்ல. இதுக்குப் போயி இவ்வளவு கவலப்படறீங்களேண்ணே,..ஒருவேல போனா இன்னோண்ணு, ..", முடிப்பதற்குள், "ஒரு பய வேல தரமாட்டான். ஒனக்கெங்க புரியும். இந்த ஊர விட்டா ஒங்க ஊருக்குப் போயிடுவீங்க,.ஆனா நாங்க", குரலில் பொறாமை தெரிக்கும்."நீங்கதா மெச்சிக்கணும்,..ஊர்ல மழையே இல்லண்ணே. காஞ்சி கெடக்குதாம் பூமி. வெள்ளாமையெல்லாம் இல்லாம ஒரே கஷ்டமாம். அப்பா சொல்லி ரொம்ப வருத்தபட்டுகிட்டாரு."" கஞ்சோ கூழோ, பஞ்சமோ வெள்ளமோ, சொந்த ஊர்னு ஒண்ணு இருக்குல்ல,.எனக்கு அப்பிடியா? சொல்லு லா""ம்,எப்பவுமே இக்கரக்கு அக்கர பச்ச தான்னு வைங்க.""என்ன ஒண்ணு, சின்னவயசுல படிக்காம இருந்துட்டேன்,அதத்தவிர நாஞ்செஞ்ச குத்தமென்னன்னுதான் எனக்குந்தெரியல்ல லா", தன் பெரிய கண்களில் சோகம் கவியச் சொல்லும்போது அவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே ! கிடைக்காத பண்டத்துக்கு ஏமாற்றமும் ஏக்கமும் கொள்ளும் சிறுகுழந்தையைப்போலிருக்கும். கேரளாவின் ஏதோ ஒரு குப்கிராமத்தில் இன்றும் தூரத்துச்சொந்தங்கள் இருப்பதாக அவ்வப்போது சொல்லிக் கொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேலை முடிந்து மாலையில் தாமஸைப்பார்த்து சோதனை முடிவுகள் எப்போது வரும் என்று கேட்டேன். ஒரு வாரமாகும் என்றார். முகத்தில் காலையில் கவிந்திருந்தகவலை அதிகரித்திருந்தது போலத்தான் தெரிந்தது. தேர்வு முடிவுக்குக் காத்திருக்கும் பள்ளி மாணவனைப்போலத் தெரிந்தார். "சம்முவம், கிருஸ்துமஸ¤க்குள்ள ரிசல்ட் வந்துடும். எல்லாமே சரியா இருந்தா, நீ சொன்னமாதிரி 'புலாவ் உபின்' போவோம்,..ஓகேவா", என்றார் எனக்காகச் செயற்கையாக வரவழைத்துக்கொண்ட உற்சாகத்துடன். சிறிது நேரம் பொதுவாகப்பேசிவிட்டுக் கிளம்பி வீடு வந்து சேர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பனொருவன் விடுமுறையில் இந்தியாவிற்குப்போய் விட இரண்டு 'ஷி·ப்ட்' செய்ததில் அடுத்த நான்கு நாட்களுக்கு நானும் போய்ப் பார்க்கவேயில்லை. வேலையில் நாட்டமேயில்லாமல் மருத்துவச் சோதனையின் முடிவுபற்றிய கவலையிலேயே அடுத்த சில நாட்களைக் கடத்தியிருக்கிறார். எப்போதும் அவரிடமிருந்த கலகலப்பு முற்றிலும் விடைபெற்றிருந்தது. விடமுடியாமலிருந்த சிகரெட்டைக் கூட வாங்க மறந்திருந்தார். மாலைகளில் 'தண்ணீர்' மட்டும் தொடர்ந்தபடியிருந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்குப்பிறகு கதிரேசன்தான் தகவலைக் கொண்டு வந்தான். தாமஸ் மாரடைப்பினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இரண்டு நாட்கள் மூக்கிலும் வாயிலும் குழாய்கள் மாட்டப்பட்டுக் கிடந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளியன்று மருத்துவச்சோதனை முடிவுகள் வந்தன. புகைத்தலையும் குடித்தலையும் மட்டும் விடும்படி டாக்டர் ஆலோசனை கூறியிருந்தார். மற்றபடி ரத்த அழுத்தம், சர்க்கரை, நுரையீரல் எதிலும் எந்தவிதமான பிரச்சனையுமின்றி சாதாரணமாகவேயிருந்தது. சோதனைமுடிவை அறிந்துகொள்ளாமல் தன் முடிவைத் தழுவிக் கொண்டுவிட்டார். முடிவைப்பற்றிய உளைச்சலில் மன அழுத்தத்திற்குத்தான் தாமஸ் இறுதியில் பலியாகியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-தமிழ் முரசு - சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழ்&lt;br /&gt;-வெள்ளி- டாலர்(சிங்கப்பூரின் பணம்)&lt;br /&gt;- புலாவ் உபின் - சிங்கப்பூரைச் சுற்றியிருக்கும் குட்டித்தீவுகளில் ஒன்று.&lt;br /&gt;- ஆசோ - பொதுவாக வயதான பெண்களைக்குறிக்கும் சொல்&lt;br /&gt;- தாகா - பங்க்ளாதேஷ் நாட்டின் தலைநகரம்&lt;br /&gt;- ரீசைக்கிளிங்க் - மறுபயனீடு&lt;br /&gt;- ஸிபீஎஃப் (CPF) - Central Provident Fund (மத்திய சேம நிதி)&lt;br /&gt;&lt;br /&gt;(முற்றும்)&lt;br /&gt;&lt;br /&gt;---- ஜெயந்தி சங்கர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி :&lt;br /&gt;குவியம் (கனடா நாட்டு) காலாண்டிதழ் - இலையுதிர் 06&lt;br /&gt;திண்ணை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9687302-114532687486622204?l=jeyanthisankar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyanthisankar.blogspot.com/feeds/114532687486622204/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9687302&amp;postID=114532687486622204&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/114532687486622204'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/114532687486622204'/><link rel='alternate' type='text/html' href='http://jeyanthisankar.blogspot.com/2006/04/blog-post.html' title='திரவியம் (சிறுகதை)'/><author><name>ஜெயந்தி சங்கர்         (Jayanthi Sankar)</name><uri>http://www.blogger.com/profile/04533483437106248358</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9687302.post-114265842640040563</id><published>2006-03-18T12:48:00.000+08:00</published><updated>2006-03-20T12:57:09.703+08:00</updated><title type='text'>நாலு விளையாட்டு</title><content type='html'>&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=442945&amp;amp;sid=eLN18cFGO1" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://madhumithaa.blogspot.com/"&gt;மதுமிதா&lt;/a&gt; இழுத்ததால வந்தேன். அவருக்கு நன்றி. ஏன்னா, கொஞ்சம் என்னை சுய அலசல் செய்ய வச்சிருக்கார். எனக்குப் பிடிச்சதுன்னு யோசிச்சா அது பெரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈய பட்டியலா போயிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே இருக்கு. நாலுநாலாதான் போடணும்னு சொன்னதால நாலு நாலா போடறேன். உண்மைல எனக்கு ஒவ்வொரு பிரிவுக்கும் குறைந்தது 10-40 போடறமாதிரி வருது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;நான் கண்டு பிரமிக்கும் வலை நண்பர்கள்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1) மதி (for her leadership )&lt;br /&gt;&lt;br /&gt;2) பாஸ்டன் பாலாஜி (for his energy)&lt;br /&gt;&lt;br /&gt;3) இராம.கி (for his Tamil knowledge)&lt;br /&gt;&lt;br /&gt;4) பத்மா அரவிந்தன் (for her acheivements &amp; proactive thoughts)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://reallogic.org/thenthuli/?p=162"&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பிடித்த உணவுவகைகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;1) 'நான்' வகைகள் + வட இந்திய இணை (side dishes) பதார்த்தங்கள்&lt;/p&gt;&lt;p&gt;2) பிட்ஸா&lt;/p&gt;3) வெந்தயக்குழம்பு&lt;br /&gt;&lt;br /&gt;4) அவரைக்காய் பொரிச்சகூட்டு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பிடித்த (இந்தியாவின்) ஊர்கள்/இடங்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1) சாலகுடி - கேரளா&lt;br /&gt;&lt;br /&gt;2) ஸ்ருங்கேரி - கர்நாடகா&lt;br /&gt;&lt;br /&gt;3) மீனாட்சி அம்மன் கோவில்&lt;br /&gt;&lt;br /&gt;4) ரிஷிகேஷ்/ஹரித்வார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பார்க்க விரும்பும் நாடுகள்/ஊர்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;1) ஸ்காட்லந்து2) ஜப்பான்3) கஷ்மீர்4) சீனா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பிடித்த பிரபலங்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1) அதிபர் திரு. கலாம்2) அன்னை தெரெஸா3) சானியா மிர்ஸா4) விஸ்வநாதன் ஆனந்த்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பிடித்த வீட்டு வேலைகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1) சமையல் (ரசிச்சு சாப்ட ஆள் இருந்தா சமைக்கப் பிடிக்கும்)&lt;br /&gt;&lt;br /&gt;2) வீட்டை சுத்தம் செய்தல் (ஆனா,. வீட்ல யாரும் இருக்கக்கூடாது பாட்டு கேட்டுகிட்டே,.. மணிக்கணக்கா செய்வேன்)&lt;br /&gt;&lt;br /&gt;3) ரீஸைக்ளிங்க்குக்காக (மறுபயனீட்டுக்காக) ப்ளாஸ்டிக்/பாட்டில்/பேப்பர்/துணி எல்லாத்தையும் தேடி எடுத்து ஒரு பையில போட்டு மாசத்துக்கு இரு முறை சேகரிக்க வரவங்ககிட்ட கொடுக்கவென்று எடுத்து வைப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;4) புத்தக அலமாரியைக் குடைந்து, பிரித்து அடுக்குதல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;பிடிக்காதது&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1) தேவையில்லாத/ வேண்டாத பொருட்களைச் சேர்த்தல் (எங்க வீட்ல மூணு பேரும் சேர்ப்பாங்க,.. நான் அப்பப்ப கழிப்பேன்)&lt;br /&gt;&lt;br /&gt;2) பந்தாவிடுதல்/அலட்டுதல்/தற்பெருமை&lt;br /&gt;&lt;br /&gt;3) நேரத்தை வீணடித்தல்&lt;br /&gt;&lt;br /&gt;4) exploiting my kindness&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;பிடித்தது &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1) ஆழ்ந்த நட்பு2) unconditional Love/respect3) பெண்களை (வார்த்தைகளால் மட்டுமில்லாமல்) உண்மையிலேயே மதிக்கத் தெரிந்த ஆண்கள்4) தன்னம்பிக்கையுள்ள பெண்கள் '&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பிடித்த நடிகர்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1) நாசர்2) கமல்3) தலைவாசல் விஜய்4) வினீத்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பிடித்த நடிகைகள் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;1) சச்சு2) ரம்யா கிருஷ்ணன்3) விநோதினி4) ஷபானா ஆஸ்மி &lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;பிடித்த நடனமணிகள் &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;1) மாளவிகா சருக்கை2) சித்ரா விஸ்வேஸ்வரன்3) பத்மா சுப்ரமணியம்5) ஸ்ரீநிதி சிதம்பரம் &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;மனசுக்கு பிடிச்சு செய்யற வேலைகள்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;1) உடற்பயிற்சி/வேக நடை2) குருட்டு யோசனை : )3) எழுதறது4) பிழைதிருத்தம் செய்யறது &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;பேராசைகள்&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;1) மெகா சீரியல்கள் மற்றும் குப்பை (குத்தாட்ட) சினிமாக்கள் அடியோடு ஒழியவேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;2) உலகில் எங்கும் எதிலும் அமைதி நிலவவேண்டும்&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;3) பசி பிணி இல்லாத உலகம் உருவாகவேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;4) கணினி/தொலைகாட்சி இல்லாத உலகில் ஒரே நாள் வாழவேண்டும். அதாவது, ஒருவரும் பயன்படுத்தக்கூடாது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;பிடித்த பொழுதுபோக்கு&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;1) இணையத்தில் மேய்வது (நேரம் தான் கிடைக்காது)&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;2) தோழிகளுடன் அரட்டை (வாய்ப்புக் கிடைக்கும்போது பேசுவதைவிட அதிகம் கேட்பேன்)&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;3) இசை கேட்பது&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;4) புத்தகம் படிப்பது &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பிடித்த நூல்கள்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;1) காடு2) குழந்தைகள் பெண்கள் ஆண்கள்3) புலிநகக் கொன்றை4) மிதவை &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பிடித்த கவிஞர்கள்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;1) பாரதி2) க்ருஷாங்கினி3) ஞானக்கூத்தன்4) ஜெயபாஸ்கரன் &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பிடித்த&lt;/span&gt;&lt;span style="color:#cc0000;"&gt; எழுத்தாளர்கள் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;1) நாஞ்சில் நாடன்2) ஜெயமோகன்3) தி.ஜா4) சு.ரா &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பிடித்த பிறமொழி படைப்பாளர்கள்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;1) செக்காவ்2) வைக்கம் மொஹமது பஷீர்3) தாகூர்4) தகழி &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பிடித்த தமிழ் படங்கள்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;1) சலங்கை ஒலி2) அன்பே சிவம்3) ஆடோகிரா·ப்4) சதி லீலாவதி &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பிடித்த இந்திப்படங்கள்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;1) காமோஷி2) ஆராதனா3) ஆனந்த்4) தேவ்தாஸ் &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பிடித்த இந்திப்பாடல்கள்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;1) ஏ மேரா ப்ரேம் பத்ரு படுகர் து நராஸ¤ ,.&lt;/p&gt;&lt;p&gt;மொஹமத் ர·பி&lt;/p&gt;&lt;p&gt;2) ஜெஷாயர் தோ நஹி மகர் ஏ ஹஸீன்,..&lt;/p&gt;&lt;p&gt;கிஷோர் குமார்&lt;/p&gt;&lt;p&gt;3) தேரே மேரே பீச்மே, கைசா ஹை ஏ பந்தன்&lt;/p&gt;&lt;p&gt;SPB&lt;/p&gt;&lt;p&gt;4) மேரே சாம்னேவாலி கிடுகீ மே எக் சாந்துக்கா டுக்டா ரெஹத்தா ஹே&lt;/p&gt;&lt;p&gt;மொஹமத் ர·பி &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இசைக்காக பிடித்த திரையிசைப் பாடல்கள் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;1) தங்க ரதம் வந்தது வீதியிலே &lt;p&gt;பி. சுசீலா,பாலமுரளிகிருஷ்ணா&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;2) அதிசய ராகம் ஆனந்தராகம்&lt;/p&gt;&lt;p&gt;ஜேசுதாஸ்&lt;/p&gt;&lt;p&gt;3) ஸ்நேகிதனே ஸ்நேகிதனே,. ரகசிய ஸ்நேகிதனே&lt;/p&gt;&lt;p&gt;சாதனா சர்கம் &amp;amp; ஸ்ரீனிவாஸ்&lt;/p&gt;&lt;p&gt;4) தூங்காத விழிகள் ரெண்டு,..&lt;/p&gt;&lt;p&gt;ஜேசுதாஸ் &amp;amp; சித்ரா ( ? ) &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;கருத்துக்காக/ஓசை நயத்திற்காக பிடித்த பாடல்கள்&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;1) ஒவ்வொரு பூக்களும் சொல்கிறதே2) சின்னப்பையலே சின்னப்பயலே சேதிகேளடா3) நலம் நலமறிய ஆவல்4) சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்,..&lt;br /&gt;பிடித்த (சாஸ்த்ரீய சங்கீதம்) பாடல்கள்&lt;br /&gt;1) கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் குமரன் (பாம்பே ஜெயஸ்ரீ)2) போ சம்போ (மஹாராஜபுரம் சந்தானம்)3) பாவயாமி ரகுராமம் (எம். எஸ்)4) திக்குத் தெரியாத காட்டில் (ஜி. என். பாலசுரமணியம்)&lt;br /&gt;பிடித்த ராகங்கள்&lt;br /&gt;1) ரேவதி2) ரஞ்சனி3) அம்ருதவஷிணி4) சஹானா&lt;br /&gt;பிடித்த நான்கு இசைக்கலைஞர்கள்&lt;br /&gt;1) ராஜேஷ் வைத்யா (வீணை)2) எம். எஸ். கோபாலகிருஷ்ணன் (வையலின்)3) உமையாள்புரம் சிவராமன் (ம்ருதங்கம்)4) என். ரமணி (புல்லாங்குழல்)&lt;br /&gt;பிடித்த நான்கு கர்நாடக இசைப் பாடகர்கள்&lt;br /&gt;1) ஓ. எஸ் அருண்2) அருணா சாயிராம்3) டீ. கே. ஜெயராமன் 4) எம். எஸ். சுப்புலஷ்மி&lt;br /&gt;பிடித்த திரை இசைப் பாடகர்கள்&lt;br /&gt;1) ஹரிஹரன்2) ஜேசுதாஸ்3) சாதனா சர்கம்4) ஹரிஷ் ராகவேந்தர்&lt;br /&gt;நான் கூப்பிட நினைக்கும் நால்வர்&lt;br /&gt;1) நிர்மலா (ஒலிக்கும் கணங்கள்)2) இராம.கி (வளவு) (இப்பல்லாம் நேரம் கிடைச்சா கிடுகிடுன்னு 'வளவு'க்கு மட்டும் ஒரு நடை போயி படிக்கறேன். பிரமிக்கறேன். ஏதாவது எனக்குள்ளும் ஏறிடாதான்னு ஒரு சின்ன நப்பாசைதான்.)) மாதங்கி (பெரிதினும் பெரிது கேள்)4) எம். கே. குமார் ( நெஞ்சின் அலைகள்)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9687302-114265842640040563?l=jeyanthisankar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyanthisankar.blogspot.com/feeds/114265842640040563/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9687302&amp;postID=114265842640040563&amp;isPopup=true' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/114265842640040563'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/114265842640040563'/><link rel='alternate' type='text/html' href='http://jeyanthisankar.blogspot.com/2006/03/blog-post_18.html' title='நாலு விளையாட்டு'/><author><name>ஜெயந்தி சங்கர்         (Jayanthi Sankar)</name><uri>http://www.blogger.com/profile/04533483437106248358</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9687302.post-114154724472924205</id><published>2006-03-05T16:14:00.001+08:00</published><updated>2006-03-05T18:23:06.146+08:00</updated><title type='text'>பார்வை (சிறுகதை)</title><content type='html'>&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=437373&amp;amp;sid=bnA62bqvS6" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரமாக, 'பாஸ்டன்லேருந்து என் கஸின் வரா,"என்று சாதா சொல்லிக்கொண்டு வீட்டிலிருந்தவர்களின் அலுப்பையும் சலிப்பையும் சம்பாதித்துக்கொண்டிருந்தாள் அம்மா. எங்களின் முகச்சுளிப்புகளுக்கோ, கிண்டல் புன்னைகைகளுக்கோ கொஞ்சமும் திருந்திவிடாமல் தொடர்ந்து எங்களைப் படுத்திக்கொண்டிருந்தாள். அம்மாவின் தூரத்து அக்கா முதல் முறையாக சிங்கப்பூருக்கு வருவதாக இருந்தனர். அம்மாவுக்கு ஒரே உற்சாகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாளே இதைச் சமைக்கவா, அதைச் சமைக்கவா என்று வீட்டில் கருத்துக்கணிப்பு நடந்தி ஓய்ந்து, பிறகு தானே ஒரு பட்டியலைப் போட்டு, சமைக்க ஆரம்பித்துவிட்டாள். வீட்டில் இல்லாத கொத்துமல்லிக்கும், வெங்காயத்துக்கும் அப்பாவைக் கடைக்கு தனித்தனியே இரண்டு முறை பணிவாக விரட்டினாள். இருபது வருடங்களில் அம்மாவின் அமளிகளுக்குப் பழக்கப்பட்டிருந்த அப்பா ஒரு கேள்விகூடக் கேட்காமல் கிளம்பிப்போனார் அருகிலிருந்த காய்கறிச் சந்தைக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு நாட்களுக்கு முன்பே இரவு நேராக இங்கே தான் வருவார்கள் என்று தானாகவே நினைத்துக்கொண்டு, ஒரு முறை சமைத்து வைத்துக் காத்திருந்தாயிற்று. தனது எட்டாவது வயதில் பார்த்தபிறகு முப்பத்துமூன்று வருடங்கள் கழித்துப்பார்க்கப்போகும் தூரத்து சொந்தமாக நினைக்காமல், ஏதோ சொந்த அக்காவை வருடக்கணக்கில் பார்க்காமல் பார்க்கப்போகும் ஆவல் எப்படித்தான் வந்ததோ அம்மாவுக்கு. ஆனால், சாங்கி விமானநிலையத்திலிருந்து அம்மாவின் அக்கா,"விசாலம், நாங்க வந்து எறங்கிட்டோம். ஸோ டயர்ட். என்னோட ஒண்ணுவிட்ட நாத்தநார் ஆத்துல தான் தங்கறதா இருக்கோம். அவா நம்பர் எழுதிக்கறியா?, என்று சொல்லி அம்மாவை ஏமாற்றிவிட்டார்கள். அவளின் குண்டு முகம் சட்டென்று வாடித்தான் போனது அன்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்படித்தான், மிக இயல்பாக அக்கா, அக்கா என்று போனில் குழைந்துபேச முடிகிறதோ என்று நினைத்துக்கொண்டேன். நானும் வேறு பெரியம்மா என்று கூப்பிடவேண்டுமென்று எதிர்பார்த்தாள். திடீரென்று எப்படி வரும் எனக்கு? அம்மாவின் மறுபெயர் தான் அலாதியோ? "வீக் டேஸ்ல வரதவிட ஞாயித்துக் கெழம வரோமே, இவருக்கும் உங்காத்துக்காரர பாக்கணுமாம்., ஓகேயா? பை", என்று போனை வைத்ததும் அம்மா புலம்பினாள். "நீயாவே ஏம்மா நேர அவா இங்கதான் வரான்னு 'அஸ்யூம்' பண்ணிண்டு, சமைச்சு வச்சுண்டு அவதிப்படற", என்று நான் கேட்டதுக்கு அம்மா ஒன்றுமே சொல்லாமல் என் முகத்தையே திருதிருவென்று விழித்துபடிபார்த்துக் கொண்டிருந்தாள். அடுத்த நாளும் நாங்கள் சமைத்ததையெல்லாம் மீண்டும் ஒருமுறை சாப்பிட்டுத் தீர்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிறு காலையிலேயே சமையறையில் பலவிதமான ஓசைகள் கேட்டன. தினப்படிச் சமையலை அமைதியாக முடித்துவிட்டு வெளியேறும் அம்மாவுக்கு, யாராவது ஒரு ஆள் சாப்பிட வருவதாயிருந்தால் திடீரென்று சமையலறை, அங்குள்ள சாமான்கள் மற்றும் சமையல் பக்குவங்கள் எல்லாமே எப்படி அந்நியமாகிப்போகின்றன என்று நூற்றியோராவது முறையாக அதிசயித்தேன். வரவிருக்கிறவர்களை மகிழ்விக்கவும் திருப்திப்படுத்தவும் அம்மா எடுக்கும் பிரத்யேக பிரயத்தனங்கள் அவளைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடுகின்றன என்றுதான் எனக்குத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"பெரியம்மா வரபோது உள்ளபோய் நீபாட்டுக்குப் படிச்சுண்டிருக்காதடி ஸ்ரீநிதி. கொஞ்சம் ஹாலுக்கு வந்து பேசிண்டிரு, அவா பொண்ணும் வராளாம், அவளுக்காவது கொஞ்சநாழிக்கி கம்பனி கொடு,"என்று அம்மா முதல் நாளே சொல்லிவிட்டிருந்ததால், நான் முடிக்கவேண்டிய அஸைன்மெண்டை முடிக்கும் மும்முரத்தில் இருந்தேன். அம்மாவின் சமையலறைச் சாகசங்கள் ஏற்படுத்திய ஓசைகள் அடைத்திருந்த அறைக்கதவின் இடுக்கு வழியாக வந்து காதில் மோதித் தொந்தரவு கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிறு மதியம். சூரியத் தொலைக்காட்சியில் 'சப்தஸ்வரங்கள் ஓடிக்கொண்டிருந்தது. அடித்துப் பெய்யாமல் பிசுபிசுவென்று போக்குக்காட்டிக்கொண்டிருந்தது மழை. அவர்கள் வரும்போது, வழக்கமாய் நாங்கள் சாப்பிடும் நேரம். குசலங்கள் பரஸ்பரம் விசாரிக்கப்பட்டு, சிங்கப்பூரின் சீதோஷணத்தைச் சகிக்கமுடியாத அவர்களின் நிலையை அவர்கள் சொல்லக்கேட்டுக்கொண்டிருந்தோம் சோபாக்களில் உட்கார்ந்துகொண்டு.&lt;br /&gt;அம்மாவின் முகமெங்கும் பல்லாகத்தெரிந்தது. அம்மா அப்பாவின் ஜாடை துளிக்கூட இல்லாமல், ஆனால் மிகவும் லக்ஷணமாக, கோதுமை நிறத்தில் பளிச்சென்று இருந்தாள். என்னைவிட ஒரு நான்கு வயது மூத்தவளாகயிருப்பாள். அமெரிக்க ஆங்கிலத்தை நாவால் சுழற்றிச் சுழற்றி வேகமாகப்பேசினாள். சிரித்தமுகம். நாங்கள் பேசியவற்றைத் தெளிவாகப் புரிந்துகொண்டு எங்களுடன் சிரித்தாள். ஆனால், தமிழில் பேசவேயில்லை. தமிழில் கேட்ட கேள்விகளுக்கும் ஆங்கிலத்தில் தான் பதில். இஷிதாவின் அப்பா அதிகம் பேசவில்லை. சேர்த்து வைத்து அவளின் அம்மா லொடலொடவென்று பேசித்தள்ளினார். மற்றவர்களுக்குப் பேச வாய்ப்பளிக்காமல் தன்னுடைய கார் பற்றியும், தான் பார்த்த நர்ஸ் வேலை பற்றியும், பக்கத்துவீட்டு நாய்பற்றியும் வாய் மூடாமல் பேசினார். இடையிடையே இட்டு நிரப்ப இரண்டு நாட்களுக்கு முன்பு சென்று வந்திருந்த சிரெங்கூன் ரோட் அனுபவங்கள். சாப்பிட்ட சாப்பாடெல்லாம் பேச்சிலேயே போய்விடுவதால்தான் கிள்ளியெடுக்க சதையில்லாமல் ஒல்லியாக இருந்தாரோ?!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இஷிதான்ற பேர் புதுமையா அழகா இருக்கு ஆண்டி", என்று சொல்லிக்கொண்டே நான் இஷிதாவின் முகத்தைப்பார்த்தேன். பெரியம்மா என்று கூப்பிட வரவில்லை எனக்கு. அவளுடைய அம்மா பெரிதாகச் சிரித்துக்கொண்டே, "ஐயோ, நீ எங்கம்மாவக் கேக்கணும், சாகறவரைக்கும் 'ஈஷித்தா', 'ஈஷல்லயா'ன்னு என்ன கண்றாவின்னு சொல்லிண்டே இருந்தா. இஷிதான்னு கடசிவரைக்கும் சொல்லவரல்லயே அவளுக்கு. சாகறவரைக்கும் சிந்து சிந்துன்னு தான் கூப்டுண்டிருந்தா", என்றுபோது இஷிதாவுக்கு சிரிப்பதா, இல்லை வேறு என்ன செய்வது என்ற குழப்பம் முகத்தில். ஏற்கனவே கேட்டுப் புரிந்துகொண்டிருப்பாள் போலிருந்தது. என் அம்மா தேவைக்கதிகமாக சிரித்தாற்போலிருந்தது. ஆண்கள் இருவரும் சடங்கிற்காகச் சிரித்து வைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவுக்கு இஷிதாவைப் பிடித்துவிட்டது. "ஸ்ரீநிதி, உன்னோட ரூமக்காட்டும்மா இஷிதாவுக்கு", என்றதும் நான் என் அறைக்கூட்டிப்போய் காட்டினேன். அவள் என் புத்தக அலமாரியிலிருந்து சில புத்தகங்களை எடுத்துப் புரட்டிப்பார்த்தாள். அம்மா அறைக்குள் வந்து, "ஸ்ரீநிதி, ஏதாவது குடிக்கறாளா கேளு அவ", என்று சொல்லும் போதுதான் கவனித்தேன், அம்மா அன்று மகிழ்ச்சியாக இருந்தாள் என்று. நேரமாகிவிட்டதால், சாப்பிட்டுவிடலாம் என்று இஷிதா சொல்லிவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாட்டு நேரத்தின் போதுதான் அம்மாவின் மனநிலை சடக்கென்று திடீர் திருப்பம் கண்டது. அதை நினைத்து எனக்கு மிகவும் வேடிக்கையாகத்தான் இருந்தது. " இஷிதாவுக்கு நாங்க மொதல்ல டிக்கெட்டே எடுக்கல்ல. நாங்க திரும்பிப் போனப்பறமா அவளையும் அவளோட பாய் ·ப்ரெண்டையும் சிங்கப்பூருக்கு வெகேஷனுக்கு அனுப்பி வைக்கலாம்னுதான் ப்ளான். ஆனா, இவளோட ·ப்ரெண்ட் 'எல்வின்' அவள எங்ககூடவே ஜாயின் பண்ணிக்கச் சொல்லிட்டான். அவனுக்கு டிராவல்னாலே பிடிக்காது. இவளுக்கு என்ன மாதிரி டிராவல்னா ரொம்பப் பிடிக்கும், எங்ககூட வரல்லேன்ன பாவம் இவளுக்கு ஒரு ச்சேஞ்சே இருக்காது, அதான் கடைசி நேரத்துல டிராவல் ஏஜண்ட்டதொரத்தித்தொரத்தி டிக்கெட் வாங்கினேன்", என்று சொன்னதுமே அம்மா சில கணங்கள் அப்படியே வாய் திறந்தபடி நின்றிருந்ததை நான் மட்டும் தான் பார்த்தேன். சட்டென்று மீண்டும் சாதம் எடுக்கவென்று போவதைப்போலச் சமையலறைக்குள் போய் விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இப்பதான் ஒரு வருஷமா ரெண்டு பேரும் சேர்ந்து தனியா இருக்கா. வீட்டை சுத்தமா அழகா வச்சிருக்கா. எங்களோட இருக்கற வரைக்கும் டீ குடிச்ச கப்பக்கூட ஸிங்க்ல போடமாட்டா. இப்ப, நான் போனா கா·பி போட்டுக்கொடுக்கறா. ஆச்சரியமா இருக்கு. சந்தோஷமாவும் இருக்கு", என்று சொல்லிக்கொண்டே போனார் அப்பளத்தைக் கடித்தபடி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவின் முகம் அவளுக்குள் ஓடிய சிந்தனையை கண்ணாடியைப்போலப் பிரதிபலித்துக் காட்டியது எனக்கு. அம்மாவின் மனதில் தன் ஒரே பெண்ணான என்னைப்பற்றிய கவலை ஆரம்பித்துவிட்டது என்று தெரிய எனக்குத்தான் போதிய அனுபவம் இருந்ததே. என்னைப் பற்றி மிக நன்றாக அறிந்திருந்தபோதிலும் அம்மா அவசியமேயில்லாமல் அப்படித்தான் கவலைப்படுவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் சிநேகிதி ஒருத்தி. 'மெய்·பெங்க்' என்று பெயர். மிக நல்ல பெண். நன்றாகப் படிப்பாள். என்னுடன் போன வருடம் படித்தபோது பாடம் சம்பந்தமாக நாங்கள் எங்கள் வீட்டில் தான் சந்தித்து வந்தோம். சேர்ந்து படித்ததில் இருவரும் பலவகையில் பயனடைந்தோம். எல்லாமே ஒருநாள் மாறியது. அவள் தன் ஆண் நண்பனுடன் தனியே வசிக்க ஆரம்பித்துவிட்டதை என்னிடம் சொல்ல நான் அம்மாவிடம் சொல்ல, அம்மாவிற்கு பயம் பிடித்துவிட்டது. அவளுடன் சேராதே, பழகாதே, பேசாதே என்று வரிசையாய் தடை. கோபம் வந்தது. அவளின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் என் நட்பிற்கும் என்ன சம்மந்தம் என்றேல்லாம் வாதிட்டேன். ஆனால், முடிவில் அம்மாவின் வழிக்குப் போவதை தவிர வேறு வழியே இருக்கவில்லை.&lt;br /&gt;சாப்பிட்டுமுடிந்து மீண்டும் சோபாக்களில் அமர்ந்துகொண்டோம். எல்வினின் புகைப்படத்தை எங்களுக்கெல்லாம் காட்டச்சொல்லி இஷிதாவை அவளின் அம்மா மிகவும் வற்புறுத்தவே, அவளும் வேறு வழியில்லாமல் தனது பர்ஸைத் திறந்து போட்டோவை எடுத்து என்னிடம் நீட்டினாள். நான் பார்த்துவிட்டு அப்பாவிடம் கொடுக்க அப்பா பார்த்துவிட்டு அம்மாவிடம் கொடுத்தார். அம்மாவின் முகம் இறுகிக்கிடந்தது. அம்மாவிற்குப் பார்க்கப்பிடிக்கவில்லை. அதே சமயம் பார்க்காமல் இருக்கவும் பிடிக்கவில்லை. அம்மாவின் முகத்தைக் கூர்ந்து நான் கவனிப்பதை அம்மா பார்த்துவிட்டாள். முகத்தைச் சுளிக்காமலிருக்க எவ்வளவு பாடுபட்டாள் என்று எனக்குப் புரிந்தது. அவள் பட்டபாட்டைப் பார்த்துச் சிரிப்பு வந்தது எனக்கு.&lt;br /&gt;அவன் ஒரு கருப்பினத்தவன். குத்துச் சண்டை வீரன் முகமது அலி சிறுவயதில் ஒரு வேளை அப்படித்தான் இருந்திருப்பாரோ. சுருட்டை முடியுடன் தடித்த உதடுகளும் தீர்க்கமான கண்களுமாக, கபடின்றிச் சிரித்துக்கொண்டிருந்தான் நிழற்படத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஷிதாவின் அம்மாவிற்கு அங்கு திடீரென்று நிலவிய மௌனம் அசௌகரியமாக இருந்திருக்கும்போல. மௌனத்தைப் பிளந்தபடி, "என்ன செய்ய, விசாலம். காலம் மாறிண்டு வரது. இருக்கறது பாஸ்டன். பழகறதெல்லாம் வெள்ளக்காரா. அங்கேயே பிறந்து வளர்ந்துட்டா இஷிதா. அந்த பழக்கவழக்கங்கள் வராம இருக்குமா. அதெல்லாம் சர்வசாதாரணம் இல்லையா அங்க. நானும் மொதல்ல எல்லாம் சொல்லிப்பார்த்தேன், வேண்டாம்னு. ஆனா, ஒண்ணும் நடக்கல்ல. நாங்களே பேசாம அவ வழிக்கிப் போயிட்டோம். வாரத்துக்கு ஒருதடவ வருவா. தனியாப் போனதுலருந்து நல்ல மெசூரிட்டி. எங்க அருமையத் தெரிஞ்சுண்டான்னு வை", என்று பெரிய விளக்கம் கொடுத்ததைப்பார்த்தால் அவர் அம்மாவின் உள் மன உறுத்தலைத் தெளிவாகப் புரிந்துகொண்டார் என்றே தோன்றியது. அம்மா ஒன்றுமே சொல்லாமல் உட்கார்ந்திருந்தாள். பேச்சை மற்ற அப்பா தன் பங்கிற்கு அவர்களின் ஊரைப்பற்றியும் வாழ்க்கை முறைகளைப்பற்றியும் கேட்க ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெதுவாக சாதாரண குரலில், "எல்வின் நல்ல பையன் தான். அவனையே கல்யாணம் பண்ணிண்டுட்டான்னா பரவாயில்ல", இஷிதாவின் அம்மா  சொன்னபோது, அதில் இருந்த சந்தேகத் தொனியால் அம்மா கொஞ்சம் தடுமாறிப்போனாள் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு இஷிதாவும், " கமான்மா, வீ ஆர் ட்ரையிங்க் ·பார் தாட் ஒன்லி, யு நோ", என்று கொஞ்சம் கொஞ்சலும், கொஞ்சம் எரிச்சலும் குழைத்துச் சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவிற்கு திடீரென்று பிடிக்காமல் போனதைப்பார்த்து எனக்குச் சிரிப்புதான் வந்தது. அவளின் ஒழுக்க விழுமியங்களுக்குச் சிறிதும் மாறுதலாய் இருந்தால் அவளால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லையே என்று நினைக்கும் போது ஒரு குழந்தையைப்போலத் தான் தோன்றியது எனக்கு அவளைப்பார்க்கும்போது. ஆசைப்பட்ட பொருள் கிடைக்காத ஏமாற்றம் முகத்தில் தேங்கி நிற்கும் ஒரு சிறுகுழந்தை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் கிளம்பிப்போனார்கள். பெரும் மழை அடித்து ஓய்ந்த அமைதி வீட்டில் கவிந்தது. அம்மா சமையலறையை ஒழுங்கு பண்ணிக்கொண்டிருந்தாள். என் கல்லூரி அஸைன்மெண்ட் என்னை அறைக்கு அழைத்தது. இருந்தாலும், அம்மாவுக்கு உதவலாமென்று டைனிங்க் டேபிளிலிருந்து ஒவ்வொரு பாத்திரமாகக் கொண்டுபோய் சமையலறை மேடையில் வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ப்ச், நா நெனச்ச மாதிரியில்ல அக்கா, ரொம்ப மாறிட்டா", என்று ஆரம்பித்தாள் அம்மா. தான் எட்டு வயதிருக்கும்போது தன் பன்னிரண்டு வயது அக்காவை என்ன புரிந்துகொள்டிருப்பாள் அம்மா? குபீரென்று வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, "நீ எதிர்பார்க்கறமாதிரியே எல்லாரும் இருப்பாளாம்மா. தவிர, நீ ஏன் ஒரு எதிர்பார்ப்ப மனசுல உண்டாக்கிக்கற? அதது எப்டி எப்டி இருக்கோ அப்டி அப்டியே பார்க்கவும் ஏத்துக்கவும் பழகிட்டோம்னா பிரச்சனையே இல்ல", என்று சொல்லிக்கொண்டே, மீந்து போயிருந்த தயிரை எடுத்து ·ப்ரிட்ஜுக்குள் வைத்தேன்.&lt;br /&gt;" ஒங்கிட்ட ஒண்ணு கேக்கணும்னு நெனச்சிண்டிருந்தேன். ஆமா, ஏம்மா இஷிதா அந்த 'ஆண்டி'ய மாதிரியுமில்ல, 'அங்கிள' மாதிரியும் இல்ல, ம்?", என்று சாதாரணமாக நான் கேட்டதும், "ஓ, அதுவா அக்காவுக்கு கன்ஸீவ் ஆன ஒண்ணுகூட தங்கல்லயாம். எவ்வளவோ, வேண்டுதல், கோவில் கொளம்னு போனாளாம். ஹ¥ஹ¤ம்,ஒண்ணும் கைகொடுக்கல்ல. கடசீல அமெரிக்காலயே ஒரு மாசக்கொழந்தை ஒண்ணும் கிடைச்சதும் தத்தெடுத்து வளர்த்துண்டு வரா. குஜராத்திகளோட கொழந்தைன்னும் சொல்லிண்டா."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;" ஓ, நோ வொண்டர். அதானா அப்படி? ஆனா,.'தத்து' விஷயம் ரொம்ப நல்ல விஷயம்தான். இல்லம்மா? "&lt;br /&gt;" என்னதாஞ்சொல்ற, அதானா அப்படின்னா என்ன?"&lt;br /&gt;" இல்ல, நீயே யோசிச்சுப்பாரேன். நிச்சயமா, அந்த 'ஆண்டி' தன் சொந்த ரத்தமா இருந்திருந்தா, பொண்ணோட நடவடிகைக்கெல்லாம் ஒத்திண்டிருந்திருப்பாளா, மூட்டைக்கண்டிண்டு இண்டியாக்கே போயிருப்பா. என்ன?", என்று நான் கேட்டதும் அம்மா தீவிரமாக யோசிக்க ஆரம்பித்து விட்டாள் என் முகத்தைப் பார்த்துக்கொண்டே. இந்தியாவே இவற்றில் மேற்கத்தியத்தைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டது என்ற அடிப்படை வாதமெல்லாம் அம்மாவுக்குத் தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின் அம்மாவை எப்படித்தான் என் மீது நம்பிக்கைகொள்ளச் செய்வது? சூழல் மற்றும் நட்பு வட்டத்தில் பார்த்துப் பழகி நானும் பின்பற்றுவேன் என்று அம்மாவுக்கு ஒரே பயம். இருக்கும் தலைவலிகள் போதாதா எனக்கு? சிலவேளைகளில் அம்மாதான் எனக்கு மகளோ என்று தோன்றிவிடுகிறது. நான் மெதுவாக நழுவி என் அஸைன்மெண்ட்டை முடிக்க என் அறைக்குள் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;------------(முற்றும்)----------------&lt;br /&gt;&lt;br /&gt;----- ஜெயந்தி சங்கர்&lt;br /&gt;&lt;br /&gt;மார்ச் (பெண்கள் சிறப்பிதழ் ) 2006 &lt;a href="http://www.thisaigal.com/march06/jayanthi.html"&gt;திசைகள்&lt;/a&gt; டாட் காம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9687302-114154724472924205?l=jeyanthisankar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyanthisankar.blogspot.com/feeds/114154724472924205/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9687302&amp;postID=114154724472924205&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/114154724472924205'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/114154724472924205'/><link rel='alternate' type='text/html' href='http://jeyanthisankar.blogspot.com/2006/03/blog-post_114154724472924205.html' title='பார்வை (சிறுகதை)'/><author><name>ஜெயந்தி சங்கர்         (Jayanthi Sankar)</name><uri>http://www.blogger.com/profile/04533483437106248358</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9687302.post-114154681775666026</id><published>2006-03-05T16:14:00.000+08:00</published><updated>2006-03-05T16:28:19.306+08:00</updated><title type='text'>அப்பாவின் மனைவி (சிறுகதை)</title><content type='html'>&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=436815&amp;amp;sid=isB89CGNU4" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடன் படித்த நந்தினிக்கு நிச்சயதார்த்தம். அவளின் அண்ணன் ப்ரசன்னா எனக்கு நெருங்கிய நண்பன். சத்திரத்திற்குள் நுழைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னமும் அதிககூட்டம் சேர்ந்திருக்கவில்லை. மண்டபத்தினுள் ப்ரசன்னாவைத் தேடினேன். நாதஸ்வர இசையும், ஆங்காகே பேச்சொலியும் சேர்ந்து அரங்கையே நிறைத்திருந்தது. இரண்டு இருக்கைகளுடன் தயாராய் அலங்கரிக்கப்பட்டிருந்த மேடைக்கருகே நின்றிருந்தான். வலதுகையை வாயருகே குவித்து யாரோ ஒரு பெண்மணியிடம் காதில் ஏதோ சால்லிக் கொண்டிருந்தான். வெண்பட்டு குர்தாவில் பளிச்சென்றிருந்தவன் என்னைப்பார்த்து இடக்கையை உயர ஆட்டி செய்கை செய்துகூப்பிட்டான். எழுந்து அவனை நோக்கி நடந்தேன். அவனிடம் பேசிக்கொண்டிருந்த பெண்மணியை எங்கேயோ பார்த்தாற்போலிருந்தது. உருவத்தை விட குதித்தாற்போன்ற நடை மற்றும் ஒயிலாய் வீசிய கையசைவும் அதிகப் பரிச்சயமாகத் தோன்றின. மூளையின் நினைவேடுகளைப் புரட்டிக்கொண்டே, பார்வையை அப்பெண்மணியின் மீதே வைத்திருந்தேன் என்னையறியாமல். ஏதோ பேசிக்கொண்டே மாடிப்படியேறிப் போய் விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"டேய், ஏண்டா இவ்ளோ லேட்?", என்று என் முதுகில் தட்டினான் ப்ரசன்னா."இது லேட்டா? நாந்தான் முதல்ல வந்திருக்கேன்னு நெனக்கறான்", என்று சொல்லிக்கொண்டே அங்கேயிருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன். "எங்க உக்காந்துட்ட? கெட் அப்மேன், ஒனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு,.. ஆமா, அம்மா வல்ல?", என்று இழுத்துக் கொண்டே மாடிப்படியேறினான். "ப்ச, ராத்திரியெல்லாம் ஒரே வீஸிங்க். இன்னிக்கி மருந்து சாப்டு தூங்கறாங்க. நந்தினி நிச்சயத்துக்குப் போகணும்னு ஆசஆசையா சொல்லிட்டிருந்தாங்க, ஆனா,..", என்றேன் அவனுடன் நடந்துகொண்டே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குளிரூட்டப்பட்ட அறைக்குள் நுழைந்தால், அதே பெண்மணி அங்கே உட்கார்ந்திருந்தார். "ஆண்டி, இது பாஸ்கர். உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவான். டேய், இது எங்க ·பேமிலி ·ப்ரெண்ட், 'அனு ஆண்டி'. இதெல்லாம் செய்யறாங்களேன்னு சின்னதா நெனச்சிடாத. அவங்க பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்ட். ஓகேடா, அம்மா அப்பவே எதோ கூப்டாங்க. என்னன்னு கேட்டுட்டு இதோ வரேன்", என்று அறையை விட்டு பரபரெவென்று வெளியேறிப்போய் விட்டான். அவர் பெயரைக்கேட்டு மின்னலாய் நினைவுக்கு வந்து, இன்னார் என்று புரிந்த அதிர்ச்சியில் அப்படியே நின்றிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறைமுழுவதும் அலங்கார வண்ண கெட்டி அட்டையில் தாம்பூலப் பைகள். மணமக்களாகப்போகும் நந்தினி, நரேன் இருவரின் புகைப்படங்கள். உள்ளே குட்டித் தேங்காய், வெற்றிலை, பாக்கு, சாக்லெட் மட்டுமில்லாமல் வெள்ளிக் குங்குமச் சிமிழ். "மிச்சத்தையெல்லாம் நானே போட்டுடுவேன். நீ கடைசியா எல்லாம் இருக்கான்னு செக் பண்ணிட்டு, குங்கபச்சிமிழ மட்டும் போட்டு அந்த பெரிய அட்டை டப்பால ஒவ்வொண்ணா அடுக்கி வை", என்றார். நானும் அவர் சொன்னதைச் செய்ய அப்படியே கம்பளம் விரித்திருந்த தரையில் உட்கார்ந்துகொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதினேழு வருடங்கள் என்னில் ஏற்படுத்தியிருந்த மாற்றங்கள் என்னைப் பெற்ற அப்பாவிற்கே அடையாளம் தெரியாதபடி செய்திருந்தன. அப்புறம் இவருக்கு மட்டும் எப்படித் தெரியக்கூடும்?மறைக்க முயற்சித்தும் அவர் முகத்தில் தெரிந்த மெல்லிய கோடுகள், காதோர நரை மற்றும் சற்றே கூடிவிட்டிருந்த உடல் எடை இவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் முன்பு மாதிரியே தான் இருந்தார். கழுத்து, காது மற்றும் மூக்கில் வைரங்கள் மின்னின.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஏழெட்டு வயதிருக்கும் அப்போது. அடிக்கடி அப்பாவுடன் வீட்டுக்கு வருவார். அப்பாவுடன் ஆபீஸில் வேலை பார்ப்பதாகச் சொல்லிக்கொண்டார். "அனு அத்தைடா", என்று சொல்லிக் கொடுத்த அப்பாவே சில மாதங்களில்," விஜய், அனு ஆண்டின்னு சொல்லு", என்று சொல்லிக்கொடுத்தபோது அப்படியே பின்பற்றத் தெரிந்ததே தவிர என்னால் அதன் பின்னணியில் இருக்கக்கூடிய அர்த்தத்தை உணரவோ யோசிக்கவோ முடியவில்லை.&lt;br /&gt;அதன் பிறகு, அம்மா அப்பாவுடன் சண்டை போட்ட நாட்களே அதிகமென்ற நிலை வந்தது. சண்டைக்கான காரணமே ஆரம்பத்தில் எனக்குப் புரியவில்லை. 'அனு ஆண்டி' என்ற பெயரைச் சொன்னாலே அம்மா கோபத்தில் பத்ரகாளியானாள். அல்லது அருவியாகக் கண்ணீர் சொரிந்து அழுதாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோர்ட்,கேஸ்,மணவிலக்கு என்று பலவிதமான புது அனுபவங்கள் அம்மாவைத் திக்குமுக்காட வைத்தன. அதுவரை அறிந்திருந்த அம்மாவைப் பார்க்கவோ உணரவோ முடிந்ததேயில்லை என்னால். நிரந்தரமில்லாமல் இருந்த தன் கணக்கர் உத்தியோகத்தைக் காட்டித் தன் மகனைத் தன்னிடமிருந்து பிரித்து அப்பாவிடம் கொடுத்துவிடுவார்களோ என்ற கவலையில் தவித்துத்தவித்து அம்மாவின் இயல்பே மாறிப்போயிருந்தது. யாரிடமும் ஒரே மாதிரியான அவநம்பிக்கை. பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் 'புருஷன கட்டுக்குள்ள வச்சிருக்கக்கூடத் தெரியாத அசடு' ஆனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இங்க பாருடா, இனிமே உனக்கு அப்பா கெடையாது. அவரு அனுவக் கல்யாணம் கட்டிக்கப் போறாராம்", என்று சொன்னார். அப்பா குடும்பத்தையும் எங்களையும் விட்டுப்போகிறார். அதற்குக் காரணம் 'அனு ஆண்டி', என்று மனதிற்குள் பதிந்துபோனது. அன்றிலிருந்து அடிக்கடி," விஜய், எல்லாத்தையும் மறந்துட்டு நீ நல்லாப் படி", என்று ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சொல்லிவந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை 'அனு ஆண்டி'யாக இருந்தவர், அன்றிலிருந்து என் வாழ்க்கையில் அப்பா இல்லாமல் ஆக்கியவரானார். அவரிடம் நான் கொண்டிருந்த விகல்பமில்லாத நட்பும் அன்பும் முற்றிலும் வெறுப்பாக உருக்கொண்டது. மதுரையில் கொண்டுபோய் பள்ளியில் அம்மா சேர்த்தபோது அங்கேயும் ஒரு 'அனு' இருந்தாள். எல்லோருக்கும் பிடிக்கும் அவளை. மிகவும் கனிவானவள். ஆனால், எனக்கு மட்டும் அவளை அவள் பெயரின் காரணமாகவே பிடிக்காது போனது. அந்த அளவிற்கு அவரின் மேல் ஒரு வெறுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு நாள் சந்திக்கக்கூடுமென்று யார்தான் நினைத்திருப்பார்கள் ? !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ம்,.எப்படியிருக்காரு மிஸ்டர். திவாகர்?", என்று கேட்டே விட்டேன் பொறுக்காமல். ஏராளமான கேள்விகளை முகத்தில் ஏந்தியபடி என்னையே உற்றுப்பார்த்தார். "நீ,.. நீ விஜயபாஸ்கரா?", என்று கேட்பதற்குள் அவருக்குத் தொண்டை அடைத்து, கண்கள் அகன்று, குளமாகக் கண்ணீர் சேர்ந்துவிட்டது. ஆமென்று தலையை மட்டும் ஆட்டினேன். "எங்கல்லாம் தேடினேன்,. கடைசில நீ இங்கதான் இருந்திருக்க", என்று பெருமூச்சுடன் சொல்லிக்கொண்டார். "உங்கப்பா மூணு வருஷத்துக்கு முன்னாடியே தவறிட்டாரு", என்று சொல்லிக் கொண்டே அமைதியில் ஆழ்ந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா உயிரோடு இல்லை என்ற வருத்தம் சின்னதாக என்னுள் கவிந்தது. அம்மா அதை எப்படி ஏற்றுக்கொள்ளப்போகிறாள் என்று யோசித்தேன். எனக்கு ஏற்பட்ட அந்தச் சிறிதளவு வருத்தம் கூட அவளுக்கு ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. "ஓ, அப்படியா?",என்று மிகவும் சாதாரணமாகக் கேட்டுவிட்டு நகர்ந்துவிடக்கூடிய சாத்தியங்களே அதிகமென்று தோன்றியது.&lt;br /&gt;திடீரென்று," சாகும்போது என்னோட இருக்கல்ல. அதுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே என்னோட க்ளோஸ் ·ப்ரெண்ட் வாணியோட போயிட்டாரு", என்றார். ஓஹோ, இதுதான் தன் வினைத் தன்னைச் சுடும் என்பதோ ? !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவுக்கு ஏற்பட்ட அனுபவத்தை மேலும் ஒரு பெண்ணுக்குக் கொடுத்த அப்பாவை ஏனோ என்னால் மன்னிக்கவே முடியாது என்று தோன்றியது. பேசாமல் கீழே குனிந்து கைவேலையில் லயித்தேன், காதை மட்டும் கொடுத்துவிட்டு. முகத்தைப் பார்த்துப்பேசப் பிடிக்கவில்லை எனக்கு. அவருடைய பார்வை அவ்வப்போது என் பக்கம் திரும்பியதை என்னால் உணர முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"விஜய், உங்கம்மாவ விட்டுட்டு திவாகர் என்னைய கல்யாணம் பண்ணிக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சியா இருந்தேன் தெரியுமா? உங்கம்மாவ நெனச்சு வருந்திருக்கேன். ஆனா, உங்கப்பாவோட பழகினதுல அவர்மேல எனக்கு ஏற்பட்ட ஈர்ப்புல அப்போ அந்த வருத்தம் பெரிசாத் தெரியல்ல. அன்னிக்கி என்னோட வந்தவர், பிற்காலத்துல வேற ஒருத்தியோட போயிடுவாருனு நெனச்சிருப்பேனா? ஹ¥ஹ¤ம். உன்னையும் எங்களோட யூ எஸ் கூட்டிட்டுப் போயிடணும்னுதான் உங்கப்பாவுக்கு ரொம்ப ஆசை. கேட்டுப்பாக்கறேன்னாரு உங்கம்மா கிட்ட. ஆனா நான் தான் உன்ன உங்கம்மா கிட்டயிருந்து பிரிக்கறது பிடிக்காம தடுத்தேன். அது ஏனோ என் மனசுக்குப் பிடிக்கல்ல. உங்கம்மாவுக்கு செய்யக்கூடிய பெரிய அநியாயமாத்தான் நெனச்சேன். அன்னிக்கி உங்கப்பாவும் புரிஞ்சுகிட்டாப்ல தான் பேசினாரு."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை நிமிர்ந்து பார்த்தேன். பல நாளாய் காத்திருந்து மனதில் சேர்த்து வைத்ததையெல்லாம் கொட்டுவதைப்போலப் பேசிக்கொண்டிருந்தது அவரது முகபாவனையிலேயே தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;" பாஸ்டன் போனதிலிருந்தே பிஸினஸ் சரசரவென்று ஏறுமுகம் தான். செலவு செய்யமுடியாத அளவுக்கு வந்து கொட்டிச்சு பணம். சேரச்சேர நிம்மதி கொஞ்சம் கொஞ்சமா விலகிப்போச்சு. ஒரு கொழந்தபெத்துத்தர முடியல்ல என்னாலன்ற காரணத்தைக் காமிச்சாரு. அது அவருக்கு ஒரு காரணம் தானே தவிர என்னை விட்டுப்பிரிய முடிவு செஞ்சதுக்கு அது மட்டுமே காரணமில்ல. அப்பறம் தான் அவருக்கு வாணியப் பிடிச்சுப்போயி அவளோட போறேன்னாரு ஒரு நாள். நானும் சரின்னு தனியாப் போகச் சொல்லிட்டேன்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது குனிந்திருந்த நான் முகத்தை நிமிர்த்திப் பார்த்தேன். கொடகொடவென்று கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தார். அவரின் அழுகை எரிச்சலை ஏற்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் பார்ப்பதைப்பார்த்துவிட்டு, சட்டென்று துடைத்துக்கொண்டு,"ஆமா, நீ என்ன வேல பாக்கற? அம்மா எப்படியிருக்காங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;" மேல படிக்கதான் ரொம்ப ஆசைப்பட்டேன் ஆனா, அம்மாவால முடியல்ல. அதான் ஒரு வேலைல சேரவேண்டிய நிர்பந்தம்.ஒரு சோப்புக் கம்பெனியில சேல்ஸ் ரெப்பா இருக்கேன். அம்மாவுக்கு அடிக்கடி ஆஸ்த்மா தொந்தரவு. பாதிநாள் மெபிலைஸர்ல கட்டுப்படாம ஊசி போடும்படியாயிடும்", என்று சொல்லிக்கொண்டே என்னை நினைத்து எனக்கே வியப்பு. காலம்தான் என் மனப்புண்ணை ஆற்றியதோ இல்லை வயதுதான் மனமுதிர்ச்சியைக் கொடுத்ததோ என்று புரியாமல் திடீரென்று அசௌகரியமாக உணர்ந்தேன்.&lt;br /&gt;அங்கே உட்காரப்பிடிக்கவில்லை. விவரமாக பதில் சொன்னதை மன்னித்ததாக நினைத்துக் கொண்டு விடுவாரோ என்று பயந்தேன். உடனே, 'மன்னிக்க' நான் யார் என்றும் தோன்றியது. டக்கென்று எழுந்துகொண்டேன் அறையை விட்டு வெளியேறும் எண்ணத்தோடு. உடனே,"உன்னோட நெறைய பேசணும் விஜய். உக்காரு. ப்ளீஸ் போயிடாத", என்றார்.&lt;br /&gt;உடனேயே உட்கார்ந்துகொண்டேன். ஆனால், ஏனென்று அடுத்த சில நொடிகளிலேயே என் மனதுக்குள் கேட்டுக்கொண்டேன். என்னுடைய மனத் தவிப்புகள் எனக்கே புதிதாகவும் விநோதமாகவும் தோன்றின.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;" உங்கப்பா எங்களுக்கு மணவிலக்கு கெடைக்கறதுக்குள்ளயே ஹார்ட் அட்டாக்குல போயிட்டாரு. அதனால சட்டப்படி எனக்கே எல்லா சொத்தும் வந்துசேர்ந்துடுச்சி. அப்ப வாணி கர்பமா இருந்தா. மாரடைப்பு வரும்னு தெரிஞ்சிருந்தா ஒருவேள, திவாகர் அவளுக்கு எல்லாத்தையுமே கூட எழுதி வச்சிருப்பாரோ என்னவோ. ஆனா, மணவிலக்கு வாங்கறதுலயே மும்முரமா இருந்திட்டாரு. வாணியும் நல்லவதான். எனக்கு அவளோட நிலைமை ரொம்ப நல்லாப் புரிஞ்சுது. அவளுக்கும் அவ மகளுக்கும் அங்கேயே ஒரு வீட்டையும் கணிசமான ரொக்கத்தையும் எழுதி வச்சிட்டு மிச்சத்தையெல்லாம் மொத்தமா 'வைண்ட் அப்' பண்ணிட்டு வந்துட்டேன் இந்தியாவுக்கே. முதல் வேலையா நீங்க குடியிருந்த கோடம்பாக்கம் அஜீஸ் நகருக்குப் போனேன். உன்னோட ஸ்கூல்ல, அக்கம் பக்கம் எல்லார்கிட்டயும் விசாரிச்சும் நீங்க மதுரைக்குப் போனது தெரிஞ்சுது, ஆனா வேற விவரம் ஒண்ணுமே தெரியல்ல. ஒரு வருஷம் இதே வேலையா தேடினேன். ஆனா, நீ சொல்றதப்பார்த்தா, அந்த நேரம் நீங்க திரும்ப சென்னைக்கே வந்துட்டீங்க போலயிருக்கு. எனக்கு எப்பவுமே உன்னப் பத்தின அக்கறைதான் இருந்திட்டே இருந்துச்சி. உன்கிட்டயிருந்து உங்கப்பாவப்பிரிச்ச பாவத்துக்குதான் எனக்குன்னு ஒரு கொழந்தையே இல்லாமப் பண்ணிட்டானோ ஆண்டவன்னு எப்பவுமே நெனச்சுப்பேன். அப்படி நெனச்சுகிட்டு அழுத நாட்களும் உண்டு. ஆனா, இப்பல்லாம் எனக்கு நீ ஒரு மகன், வாணியோட பொண்ணு ஷ்ரேயா ஒரு மகள்னு தான் நெனச்சிக்கறேன். போன மாசம் தான் வாணி கொழந்தையோட வந்துட்டுப் போனா", நீளமாகச் சொல்லிக்கொண்டே போனார். அவரின் மனநிலை குறித்து என் மனம் நெகிழ்வதை என்னால் உணர முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விருப்பு வெறுப்பு போன்ற உணர்வுகளுக்கு அர்த்தமேயில்லாமல் ஆக்கிவிடுகிறதே காலம் ! எல்லோரும் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியா இருக்கிறார்கள்? நினைக்க நினைக்க ஆச்சரியமாகக் கூட இருந்தது. இதிது இப்படியிப்படி நடக்கவேண்டும் என்று யாரோ கணிப்பொறியில் நிரல் செய்து வைத்தாற்போலத் தோன்றியது. தேர்வும் முடிவும் இல்லாத பாடம் தான் வாழ்க்கையோ ? !மனக்கசப்போடு வாழ்ந்த இரண்டு வருடகாலத்தைப் பற்றியும் பிரிந்து வாழ்ந்த ஒரு வருட காலத் தனிமை பற்றியும் அது வரையில் யாரிடமும் சொன்னதில்லை என்றார். அப்பாவின் குணம் தெரிந்தபிறகு கவனமாகத் தான் இருந்தாராம். ஆனால், "நடந்ததெல்லாம் நடந்தேவிட்டது", என்றார் பெருமூச்சுடன் ஆங்கிலத்தில். "என் பிள்ளையையும் கூட்டிகிட்டு வரவிடல்ல நீ", என்று இடித்துக் காட்ட ஆரம்பித்தாராம் இறக்குமுன் சில வருடங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'உன்னோட சுயநலத்துனாலதான் நீ அப்படி என்ன எம்பிள்ளை கிட்டயிருந்து என்னையப் பிரிச்சுட்ட', என்று சொன்னதும்தான் ஒரே விஷயத்தை எப்படி நேரத்துக்கு ஏற்றாற்போல, தன் மனநிலைக்கும், தன் செயலுக்கு உகந்ததாயும் மனிதமனம் பார்க்கிறது என்று புரிந்துகொண்டாராம். அவரோட குணம் தெரியவே வருடங்களாயிற்றாம். மனதிலிருந்தவற்றைச் சொல்லிக்கொண்டே போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று, "விஜய், அம்மாவுக்கு நாம ஏன் அக்யூபங்க்சர் ட்ரீட்மெண்ட் கொடுக்கக்கூடாது. எனக்கு ஒரு டாக்டரத் தெரியும். கெட்டிக்காரர். நாலே வாரத்துல குணமாக்கிடறாரு. நான் நாளைக்கே கூட்டிட்டுப் போறேன். நீயும் வா. போர்ட் மீட்டிங்கெல்லாம் நாளான்னிக்கிதான்னு சொல்லிடறேன்", என்று சொன்னதைக்கேட்டதுமே எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன விஜய், ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கற. நம்ம கம்பெனிய பார்த்துக்க சரியா ஆளு இல்லாம தவிச்சுகிட்டிருந்தேன், தெரியுமா? அது இனிமே உன் கம்பெனி. இனிமே நீயே பார்த்துக்கோ. என்ன?", என்று மீண்டும் கேட்டதும், "அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்குமான்னு,.", என்று இழுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மாவுக்கு கோபம் வரும். நியாயம் தானே. வரட்டும். அதுக்காக நான் சும்மா விட்டுட முடியுமா? இதச்செய்யத்தானா காத்துகிட்டிருந்தேன் இத்தன நாளா நான்....", சொல்லி முடிக்குமுன் விசும்பி அழ ஆரம்பித்தார். தற்மசங்கடமாகிவிட்டது எனக்கு.&lt;br /&gt;யாரோ வரும் ஓசை கேட்டது. "அழாதீங்க, ப்ளீஸ். யாரோ வராங்க", என்று சொன்னதும், கண்களைத் துடைத்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரசன்னா தான் வந்தான். "டேய் நந்தினி ஒன்னப் பார்க்கணும்றா. வரியா?", என்று கேட்டான் நுழைந்துகொண்டே. "ஆமா, நீங்க ஏன் ஆண்டி ஒரு மாதிரியா டல்லாயிட்டீங்க?", என்று கேட்டான் "ஒண்ணுமில்ல ப்ரசன்னா. இதோ முடிச்சுட்டோம். வா, நானும் நந்தினியப் பார்க்கணும்", என்றபடி கிளம்பினார். அறையைப் பூட்டிக்கொண்டு மூவரும் கீழேயிறங்கினோம். மாடிப்படியில் இறங்கிக்கொண்டே, "ப்ரசன்னா, விஜய் யாரு தெரியுமா? திவாகரோட பிள்ளை, என் பிள்ளன்னு சொல்ல ஆசதான். உன் ·ப்ரெண்டுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ", என்று சொன்னதுமே, ப்ரசன்னா,"டேய், நிஜமாவா?", என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ப்ரசன்னா, ·பங்க்ஷன் முடிஞ்சதுமே சீக்கிரம் கிளம்பிடுவோம் நாங்க. நெறைய பேசவேண்டியிருக்கு. விஜய் பொறுப்பையெல்லாம் எடுத்துகிட்டான்னா, எனக்கு பீபீகூட கொறஞ்சுடும்", என்று சொல்லிக்கொண்டே போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா என்ன சொல்லப்போகிறாளோ என்று லேசான பயம் வந்தது. எப்படியாவது கழற்றிவிட்டுவிட்டு தனியாகக் கிளம்பிவடலாமா என்று யோசிக்கத் தலைப்பட்டேன். அம்மாவுக்கு திடீரென்று அதிர்ச்சியைக் கொடுக்கக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. முதலில் பக்குவமாகச் சொல்லிவிட்டு, பிறகு கூட்டிக்கொண்டு போனால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் நீ எம் பீ ஏ படிக்கணும்னு ஆசப்பட்டியேடா. பேசாம மொதல்ல படியேன். அப்புறமா மிச்சத்தயெல்லாம் பார்த்துக்கலாம்", என்றான் ப்ரசன்னா என்னைப்பார்த்து. என் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்ளவில்லையே இவன் என்றிருந்தது எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ம், படிக்கலாம். நிர்வாகம் பண்ணிகிட்டே படிக்கட்டுமே", என்று ஒரு தீர்மானத்துடன் 'அனு ஆண்டி' சொன்னதுமே மீண்டும் என்னுடைய சிந்தனை சிறகு விரித்துப் பறந்தது. சிலவற்றைச் சொல்லிக்கொண்டே போனார். என்னைப் பார்க்கவே காத்திருந்தார் என்பது தெரிந்தது. அதில் என்னால் நேர்மையான அக்கறையைப் பார்க்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படிக்க எனக்கு ஆசைதான். ஆனால், அம்மா என்ன சொல்வாள்? அம்மாவை எப்படிச்சமாளிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தபோது என் மனம் சகஜ நிலைக்கு வந்திருந்தாற்போல உணர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடமாடும் நகைக்கடையாக நின்றிருந்தாள் நந்தினி. ஒரு நிச்சயதார்த்தத்தையே கிட்டத்தட்ட கல்யாணத்தைப் போல படாடோபமாக ஏற்பாடு செய்திருந்தார்கள். எதற்கு இவ்வளவு செலவு? காசிருந்தால் வெளிச்சம் போட்டுக் காட்டியே ஆகவேண்டுமோ? ! ஒருவேளை தங்களிடம் இருக்கும் கருப்பையெல்லாம் வெள்ளையாக்கக் கிடைக்கும் அரிய சந்தர்ப்பத்தை இத்தகைய செலவுகளால் செம்மையாகப் பயன்படுத்திக்கொள்கிறார்களோ ! பணக்காரர்களின் உலகமே வேறு தான் போல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிட்டு முடிக்கும்போது, "நாம வேணா நாளைக்கி அம்மாவோட பேசுவோமா,..?", என்று நான் மெதுவாகச்சொன்னதுமே, "நோ, நோ இந்த நாளுக்காகத்தான் நான் மூணு வருஷமா காத்திருந்தேன். உனக்கு எதுக்கு இவ்வளவு பயம்? அம்மா புரிஞ்சுப்பாங்க, வா நம்ம கார்லயே போயிடுவோம். நீ டிரைவ் பண்ணுவியோ", என்று கேட்டுக்கொண்டே கையைக் கழுவினார்.&lt;br /&gt;வாசலை நோக்கி விரைந்து நடந்தபடி, கைத்தொலைபேசியில் மானேஜருக்குபோன் செய்து, 'போர்ட் மீடிங்'கை இரண்டு நாட்கள் தள்ளி வைத்துவிடச்சொன்னார். நடந்துகொண்டே மீண்டும் அழுத்தினார் எண்களை. "லாயர் சார், சௌக்கியமா? நீங்க நாளைக்கி ·ப்ரீயா?ம்,.சரி, காலைல சொல்றேன். ஆமா, அர்ஜெண்ட் தான். விஜயபாஸ்கர் பேருக்கும் வில் எழுதி ரெடி பண்ணியிருந்தோம் இல்லையா, அதையும் எடுத்துகிட்டு வாங்க, ஓகே, பை", என்று சொல்லிக்கொண்டே ஓட்டுநர் இருக்கையில் ஏறினார் 'அனு ஆண்டி'.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;------------------(முற்றும்)----------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;----- ஜெயந்தி சங்கர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்கி - 05-03-06&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9687302-114154681775666026?l=jeyanthisankar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeyanthisankar.blogspot.com/feeds/114154681775666026/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9687302&amp;postID=114154681775666026&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/114154681775666026'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9687302/posts/default/114154681775666026'/><link rel='alternate' type='text/html' href='http://jeyanthisankar.blogspot.com/2006/03/blog-post_05.html' title='அப்பாவின் மனைவி (சிறுகதை)'/><author><name>ஜெயந்தி சங்கர்         (Jayanthi Sankar)</name><uri>http://www.blogger.com/profile/04533483437106248358</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9687302.post-113929372323858959</id><published>2006-02-07T14:18:00.000+08:00</published><updated>2006-02-14T19:14:39.970+08:00</updated><title type='text'>சந்திர ஆண்டு</title><content type='html'>உலக மக்கட்தொகையின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சந்திரஆண்டினைப் பின்பற்றுகின்றனர். இதில் சீனர்கள் தவிர, கொரிய ஜப்பானிய மக்களும் கூட அடங்குவர். சீனர்களின் சந்திரப் புத்தாண்டுப் பிறப்பு நமது தை மாத அமாவாசையன்று வரும். சீனப் பஞ்சாங்கத்தையும் நாட்காட்டியையும் வெகுநுணுக்கமாகக் கணக்கிட்டு உருவாக்கியது ஆடம் ஷால் (1591-1666) எனும் அக்கால அரசவை வானியல் வல்லுனர்.&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406857&amp;amp;sid=cmC48dxRY4" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4000 வருடப்பழமை கொண்டது சீன நாகரீகம். ஆகப் பழங்குடியான 'பீங்க் மனிதன்', இன்றைய பேய்ஞ்சின்கின் அருகில் சௌகௌட் என்ற இடத்தில் 600,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததற்கான குறிப்புகள் உண்டு. 10000 வருடத்திற்கு முந்தைய காலத்தின் குறிப்பேடுகள் நாடு முழுவதும் ஆங்காங்கே காணக்கிடைக்கின்றன.&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406850&amp;amp;sid=ioP68mtxK8" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் பஞ்சாங்கம் சந்திரனை அடிப்படையாகக் கொண்டபடியால், ஒவ்வொரு சந்திரமாதமும் அமாவாசையன்று தான் துவங்கும். ஆங்கில ஆண்டில் 'லீப்' ஆண்டில் நான்காண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் ஒரு நாளைச் சேர்த்துக்கொள்வதைப் போல, சில ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமாதம் ஒன்றைக் கூடுதலாகச் சேர்த்து அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் ஆங்கில வருடமும் சந்திரவருடமும் சமத்துவத்துக்கு வரமுடிகிறது. வழக்கத்தில் இருக்கும் ஆங்கில ஆண்டைவிட சந்திர ஆண்டு 11 நாட்கள் குறைவானது. ஏனென்றால், சந்திர மாதம் சுமார் 29.5 நாட்களை மட்டுமே கொண்டது. மொத்தம் வருடத்திற்கு 354 நாட்கள். ஒவ்வொரு வருடமும் முந்தைய வருடத்தைவிட சுமார் 11 நாட்கள் (சில சமயம் 9 அல்லது பத்து) முன்னதாகவே சீனப் புத்தாண்டு பிறக்கிறது. இதை ஈடுகட்டத்தான் 'லீப்' மாதத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அத்தகைய லீப் வருடங்களில் புத்தாண்டு கிட்டத்தட்ட 19 நாட்கள் தாமதமாகப் பிறக்கும். &lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406846&amp;amp;sid=iqL23ewxz2" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிராமமக்கள் கிழவனின் பரிந்துரைகளின்படியே நடந்தனர். நியான் வரவேயில்லை. அதற்காகத் தான் புத்தாண்டுக்கு முன் இரண்டு வாரமும் பின்னர் இரண்டு வாரமும் கோலாகலம் நீடிக்கிறது இன்றும். புத்தாண்டை 'குவோ நியான்' என்கிறார்கள், நியானைக் கடந்து என்று பொருள்பட. சிவப்பு அலங்காரங்களுக்கும், வெடியோசைக்கும் குறைவேயிருக்காது. சிங்க நடனம் ஆடும் குழுக்களை ஆங்காங்கே பதினைந்து நாட்களுக்குப் பார்க்கலாம். சிங்கத்தின் வாயிற்குள் இருப்பவன் தலையை திறந்து மூடியும், ஆட்டியபடியும் செல்வான். வண்ணமயமான கண்கொள்ளாக் காட்சி இந்த நடனம். பெரிய முரசு வகைத் தாள வாத்தியத்துக்கேற்றவாறு ஆடிக்கொண்டே உயரமான குச்சியின் மீதேறி உச்சியில் வைத்திருக்கும் பணப்பையை எடுக்கும் சாகசமும் நடத்துவார்கள்.&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406848&amp;amp;sid=kBK00cnGT7" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'சௌவாங்க்' என்பவர்தான் சமையலறைக் கடவுள். இவர் நெருப்பைக் கண்டுபிடித்தவர். வீட்டைவிட்டு கடைசி மாதத்தின் 23ஆம் நாள் மேலுலகம் சென்று அக்குடும்பத்தைப்பற்றி சொல்வார். அவர் கொடுக்கும் 'அறிக்கை'யை வைத்துதான் குடும்பத்தின் அடுத்த வருட செழுமை அமையும். ஆகவே, அவரைத் திருப்திப்படுத்தவும், மகிழ்விக்கவும் அச்சமயத்தில் முடிந்ததையெல்லாம் செய்வார்கள் மக்கள். அந்நாளில் இவருக்குப் பலவகையான உணவுவகைகள் படைக்கபடுகிறது. இவர் மீண்டும் புத்தாண்டின் முதல் நாள் குடும்பத்தில் வந்து இணைந்துகொள்வார்.&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406851&amp;amp;sid=fuP26irtV1" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தாண்டிற்கான ஏற்பாடுகள் எல்லாமே சந்திரவருடத்தின் கடைசி மாதத்தில் துவங்கும். எப்படியும் ஒரு புத்தாடையும் ஒரு புதுக்காலணியும் வாங்கப்படும். வசதியைப்பொருத்து அதிகமாகவோ, விலையுயர்ந்ததாகவோ வாங்குவார்கள். விதவிதமான பலகாரவகைகளும் சமைக்கப்படும். போகிக்கு முதல் நாள் நாம் செய்வதைப்போலவே, புத்தாண்டுக்கு முன்னர் சீனர்கள் பழைய பொருள்கள் முதலியவற்றைச் சுத்தம் செய்து குவித்து எரித்துவிடுவார்கள். இதற்கும் பஞ்சாங்கத்தின்படி நேரம் குறித்துத்தான் செய்கிறார்கள். இவ்வாறு சுத்தம் செய்தபின்னர் நாற்பத்தியெட்டு மணிநேரத்திற்கு வீட்டைக்கூட்டக்கூடாது. அப்படிச்செய்வது, அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் கூட்டிவிரட்டுவதாகும். அன்று முழுமையும் கூத்தும் கும்மாளமும் சிரிப்புமாக மகிழ்வுடன் இருப்பார்கள். புத்தாண்டை வரவேற்க 'லேண்டர்ன்' என்றறியப்படும் சிவப்பு விளக்குகளை வீட்டின்முன் பக்கம் தொங்க விடுவார்கள். சர்ப்பம்-சிங்க முகமூடி அணிந்து ஆடும் நடனம் மற்றும் பட்டாசுகளை கொளுத்தி மகிழ்வார்கள். வெடிகள் கொளுத்திக் கொண்டாடுவது தோஷங்களைக் களைவதற்கு. பெரும் ஓசைகளை எழுப்பினால் பேய்களும் துரதிர்ஷ்டமும் ஓடிவிடும் என்பது நம்பிக்கை. சிவப்புத் துணியில் கருப்பில் எழுதிய மங்கள வாசகங்கள் வீட்டு வாசலை அலங்கரிக்கும். சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் முதல் இரண்டுநாட்களும் பொதுவிடுமுறை. சிங்கப்பூரில் பொதுமக்கள் வெடிகள் கொளுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதால், மத்தாப்புகள் மட்டும் கொளுத்துகின்றனர். வெடிகொளுத்தும் ஆர்வமுள்ளவர்கள் இதற்காகவே மலேசியாவில் புத்தாண்டைக் கொண்டாடவென்று மூட்டைகட்டிக்கொண்டு கிளம்பிப்போவதுமுண்டு.&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406849&amp;amp;sid=dnE24gFLM6" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஸின்யென் தாவ் ஸின்யென் தாவ், தாவ் ஸின்யென் தாவ்ஸின்யென்' என்ற பாட்டுக்களை இவ்விழாக்காலங்களில் கேட்கமுடியும். 'மிகுந்த நலமுண்டாகட்டும்' என்னும் பொருளில், 'கொங்ஸீ ·பா ச்சாய்' என்று சொல்லி ஒருவர்க்கொருவர் வாழ்த்துச் சொல்லிக் கொள்வார்கள். புத்தாண்டிற்கு முதல் நாள் மாலை நெருங்கிய உறவினர் அனவரும் யாராவது ஒரு மூத்த குடும்ப உறுப்பினர் வீட்டில் கூடி விருந்துண்பார்கள். Reunion Dinner என்றறியப்படும் இவ்விருந்தில் வெளியார் கலந்துகொள்ள முடியாது. இரண்டாம் நாளன்று, மணமான பெண்கள் பெற்றோர் வீட்டிற்கு வருவார்கள். புதியதாக மணமானவர்களென்றால், நம்மூர் தலைத் தீபாவளி மாதிரி கணவருடனும், பரிசுப் பொருட்களுடனும் வரவேண்டும். வாங்கிய கடன்கள் அடைக்கப்படும். இன்றிரவு புத்தாண்டு பிறக்கும்போது வீட்டுக்கதவு, சாளரங்கள் திறந்து வைக்க வேண்டும். அப்போதுதான், பழைய வருடம் வெளியேறும்.&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406847&amp;amp;sid=ozF90bmtP1" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே குழந்தை பெற அனுமதிக்கப்படும் சீனாவின் குடும்பங்களில் திருமணமான இளம்தம்பதிகளுக்கு யார் வீட்டில் கொண்டாடுவது என்ற குழப்பம் வருகிறது. இருவருமே குடும்பத்தில் ஒரே பிள்ளை எனும்போது, இருவருக்கும் இருவரின் பெற்றோருடன் கொண்டாடும் ஒரே வழிதான். அவ்வாறே பெரும்பாலும் நடக்கிறது. ஒரே பிள்ளையோ பெண்ணோ தன் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் இருந்து விட்டால், இவர்கள் தனியே கொண்டாடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406843&amp;amp;sid=CVY15bjJW6" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிகமாக உணவுவகைகள் சமைக்கப்பட்டு, விருந்துக்குப் பிறகு நிறைய மீந்து போகவேண்டும் என்பது ஐதீகம். அப்போதுதான், வருடம் முழுவதும் செழிப்பாக அமையுமாம். முழுமையைக் குறிக்க தலை, வால் மற்றும் காலுடன் கோழி சமைக்கப்படுகிறது. பன்றியும் அப்படியே. நீண்ட ஆயுளுக்காக நூடில்ஸ் சமைக்கப்படும் போது துண்டு படக்கூடாது. ஆவியில் வெந்த அரிசிமாவில் செய்த கொழுக்கட்டை வகைகள் பிரபலம். சந்திரப்புத்தாண்டிற்கு சீனர்கள் ஒருவகை அரிசியிலிருந்து தனிவகை மதுவைத் தயாரிப்பார்கள். 'யீ ஷெங்' என்றறியப்படும் சமைக்காத மீன் சேர்க்கப்பட்ட சாலட் ஒன்று நிச்சயம் இருக்கும். எல்லோரும் சேர்ந்து சாப்ஸ்டிக்குகளால் இதை பிரட்டுவதால் ஐஸ்வரியங்கள் குவியும் என்று நம்பப்படுகிறது. சமையறையில் உள்ள பேழைகள், குளிர்ப்பதனப்பெட்டி முதலிவற்றில் நிறைய உணவுப்பொருட்களை சகட்டுமேனிக்கு வாங்கி அடுக்கிவைப்பார்கள். வீட்டின் வாயிலருகில் ஆரஞ்சுப்பழங்கள் அடங்கிய கூடை அல்லது பாத்திரம் வைத்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய தட்டுகளில் விதவிதமான இனிப்புப் பண்டங்களும், பருப்பு/கொட்டை வகைகளும் இருக்கும். பெரும்பாலும் எட்டு பகுதிகள் கொண்ட தட்டில், நிறைவையும் சுபிட்சத்தையும் காட்டும்படி எட்டு விதபக்ஷணங்கள் வைப்பது வழக்கம். சோயாவில் செய்யப்படும் புதிய தோ·பூ கவனமாகத் தவிர்க்கப்படும். ஏனென்றால், அதன் நிறம் மரணத்தையும் நோயையும் நினைவூட்டுகிறது. இனிப்புப் பூசனிமிட்டாய் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தைக் குறிக்கிறது. லைச்சி கொட்டை குடும்பத்திலுள்ள வலுவான உறவையும், தேங்காய் மிட்டாய் ஒற்றுமையையும், கடலைமிட்டாய் நீண்ட ஆயுளையும் குறிக்கிறது. கும்காட் மிட்டாய் தங்கம் மற்றும் செல்வத்தைக்கொணரும். லோங்கன் பலகாரம் ஆண்மக்களையும், தாமரை விதை நிறைய குழந்தைகளையும் கொடுக்கும் என்பது நம்பிக்கை. உலர்ந்ததோ·பூ மற்றும் மூங்கில் குறுத்து மகிழ்ச்சியையும் செல்வத்தையும், கிங்கோ கொட்டை வெள்ளி உலோகத்தையும், கருப்பு கடற்பாசி ஆரோக்கியத்தையும் கொணரும்.&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=jeyanthi_sankar&amp;pid=406854&amp;amp;sid=rCV32qsBO4" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதியபுதிய செடிவகைகளை வாங்கி வீட்டின் கிழக்குப் பகுதியில் வைப்பார்கள். அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என்று நம்பப்படும் செடிகளும், Feng Shui எனப்படும் சீனவாஸ்து சாத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் செடிகளும் புத்தாண்டு காலத்தில் வீட்டை அலங்கரிக்கும். மிகவும் அதிருஷ்டம் கொடுக்கக்கூடியதாகக் கருதப்படும் மாதுளம்செடிகளையும் தொட்டியில் வைத்தாவது வளர்ப்பார்கள். ஆரோக்கியத்தின் அறிகுறியான செந்நிறப் பூக்களும் வைக்கப்படும். பொன்னிற சிறுமணிகளை செடிகளிலும் நிலையிலும் புதிதாகக் கட்டுவார்கள். இவை நல்ல செய்திகளைத் தாங்கிவரும் என்பது நம்பிக்கை. புதிய நாட்காட்டிகளை வாங்கி மாட்டுவார்கள். பணப்பையில் பணத்தை நிரப்பி வைத்துக்கொள்வார்கள். சில்லறையாக மாற்றி கத்தைகத்தையாக திணித்துக்கொள்வார்கள். ஏழைகள், சிறுவர்கள், வேலையாட்கள் முதலியவர்களுக்கு சிறிய அளவிலாவது பணம் வைத்து 'அங் பாவ்' கொடுப்பார்கள். குருவிகளுக்கும் பறவைகளுக்கும் தானியங்களைப் போட்டுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூவுலகங்களிலும் உள்ள தெய்வங்களை வணங்குவது முதல் நாளில். அன்று சிலர் சைவம் மட்டும் உண்பதுண்டு. உற்றார் உறவினர் வீடுகளுக்குப் போய்வருவர். ஆரஞ்சுப்பழங்களை அதிருஷ்டம் மிகுந்ததாகக் கருதுகின்றனர். ஆகவேதான், பெரும்பாலும் சிறியவர்கள் பெரியவர்களின் வீட்டுக்குப்போய் இரண்டு ஆரஞ்சுப் பழங்களைக்கொடுத்து நல்வார்த்தை கூறி வாழ்த்துத் தெரிவிப்பர். ஆரங்சு அளவிலாத மகிழ்ச்சியின் சின்னம். இலையுடன் கூடியது கொடுப்பவர் மற்றும் பெறுபவரிடையே உள்ள உறவின் நிலைத் தன்மையையும், புதுமணத்தம்பதிகளுக்கு சந்ததிகளையும் குறிக்கும். பதிலுக்கு வாழ்த்தி, 'அங் பாவ்' எனப்படும் சிவப்பு உறைகளில் வசதிக்கு ஏற்ப பணம் வைத்துக் கொடுத்து வாழ்த்தி ஆசி வழங்குவர் பெரியவர்கள். சிவப்பு உறையில் கொடுக்கப்படும் பணத்தை சிறார்கள் எதிர்பார்த்திருப்பர். பெரும்பாலும் மணமானவர்கள் சிறார்களுக்கும் மணமாகாதவர்களுக்கும் தான் கொடுக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் நாளில் மூதாதையரை வணங்கி, அன்று நாய்களுக்கு தாராளமாக உணவிடுவர். மூன்றாம் நாள், எலிகள் தங்களின் மணமாகாத பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் நடத்தி வைக்கும் என்று ஒரு நம்பிக்கை. எனவே, அன்று சீக்கிரமே தூங்கப் போய்விடுவார்கள். மூன்றாம் மற்றும் நான்காம் நாள் மாப்பிள்ளைகள் மாமன் மாமியைச் சென்று வணங்கி ஆசி பெறுகிறார்கள். நான்காம் நாள், சமையலறைக் கடவுளுக்கு உணவுப் படையல்கள் வைப்பார்கள். வீட்டைக்கூட்டி சுத்தம் செய்தால், வாசலிலிருந்து உள் நோக்கிக்கூட்டித் தள்ளி வீட்டின் உள்ளறையில் குமித்து வைப்பர். ஐந்தாம் நாள் கழிந்தபிறகுதான் அக்குப்பையை அப்புறப்படுத்துவர். அதற்குள் வெளியில் கொண்டு கொட்டினால், வீட்டுன் அதிருஷ்டமும் ஐஸ்வரியமும் போய்விடும் என்பது நம்பிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தாம் நாள் செல்வதிற்கான கடவுள் 'போ வூ'வைத் தொழுகிறார்கள். அன்று யாரும் யார் வீட்டுக்கும் போவதில்லை. அப்படிப்போவது இருவருக்கும் துரதிருஷ்டம் என்பது நம்பிக்கை. ஐந்தாம் நாள், முதல் கட்ட கொண்டாட்டங்கள் முடிவுறும். இந்த முதல் ஐந்து நாட்களும், பேச்சிலும், நடத்தையிலும் மிகக் கவனமாக செயல்படுவாகள். வீட்டிலுள்ள செல்வங்களும், நல்வினைகளும் வெளியேறிவிடக் கூடாதென முதல் ஐந்து நாட்கள் வீட்டைக் கூட்டுவது, கெட்ட வார்த்தைகள், மரணத்தைப் பற்றிய பேசுவது தவிர்க்கப்படும். ஏதாவது பாண்டங்கள் கீழே விழுந்து உடைந்துவிட்டால், உடனே “இந்த வருடம் முழுவதும் சமாதானம் நிலவட்டும்” என்று வேகமாக கூறுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆறிலிருந்து பத்தாம் நாள் வரை நண்பர்கள், சொந்தங்களைக் கண்டு வருவர். ஆலயங்களுக்குச் சென்று ஆண்டு முழுவதற்குமான செல்வம், ஆரோக்கியம் வேண்டித் தொழுவதுமுண்டு. ஏழாம் நாள் விவாசாயிகளுக்கான தினம். இன்று மனிதனின் பிறந்தநாளும் ஆகும். இன்று வேளாண்தொழில் செய்வோர் பலவிதபானங்களைச் செய்து தங்களின் திறமையையும், அந்தஸ்தையும் காட்டுவர். இன்றுதான் பச்சை மீன் மற்றும் நூடில்ஸ் உண்கிறார். எட்டாம் நாள், மீண்டும் ஒன்று கூடி விருந்துண்டு களிக்கிறார்கள். நள்ளிரவில் தியேன் கோங் என்னும் கடவுளை வணங்குகிறார்கள். இது வழிபாட்டுக்குரியநாள். பெரும்பான்மையினர் இந்நாளில் சைவ அசைவ பதார்த்தங்களுடன், மது வகையும் சேர்த்து படையல்கள் வைக்கின்றனர். கடவுளையும் மூதாதையரையும் வணங்குவது வழக்கம்.ஒன்பதாவது நாள் பச்சைப்பவள அரசனுக்கான நாள் (Jade Emperor). அன்று படையல் விமரிசையாக இருக்கும். பத்திலிருந்து பனிரெண்டு வரை உற்றார் உறவினர்களை விருந்துக்கு அழைத்து உபசரிக்கிறார்கள். வரிசையாக விருந்துண்ட வயிற்றுக்கு இதமாக பதிமூன்றாம் நாள் பத்தியச் சாப்பாடு ச
